Sunday, March 9, 2008

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.

ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.

இந்தியாவில் அன்று தேசிய விடுமுறை விடபப்டுகிறது. அடுத்த நாள் செய்த்தித் தாள்களில் முஹர்ரம் ஊர்வலங்களைப் பற்றிய செய்திகள் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். கத்தி போடுதலும் நெஞ்சில் அடித்துக் கொள்ளுதலும் விஷேசமாக காட்டப் படும். இந்த ஆண்டு வித்தியாசமாக முஹர்ரம் தீ மிதியை காட்டினார்கள். காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதையும், தடையை மீற முயன்றவர்களை ராணுவம் விரட்டுவதையும் கூட காட்டினார்கள்.

எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தேகம் இருந்த்து. நமது நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்புக்கு விடுமுறை இல்லை. முஹர்ரம் 10 க்கு மட்டும் லீவு விடுகிறார்களே ஏன்? ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா? அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில வருடங்கள் பிடித்தது. இந்த விடுமுறை நம்மைப் போன்ற முஸ்லிம்களுக்காக அல்ல. ஷியாக்களுக்காக விடப்பட்ட விடுமுறை இது.

அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக இன்னொரு ஒரு கேள்வி இருந்த்து. ஷியா என்றால் யார்? இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக? இந்தக் கேள்விக்கு அந்த வயதில் ஒரு விளக்கம் கிடைத்தது. ஷியா என்பவர்கள் அலியார் கூட்டத்தை சார்ந்தவர்கள். தங்களை முஸ்லிம் என்று நிரூபித்துக் கொள்வதற்காக இதை எல்லாம் செய்து காட்டுகிறார்கள் என்ற கருத்துக் கிடைத்தது. 

இது நக்கல் மிகுந்த ஒரு விமர்ச்சனம் என்பது எனக்கு பின்னாள் புரிந்த்தது. அப்போது அலி(ரலி)யாருக்கும் அவரது மகனும் பெருமானார்(ஸல்) அவர்களின் பேரருமான ஹுசைன் (ரலி) அவர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லை என்பதும்,அவர்களது பெயைர்ச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திய ஒரு பிரிவினர்களே இவர்கள் என்பதும் பின்னர் தெளிவாகிய விசயங்கள்.

அலி (ரலி) அவர்களது குடும்பத்தோடு மாத்திரமல்ல இஸ்லாத்தோடும் கூட அவர்களது தொடர்பு மிக மெலிதானதே! அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப் பட்ட ஒரு அரசியல் பிரிவாக வளரத் தொடங்கிய இவர்கள் காலப் போக்கில் ஒரு சமயப் பிரிவாக அடையாளம் காணப் பட்டாலும் சில மெல்லிய இழைகளே அவர்களயும் இஸ்லாம் என்ற சொல்லையும் பிணத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய சமய நம்பிக்கை களிலிருந்தும் அதன் வழிகாட்டுதல் களிலிர்ந்தும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள். முஹர்ரம் 10 ம் நாளன்று அவர்கள் செய்து காட்டுகிற வித்தைகளும் விபரீதங்களும் இதற்குச் சான்று

இஸ்லாத்தில் முதன் முதலாக தோன்றிய தீவிரவாதக் குழுவான காரிஜிய்யா எனப் படுவோரால் முஹம்மது (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள் அப்போது ஏற்பட்டஅனுதாபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஒரு குழுவினர் உருவாக்கிய தத்துவம் தான் ஷீஇய்யத் எனப்படும் ஷியா தத்துவம். அலி ரலி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன் ஹுசை (ரலி) அவர்கள் அரசியல் இடைத்தரகர்களின் கொடுஞ்செயலால் ஹிஜ்ரீ 61 ம் ஆண்டு முஹர்ரம் 10 ம் நாள் (கீ.பி .680 அக்டோபர் 10 ) இராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் படுகொலை செய்யப் பட்டார்கள். அப்போது ஏற்பட்ட் குழ்ப்பத்தை பயன்படுத்தி பெருமளவில் தங்களுக்கு ஆதரவை திரட்டிக் கொண்டார்கள் ஷியா தத்துவத்தின் உற்பத்தியாளர்கள். அந்த ஆதரவை தக்கவைக்கவும் தங்களது கொள்கைய நியாயப் படுத்திக் கொள்ளவும் ஆண்டுதோர்றும் முஹர்ரம் 10 இந்த வேடிக்கை விநோதத்தை அரங்கேற்றி வருகிறார்கள். 

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாத்தான். நடந்து விட்ட சோக நிகழ்வுக்காக அவர்கள் வருந்தினாலும் கூட மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரசியல் குறுமதியாளர்களின் சூழ்ச்சிக்குள் அவர்கள் பலியாக வில்லை. இத்தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள். இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வர்களுக்கு உதவியது.

ஆனால் ஹுசைன் (ரலி) அவர்களை தங்களது பிரச்சினையில் இழுத்து விட்டு பிறகு அவரை நட்டாற்றில் சிக்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டுப் போனவர்கள் தங்களது போலியான பற்றை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசிய்ல வளர்சிக்கும் இந்த வழிமுறையே சிறந்த்தது என்று இதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதனால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையு வழிகாட்டு தலையும் பறி கொடுத்தார்கள்.

முஹர்ரம் ஊர்வலங்களின் போதும் அதை தொடர்ந்து நடக்கிற நிகழ்சிகளின் போதும் நடக்கிற விசயங்கள் எதுவும் இஸ்லாமிய விழுமியங்களுக்கோ அதன் வழிகாட்டுத்லுக்கோ உடன்பாடனதோ ஒப்பானதோ அல்ல. மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று முழு உலக்மும் புரிந்து வைத்திருக்கிறதோ அதற்கு நேர் மாறானவை.

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் உத்திரவு என்பதும் அதே போல யாருடைய இறப்பிற்காக வும் ஓலமிட்டோ நெஞ்சில் அடித்துக் கொண்டோ சட்டையை கிழித்துக் கொண்டோ அழக்கூடது என்பது இஸ்லாமின் திட்டவட்டமான வழிகாட்டுதல் என்பதும் முழு உலகுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் தெருவில் உள்ள இந்துப் பாட்டிக்கு கூட யார் சாவுக்கும் முஸ்லிம்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என்பது தெரியும்.

இது விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் தெளிவானது.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும்(ஆணும்) ஒரு இறப்பிற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனை இழந்த பெண்ணைத்தவிர அவள் நான்கு மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ( ஸஹீஹுல் புகாரி 5334)
(துக்கத்தில்) கன்னத்திஅடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக்காலத்து ஒப்பாரி வைப்பவனும் நம்மாச் சார்ந்தவன் அல்ல. (( ஸஹீஹுல் புகாரி 1294)

துக்கத்தில் மொட்டை அடித்துக் கொள்பவனும், ஒப்பாரி வைப்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அபூதாவூது 2733)

இவர்கள் ஆண்டுதோரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு அழுகிறார்கள், ஒப்பாரிப் பாட்டு பாடுகிறார்கள். கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்கிறார்கள், உடலை கீறிக் கொள்கிறார்கள்.

ஹம்சா (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும், மகன் இபுறாகீம் (ரலி) அவர்களின் இறப்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள பெரிதும் பாத்தித்தவை. ஆனால் அதற்காக பெருமானார் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது முஸ்லிம் சமுதாயத்திற்கு அதைவிட்ப் பெரிய துக்கம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹஜ்ரத் அலி, ஹுசைன் (ரலி) போன்ற முஸ்லிம்கள் எவரும் ஒப்பாரி வைக்கவோ ஓலமிடவோ இல்லை. ஏன் இப்போது கூட ஷியாக்கள் பெருமானாருக்காக அழுவதில்லை. ஹுசைன் (ரலி) அவர்களுக்காக மட்டும் செய்யப்படுகிற இந்த ஆர்ப்பாட்டங்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புடையது அல்ல. நண்பர் சொன்னது போல குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ! 

காலப் போக்கில் ஷியாக்களில் பல பிரிவிகள் ஏற்படத்தொடங்கியது ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களைவிட வேகமாக இஸ்லாத்திலிருந்து அன்னியப் பட்டனர்.

பத்ரிக்கைகளுக்கும் மீடியக்களுக்கும் ஷியாக்களின் முஹர்ரம் கூத்துகள் வேடிக்கையாக இருப்பதால் இது போல ஒரு வேடிக்கை முஸ்லிம்களின் மற்ற விஷேசங்களில் இல்லை என்பதால் இதை பெரிதாகக் காட்டுகின்றன. இதன் காரணமாக்வே முஹர்ரம் ஊர்வலங்கள் பிரபலமடைந்தன.

முஹர்ரம் 10 நாளை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும், அன்றைய தினத்தில் நோன்பு நோற்கச் சொன்னதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் நோன்பிற்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் முஹர்ரம் 10 ஐ இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதை ஹீசைன் (ரலி) அவர்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தி புரிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பலரும் முஹர்ரம் 10 என்றதும் ஹுசைன் (ரலி) அவர்களையே நினைவு கூறுகின்றனர்.

எதேட்சையாக ஆஷூரா நாளன்றோ அல்லது அதற்கு சமீபத்தில் வருகிற வெள்ளிக்கிழ்மை அன்றோ ஜுமா உரை நிகழ்த்துகிற இமாம்கள் பலரும் கர்பலாவைப் பற்றிப் பேசுகின்றனர். 

கர்பலாவின் சோக நிகழ்வுகளும், அததிலிருந்து சமுதாய்ம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் சொல்லப் பட வேண்டியவை தான் என்றாலும் அது ஆஷூராவின் சிறப்பு குறித்து தவறான புரிதலை ஏற்ப் படுத்துவதால் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அல்லது இரண்டு விசயத்திற்கும் இடையே எந்த தொடர்புமில்லை என்பதை புரிய வைத்து விட்டு கர்பலாவைப் பற்றிப் பேசலாம். 

அதன் மூலம் இஸ்லாம் ஆஷூரா நாளன்று நோன்புக்கு உத்தரவிடப்பட்ட  பிறகு அறுபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் ஏற்ப்பட்ட  ஒரு பெரும் விபத்து என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.

இஸ்லாம் ஆஷூர நாளை சிறப்பித்துச் சொன்னதற்கான காரணம் வேறு. அன்று தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிவிட்டது அந்த வழியாக அவர்கள் பிர் அவ்னிடமிருந்து தப்பித்தார்கள். மனித சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் உரிய ஒரு விசயத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அன்றைய தினம் நோன்பு நோற்கும்படி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்
முஹம்மது (ஸல்) அவ்ர்கள் மதீனாவுக்கு வந்த போது அங்கிருந்த யூதர்கள் ஆஷூரா நாளன்று நோன்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை கேட்டார்கள். அதற்கு பதிலளித்த யூதர்கள் ஆஷூரா நாளில் தன் மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் பிர் அவ்னுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை அளித்தான் அந்நாளை கண்ணியப் படுத்த்வே தாங்கள நோன்பு நோற்பதாக கூறினர். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களையும் நோன்பு நோற்க உத்தரவிட்டார்கள்.

மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அழுத்த்மான காரணம் இருந்த்து.
மூஸா (அலை) அவர்கள் ஒரு நபி. இலட்சியவாதி. கொள்கையாளர்.
லட்சியவாதிகளுக்கு வாரிசுகளாக அவர்களது கொள்கையை கடைபிடிப்பவர்களும் அதை முன்னெடுத்துச் செல்பர்களும் தான் இருக்க முடியுமோ தவிர அவருடைய பிள்ளைகளோ குடும்பத்தினர்களோ அல்ல. தேசத் தந்தை காந்தி, ஒரு இலட்சியவாதி இந்திய மக்களின் முன்னோடி என்றால் அவரது உண்மையான வாரிசுகள் அவரது கொள்கை வழியை பின்பற்றுவோறே தவிர அவருடைய குடும்பத்தினர் அல்ல.குடும்பத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைக்கலாம். அவரது கொள்கை வழியில் செல்லாமல் அவருக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் காந்தீய வாதிகளுக்கு கிடைத்த் மரியாதை காந்தியின் சொந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை அல்லவா? அது போலத்தான் நபிமார்களுக்கும் அந்நபிமார்களது கொள்கையை பின்பற்றுபவர்கள் தான் வாரிசாக உரிமை கொண்டாட முடியும். (நபிமார்கள் சொத்துக்களுக்கு கூட அவர்களது சொந்தப் பிள்ளைகள் வாரிசுரிமை கோரமுடியாது. அது வேறு விசயம்.) அந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களது குடும்பத்தினர் என்ற அடிப்படயில் யூதர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனல் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்து கொடுத்த தவ்ராத்தின் நேரிய வழியிலிருந்து அவர்கள் வெகு தூரம் விலகிவந்து விட்டனர். முஹம்மது (ஸல்) அவர்களோ அந்த நபித்துவத்தின் தொடர்ச்சியாக அதே சத்திய நெறிய இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் போதித்து வந்தார்கள். முஸ்லிம்களோ அன்னாரது வழியை இழை பிசகாது கடைபிடித்து வந்தார்கள் என்வே தான் மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக அருகதை உடையவர்கள் என்று கூறிய முஹம்மது (ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்கும் படி உத்தர்விட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடமிர்ந்து முஸ்லிம்களின் நட்வடிக்கைய வேற்படுத்திக் காட்டுவதற்காக முஹர்ரம் 9 ம் நாளும் நோன்பு வைக்கச் சொன்னார்கள்.

மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.

மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.

கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.

இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.

மூஸா (அலை) காப்பாற்றப் பட்டார்கள் என்பத்தை மட்டுமல்ல் மனித வாழ்வின் செம்மையான போக்குக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை இந்நிகழ்சி தருகிறது என்பதையும் சேர்த்து எண்ணிப்பார்த்து நோன்பு வைத்தால் அந்த நோன்பின் அர்த்த பரிமாணம் கனமானதாக இருக்கும் கத்தி வீசும் காரியங்களை விட.

நல்லதொரு குடும்பம்

ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தருகிற விளக்கத்தின்படி துல் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில் உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான். அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.
சில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா? அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா? என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.
ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.
இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.
அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.
ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.
ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.
குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.
கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.
ஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.
தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.
அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.
அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.
குடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.
கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.
இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.
இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.
இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.
இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd! eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;> ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf! ,d;Dk;> gpd; tUk; kf;fspy; vdf;F eP ew;ngaiu vw;gLj;Jthahf! (26:84>) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.
ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?
ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.
இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.
ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.
ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.
நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.
எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)
பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.
ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.
மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.
மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.
இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.
உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.
ஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை - நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)
ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.
ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!
இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)
ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.
ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.
உங்களுக்கு?

இந்தத் தலைமுறையோடு

1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ளிவாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு வாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். சனிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்படுத்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர்? ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே! ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந்த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.மு.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.