Saturday, December 1, 2007

நம்பினோர் கெடுவதில்லை

ஏப்ரல் மாதத்தின் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்பார்கள். பிரஞ்சுக்காரர்களிடமிரு;நது உலகிற்கு பரவிய இந்தப்பழக்கம் தேவையா? தேவைற்றதா? என்ற விவாதம் அறிவுலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அந்த நாள் நமக்குத் தருகிற ஒரு எச்சரிக்கை முக்கியமானது. யாரும் நம்மை ஏமாற்றி விடக்சுடாது, நாம் ஏமாந்து விடக் கூடாது என்ற என்ற எச்சரிக்கை அந்த நாள் முழுவதும் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும்.அந்த எச்சரிக்iயுணர்வை காலம் முழுவதும் கைகொண்டால் மட்டுமதான் ஒரு மனிதர் அவர் பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியும். இந்த எச்சரிகை;கை உணர்வு முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது. பெருமானார்(ஸல்) அவர்கள் 'ஒரு முஸ்லிம் ஒரே பொந்திலிலிருந்த இரு முறை தீண்டப்படக்கூடாது என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள் ஒரு விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டவை. ஒரு முறை விபத்து ஏற்பட்டால் அது எதார்த்தம். ஆதே விபத்து இரண்டாம் முறை ஏற்பட்டால் அது ஏமாளித்தனம். இந்த ஏமாளித்தனம் நமது வெற்றியை பறித்து விடக்கூடியது. எனவே ஏமாந்து விடக்கூடாது என்பதில் எப்பொதும் எச்சரிக்கையாக இலக்க வேண்டும். குறிப்பாக மார்க்க விசயத்தில் ஏமாந்துவிடக்கூடாது. மற்ற விசயங்களில் ஏமாந்துவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட மார்க்க விசயத்தில் ஏற்படுகிற ஏமாளித்தனம் அதிக பாதிப்பை தரக்கூடியது. எந்த ஒரு சிறுவிசயத்திலும் ஏமாற்த்திற்குள்ளாகதவாறு பாததுகாத்துக்கொள்ளத் தேவையான அறிவையும் அறிவுரைககளையும் இறைவனும் இறைத்தூதரும் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். தெளிவான மார்க்க அறிவை பெறுவதன்; மூலம் முஸ்லிம்கள் மார்க்கத்தல் ஏமாந்துவிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மதங்களுக்கும் அறிவு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள உறவு தூரத்து உறவு தான் என்ற சிந்தனை சமூகத்தில் நிலவிவருகிறது. அது மற்ற சமயங்களுக்கு பொருந்துமோ என்னவோ இஸ்லாத்திற்கு அறவே பொருந்தாது. இஸ்லாம் அறிவின் தளத்தில் இயங்கக் கூடிய சமயம். இஸ்லாம் கட்டளையிடும் வணக்கவழிபாடுகள் கூட அறிவு பெறுவதின் அடிப்படையிலேயே கடமையாகின்றன. ஒரு ஹிந்துவோ கிருத்துவரோ எந்த அறிவும் தெளிவும் பெறாமல் கோயிலக்கோ தேவாலயத்திற்கோ சென்று அவருடைய சமய வழிபாட்டை நிறைவேற்றிவிட முடியுமும். ஆனால் ஒரு முஸ்லிம் மார்க்கத்தின் எந்த ஒரு கடமையையும் அதைப் பற்றிய அறிவைப் பெறாமல் நிறைவேற்ற முடியாது. தொழுகை பல வகைப்பட்ட பாடங்களை கொண்டது. நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற மற்ற கடமைகளும் அப்படியே! ஓரு புத்தகம் நிநை;த விசயங்களை அறிந்து வைத்திருந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற முடியும். ஒருவர் இறைவணை வணங்கி வாழ்வதை மட்டுமே வாழ்கையாக கொண்டிருந்தால் அவரும் கூட அதற்கான பாடங்களைப்படித்து அறிவு பெற்றாக வேண்டும். எனவே அறிவு பெறுதல் என்பது இஸ்லாத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். தண்ணீரின் தரமும், காலஅளவும், தொழுகையின் ஒழுங்கும், தொழுகைக்கு முந்தைய ஒழுங்குகளப்பற்றிய தொளிவும் இருந்தால் மட்டுமே ஐவெளை தொழுகையை ஒரு முஸ்லிட் நிறைவேற்ற முடியும். ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு ஓரளவேனும் கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதற்கு சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. எவரையும் அணுகி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எந்த அடையாளத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. லாயிலாக இலல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹி என்ற கலிமாவை மனதால் நம்பி அதை நாவால் கூறி உறுதி செய்தால் போதுமானது. இஸ்லாத்தின் முதல் கடமையான கலிமாவை மொழிவது என்ற இந்த விசயம் கூட கலிமாவை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டபின்னரோ அர்த்தம் பெறும். எனவே தான் திருமறை அல்குர்ஆன் கலிமா சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. லாயிலாஹ இல்லல்ஹுவை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. ஒருவர் இஸ்லாத்தின் வாசலில் அடியெடுத்து வைக்கிற போதே அது அறிவு பெறுதலின் அடிப்படையில் அமைகிறது என்பதை இது புலப்படுத்துகிறது. அறிவு பெறுதல் அல்லது அறிவுவழி சாhந்து நடப்பது என்பது இறை நம்பிக்கைகு அடுத்த அம்சமாகும். மார்க்க நூல்கள் பலவற்றிலும் ஈமான் இநைவிசுவாசம் என்ற பாடத்திற்கு அடுத்தபடியாக இல்ம் கல்வியறிவு எனும் தலைப்பில் பாடம் அமைந்திருப்பதை காணலாம். திருக்குர்ஆனுக்கு அடுத்த மரியதைக்குரியதாக கருதப்படம் ஸஹீஹுல் புகாரி என்ற நபிமொழித் தொகுப்பிலும் மற்ற பல மார்க்க நூல்களிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் அறிவுக்கும் சிந்தனைக்கும் தரப்பட்ட இந்த முக்கியத்துவம் தான் முஸ்லிமகளை அறிவியலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சகல துறைகளிலம் அவர்கள் சாதனை கொடிகளை நாட்டினார்கள். அறிவியலின் மூலக்கூறுகளை உலகிற்கு அவர்களால் அடையாளம் காட்ட முடிந்தது. ஈமானுக்கு அடுத்து அறிவுபெறுவதற்கு முக்கியத்துவம் தரப்படடிருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் ஒன்று உண்டு. ஒருவர் அவரக்கு கிடைத்த அரிய செல்வமான ஈமானை சரியான அறிவு பெறுவதன் மூலமே பாதுகாக்க முடியும். ஓரு முஸ்லிம் போதுமான அறிவை பெற்றிராவிட்டால் சில சந்தாப்பங்களில் அவரை அறியாமலே அவரக்கு கிடைத்த ஈமானியச் செல்வத்தை இழக்க நேரிடும். ஓரு முஸ்லிம் மார்க்கத்தின் அடிப்படையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதைப்பற்றிய அறிவை அவர் வைத்திருப்பது அவசியம். ஆந்த அறிவை அவர் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் அவரது செயல்கள் வெற்றுச் சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மதிப்பிழந்துவிடும். முஸ்லிம்கள் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்ற வைப்பதற்கு எதற்காக என்ற விபரத்தை பலர் அறிந்து கொள்ளாததனால் அது சடங்காகிவிட்டது. ஒரு சிலர் அதையே வணக்கமாக தவறாக அர்தப்படுத்திக் கொள்கிற விபரீதம் ஏற்பட்டது. கடையை திறந்து வைத்ததும் நாகூர் தர்காவின் படத்திற்கு ஊதுபத்தி ஆராத்தி எடுக்கிற பழக்கம் சில முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றால் அந்த மாபாதகத்திற்கான முதல் காரணம் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்றவைக்கப்படவதின் காரணத்தை அறியாததே ஆகும். ஒரு நல்ல சபையில் வாசணையாக இருக்கட்டுமே என்ற அர்தத்திலே ஊதுபத்தி பற்றவைக்கப்படுகிறது. அதை தவிர அதற்கு மார்க்கத்தில் வேறு எந்த பொருளும் இல்லை என்பதை ஒரு முஸ்லிம் அறிந்து வைத்தால் கடையை திறந்ததும் ஊதுபத்தி பற்றவைப்பார். அது வாசணைக்காக. சாம்பிராணி புகை காட்டுவார் அது வாசணைக்காகவும் சுகாதாரத்திற்காகவுமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்ய முற்படும்போதும் இது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்ற விபரத்தை அறிந்து கொண்டால் மார்க்க விசயத்தில் ஏமாந்து போகாமல் இருக்கவும் கடமைககைள சரிவர நிறைவேற்றவும் முடியும். இஸ்லாம் அறிவுவழி சார்ந்த சமயம் எனும் போது அதில் மூடநம்பிக்கைளுக்கு இடமில்லை. எந்த ஒரு செயலும் அதற்குரிய நியாயம் அறிந்து செய்யப்படவேண்டும். மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளை ஒரு முஸ்லிம் நம்பினாலோ அல்லது மார்க்க அடிப்படையற்ற ஒரு செயலைச் செய்தாலோ அது முடநம்பிக்கையாகவும் மூடச்செயலாகவும் கருதப்படும். அப்படிச் செயல்படுவது ஈமானிய நம்பிக்கைகளை சிதைப்பதாகவும் இஸ்லாமிய விழுமியங்களை சீரழிப்பதாகவும் ஆகிவிடும். அதுமட்டுமல்ல நாம் ஏமாளியாகவும் நேரிடும். பெருமானார்(ஸல்)அவர்கள் மிகச்சரியான எச்சரிக்கைகளை தந்து சமதாயம் அர்த்தமற்ற கருத்துக்களிலும் பயனற்ற செயலகளிலும் ஏமாந்துவிடாமல் இருக்க தகுந்த எச்சரிக்கை களை செய்துள்ளார்கள். பெருமானார் (ஸல்)அவர்களுக்கு அவர்களுடைய 60 வது வயதில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இபுறாகீம் என்று பெயரிட்டார்கள். அந்தக்குழந்தை தோற்றத்தில் பெருமானாரைப்போலவே இருந்தது. நீண்ட காலததிற்குப்பிறகு பிறந்த அந்தக்குழந்த தன்னனைப்பெலவே இருந்ததில் பெருமானார் அதிகம் மகிழ்சியடைந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அந்தக்குழந்தையை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அது அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது. கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடும் அளவு அழுதார்கள். மதீனா நகரம் சேகததிலிருந்தது. அந்த நாளன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்கள் சிலர் பெருமனாரின் குழந்தை இறந்துவிட்ட துக்கத்தின் காரணமாகவே கிரகணம் ஏறபட்டது என்று பேசிக் கொண்டார்கள். இந்தச் செய்தி பெரமனாரின் காதுகளுக்கு எட்டியது. தனது சோகம் பெரிது தான் என்றாலும் சமுதாயம் தவறான நம்பிக்கையில் விழுந்துவிடுவது அதைவிடப் பெரிய சேகமாகிவடும் என்று கருதிய பெருமானாhர்(ஸல்)அவர்கள் தனது சோகத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு மனிதரின் இறபபுக்கு துக்கம் அனுஷ்டிப்பதற்காகவும் கிரகணங்கள் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் வல்லமைக் கான சான்றுகள் என்று சொல்லி மக்களின் சிந்தனையை மூடியிஐந்த திரையை அகற்றினார்கள். எத்தகைய ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து எண்ணிப்பார்த்து முஸ்லிம்கள் பெறுமையடையத்தகுந்த நிகழ்சி இது. அதே ரேத்தில் தனது புத்திர சோகத்தை மறந்து விட்டு நம்மை நலவழிப்படுத்தியவரின் தொண்டாக்ள என்ற வகையில் அந்த வழிகாட்டுதலை இறுக்கமாக பற்றிக்கொள்கிற கடமை முஸ்லிம்களுக்கு உணர்த்தும் நிகழ்சியாகவும் இது அமைகிறது. பெருமானாரின் வழி வந்த நபித்தோழர்களும் இத்தகைய விழிப்பணர்வை தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். உமர்(ரல) அவர்களின் காலத்தில் ஹுதைபிய்யாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தை முஸ்லிம்கள் அங்கு செல்வதையும் தொழுவதையும் புனிதமாக கருதினார்கள். ஹ}தைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் அந்த மரத்தினடியில் தான் பெரமானார்(ஸல்)அவர்கள் சஙாபாக்களிடம் பைஅத் பெற்றார்கள். அப்பொது தான் அம்மக்கள் குறித்து தான் திரபதியடைவதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அந்த மரம் இதுதான் என்று நினைத்து மக்கள் அங்கு சென்று கொண்nருந்தார்கள். உண்மையில் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட சஙாபாக்களால் கூட அந்த மரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் உமர் (ரலி) அந்த மரத்தை வெட்டி எறிந்தார்கள். மார்க்கத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விசயத்தை மக்கள் புனிதம் என்று கருதியது மிகவும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவே அந்த மரத்தை வெட்டி வீசினார்கள். ஹாபிழ் இப்னுகதீர் அவர்கள் தனது அல்பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகிற இன்னொரு செய்தியும் இங்கு நினைவு கூறத்தக்கது தான். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தை வெற்றி கொண்டு அந்த அன்னிய மக்களின் நகரங்களின் ஒன்றான புஃனா நகருக்குள் நுழைந்த போது அந்நகர மக்கள் அவரிடம் கூறினார்கள்:விசுhவாசிகளின் தலைவரே! இந்த நைல் நதிக்கு நாங்கள் வழக்கமாக செய்யும் ஒரு சடங்கு உண்டு! அது என்ன என்று அம்ர்(ரலி) கேட்ட போது அம்மக்கள் கூறினார்கள்: இம்மாதத்தின் பதினெட்டாம் இரவில் நாங்கள் ஒரு கன்னிப்பெண்ணை அணுகி அவளது பெற்றோரை சம்மதிக்க வைத்த பிறகு அவளுக்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த ஆடைகளையும் நகைகளையும் அணிவிப்போம் பிறகு அவளை இந்த நதியில் வீசி விடுவோம் என்றனர்.அதற்கு அம்ர்(ரலி) அவர்கள் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. முந்தைய கலாச்சாரத்தை இஸ்லாம் தகர்த்து விட்டது என்று கூறி அதை அதை மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் புஃனாவில் தங்கியிருந்தார்கள். நைல்நதி குறையவுமில்லை கூடவுமில்லை. ஒரு சமயம் நைல் நதியில் தண்ணீர் ஒடவில்லை. அதனால் அவர்கள் அங்கிருந்து கிளம்ப நினைத்ததார்கள் அப்போது அம்ர் (ரலி)உமர்(ரலி)அவர்களுக்கு இதுபற்றி கடிதம் எழதினார்;. அதற்கு உமர் (ரலி) நீர் சரியாகவே செயல்பட்டுள்ளீர். இந்தக்கடிதத்துடன் ஒரு ஓலையை வைத்துள்ளேன். அதை நைல்நதியில் போட்டு விடுவீர் என்று பதில் எழுதினார்கள்.அந்த ஓலையை அம்ர் (ரலி) திறந்து பார்த்த போது அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. இறைவனின் அடிமையும் விசுhவசிகளின் தலைவருமான உமரிடமிருந்து நைல்நதிக்கு.நீ உனது விருப்பப்படி ஓடுவதாக இருந்தல் ஓட வேண்டாம். அடக்கியாளும் சக்தி மிக்க ஏகனான அல்லாஹ்தான் உன்னை ஓட்டுவதானால் நாங்கள் அல்லாஹ்விடம் உன்னை ஓடச் செய்யுமாறு கோருகிறோம். அம்ர் (ரலி) அந்த ஓலையை நைல்நதியில் போட்டார். ஒரே இரவுக்குள்ளாக அந்த சனிக்கிழமை காலை நைல்நதியில் 16 முழம் நீரை அல்லாஹ் ஓடச் செய்தான். எகிப்து மக்களின் அப்பழக்கத்தை அல்லாஹ் இன்று வரை தடுத்துவிட்டான். இப்னு கதீர் (ரஹ்) குறிப்பிடும் இந்த வரலாறு பெருமானார்(ஸல்)அவர்கள் கட்டமைத்துத தந்த பாதையில் முஸ்லிம் சமுதாயம் தௌவிhன சிந்தனையோடும் வலுவான செயல்திட்டத்தோடும் செயல்பட்டதற்குமான ஒரு அடையாளமாகும். ஏந்த ஒரு செயலையும் மார்ககத்தின் கருத்தற்ந்து செயல்படும் போது செயல்படுகிற போது கிடைக்கிற நன்மையையும் நேர்வழியையும் இந்த வரலாறு மிகத்தெளிவாக எடுத்துரைககிற அதே சமயத்தில் அந்த தெளிவான இறைவிசுவாசத்தால் ஒரு வரலாற்றுத்தவறு தடுத்து நிறுத்தப்பட்ட நன்மையையும் படம்பிடிக்கிறது.மார்க்கத்தின் அடிப்படைகளைப்பற்றி தெளிவில்லாத நம்பிக்கைகளுக்கு சமுதாயம் ஆளாகிற போது அது சந்திக்கிற இழப்புகளும் நட்டங்களும் அதிகமாகிறது. ஓரு நண்பர் புதிய விடு கட்டினார். திறப்பு விழாவிற்கு எங்கிருந்தோ பச்சையும் பச்சையும் அணிந்திருக்ந ஒருவரை அழைத்துவந்தார். அவர் விடு முழுவதும் சாம்பிராணி புகையை படரவிட்டு ஏதேதோ பாட்டுக்களை பாடியபடி தன் இரண்டு கைகளையும் சந்தணக்கிண்ணத்தில் தோய்த்து சுவற்றில் ஆங்காகாங்கே தனது கை அடையாளத்தை பதித்தார் என்ற செய்தி என் காதுக்கு வந்தத. நான் சொன்னேன் அந்த நபரை அழைத்துவருவதற்கு செலவழித்த காசும் வீண். சுவற்றுக்கு அடித்த டிஸ்டெம்hரும் வீண். இவை எல்லாவற்றையும் விட பெரிய நஷ்டம் எது தெரியுமா? இப்படி செய்தால் அல்லாஹ் நனமையை தருவான் என்று அந்த நண்பர் நினைத்தால் அது தான் மிகப்பெரிய நஷ்டம்.மார்க்கத்தின் அடிப்படையில் நன்மை அல்லாததை நன்மையாக நினைப்பதும் தீமை அல்லாததை தீமையாக நினைப்பதும் மார்க்க விசயத்தில் ஏமாந்துபோவதாகவே அமையும்.முஸ்லிம் சமூகத்தில் அப்படி ஏமாந்து போனவர்களின் செய்திகளை தொகுந்தால் வலிமிகுந்த சுவையான ஒரு பெரிய புத்தகம் கிடைக்கும். பல அறிவாளிகளும் செல்வாக்குமிக்கவர்களும் கூட அந்த வலையில் அகப்படுவார்கள். இந்த முறை ஏப்ரல் மாதம் வரும் போது அந்தப் பட்டியலில் நம்முடைய பெயரும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வோம். ஓரு எச்சரிக்கைக்காகத்தன். நம்பினோர் கெடுவதில்லை.இது நான்கு மறை தீர்ப்பு என்பது நல்ல நம்பிக்ககைளுக்குத்தான். வானொலியில் ஒரு முறை கேட்ட கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.கடைவீதியில் ஒருவன் கூவினான் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நான்குமறை இதையே திருமப்த்திரும்ச் சொல்லி விட்டு ஐந்தாவவதாய் சொன்னாளன் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நாளைக்கே லட்சம் நமக்கு நிச்சயம். இந்த நம்பிக்கைக்கு யாரும் பொறுப்பல்ல.இறுதியாக இந்த இறைவசனத்தையும் நினைவில் வையுங்கள்.எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)

No comments: