Saturday, December 1, 2007

பள்ளித்தலமனைத்தும்...

ஜுன் 2 ம் தேதி அன்று தமிழகம் முழவதும் பள்ளிக்கூடங்கள் ஆண்டு விடுமுறைக்குப் பின் திறக்கின்றன. மேல்வகுப்பில் அடியெடுத்து வகிக்கிற மகிழ்ச்சியில் சிறுவர்களும், அவர்களுக்கு தேவையான வற்றை பார்த்துப்பார்த்து செய்கிற அக்கறையில் பெற்றோர்களும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிற முயற்சியில் கல்வி நிறுவனங்களுமாய் தமிழகம் கலைகட்டிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் பூக்கள் மலர்வதாக கேள்விப்படுகிறோம். நகரியச் சூழலில் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நாம் பார்க்கக் கிடைக்கிற மலர்ந்த பூக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தான். ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகே நின்று பள்ளிக்கூடம் தொடங்கும் அந்த அழகை ரசித்துப் பாருங்கள். அன்றைய நாள் முழுதுக்கும் மனதுக்குள் சந்தோஷ மழைச் சாரல் அடித்துக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியை மிகுந்த அக்கறையோடு உள்வாங்கிக் கொண்டு செயல்படுகிற கடமை முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் நமது பிரச்சினைகள் அனைத்தும் நாளை மாலைக்குள் தீர்ந்து விடும் என்று பிரச்சாரம் செய்ய நிறைய முஸ்லிம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். உண்மையில் நம்மை வாட்டுகிற பல பிரச்சினைகளுக்குமான தீர்வு, நமது முன்னேற்றத்திற்கும் கவுரவத்திற்குமான விடிவு, பள்ளிக்கூடங்களின் தலைவாசலில்தான் இருக்கிறது. எந்த ஒரு அரசியல்வாதியின் விரலிடுக்கிலுமில்லை. திட்டவட்டமாக நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய உண்மை இது.முஸலிம் சமுhயம் இப்பொதெல்லாம் எதற்கெடுத்தாலும் சலுகைகளையும் அனுதாபத்தையும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கிற சமுதாயமாக இருக்கிறது. அடுத்தவர்களின கரிசனத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சமுதாயம் என்ற நிலை மாற வேண்டுமாhல் நாம் நாடிச் செல்ல வேண்டிய இடம் உறுதியாக கல்விக் கூடங்கள் தான். ஊனமுற்றவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் அனுதாபத்திpற்குரியவர்கள். சரியான அக்கறையின்மையiயும் வழிகாட்டுதல் இனமையையும் தவிர நம் சமுதாயத்திற்கு வேறு எந்தக் குறையுமில்லை சலுகைகள் கிடைத்தால் அது தற்காலிக சிரமப்பரிகாரமாக அமையுமே தவிர சமுதாயத்தின் ஆற்றலையும் திறனையும் மேம்படுத்தக் கூடியதாக ஒரு போதும் அமையாது. நமது ஆற்லையும் செயலூக்கத்தையும் தரமாக உயர்த்திக் கொள்ளாதவரை உலக சமுதாயத்Nதூடு நம்மால் ஒரு போதும் போட்டி போட முடியாது. திருக்குர்ஆனின் 2.249 வசனம் உலகிலே வாழும் சிறுபான்மை சமுதாயங்கள் அனைத்தும் எப்போதும்நினைவில் வைத்திருக்க வேண்டிய வசனமாகும். ஆனால் பெறும்பாலும் அது பத்ருப்போர் நினைவு நிகழ்சிகளின் போது மட்டுமே அதிகமாக பேசப்படுகிறது. பாலஸ்தீனத்தை ஆக்ரமித்திருந்திருந்த ஜாலூத் (கோலியாத்) தின் பெரும் படையினரை தாலூத்தின் சிறு படை வெற்றி கண்ட விதத்தை பறைசாற்றும் போது அல்லாஹ் கூறுகிறான் :அல்லாஹ்வின் நாட்டப்படி பல சிறுபான்மைக் குழக்கள் பெரும்பான்மையினரை வெற்றி கொண்டுள்ளனர். இந்த வசன அமைப்பபை கவனித்துப்பார்த்தால் இது ஒரு நிகழ்சியை மட்டுNமு குறிப்பிடுகிற தத்துவமல்ல என்பதும் உலகில் பொதுவாக நடைபெற்றுவருகிற நிகழ்வைத்தான் இது வெளிப்படுத்துகிறது என்பதும் புலனாகும். உலகிலே யார் எங்கு சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஆறுதலையுமு; நம்பிகை;கை வெளிச்த்தையும் தருகிற வார்த்தைகள் இவை. சுpறுபான்மை பெரும்பான்iமினரை வெற்றி கொள்வதற்கு அல்லாஹ் சில வழிகளை வைத்திருக்கிறான். எந்த ஓரு சிறுபானமைச் சமுதாயமும் அது வாழ்கிற சூழ்நிலையில் சில பிரச்சினைகளை சந்தித்துத் தான் ஆக வேண்டியிரக்கும். அது யாராக இருந்தாலும் சரி. அத்தகைய சந்தர்ப்பங்களில் தனது முன்னேற்றத்திற்கான சரியான வழிகளை கண்டறிந்து திட்டவட்டடமான சில கோட்பாடுகளை பிடிவாதமாக பின்பற்றினால் அந்த சமுதாயம் நிச்சயமாக மரியாதையை பெற முடியும். ஏன் அப்பொது தான் அந்தச் சமுதாயம் வாழவே முடியும். இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்கு சிறந்த உதாரணம் யூதர்கள் தான். ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் எத்தகைய கேவலமான வாழ்கை அவர்களுடையது? நாடுநாடாக துறத்தப் பட்டார்கள். கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்பட்டார்கள். அவர்களோடு கைகுலுக்குவதற்கு உலகில் எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் எத்தகையது? பாரம்பரிய விவசாய தேசமமான இந்தியாவிற்கு அவர்கள் விவசாய வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். பாதுகாப்பிலும் ரானுவத்திற்கும் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை முஸ்லிம் நாடுகள் நேரடியாக இறக்குமதி செய்யாவிட்டாலும் இன்னொரு நாட்டின் வழியாக இறக்குமதி செய்கின்றன என்று பத்ரிகை தகவல் தெரிவிக்கிறது. மிகக்குட்டியான ஆக்கரமிக்கப்பட்ட தொரு தேசத்தில் வாழ்கிற அவர்களது கருத்து மதிப்பாக எடுத்துக் காட்டப் படுகிறது. இதற்குக் காரணம் என்ன? வெளிப்படையாக பேசும் போது அமெரிக்காவும் இங்கிலாந்தும் காட்டுகிற கரிசனம்தான் இத்தனைக்கும் காரணம் என்று நாம் சொல்லிவிடலாம் தான். உண்மையில் அந்தக் கிருத்துவ நாடுகளிடம் கூட அத்ததகைய மரியாதையை அவர்கள் பெறுவதற்கு காரணம் கல்வித்துறையில் யூதர்கள் காட்டிய அக்கறையுமு; அவர்கள் அடைந்த முன்னேற்றமுமே காரணமாகும். ஆமரிக்காவில் யூதர்ச் சிறுபான்மையினர் நடத்துகிற பள்ளிக்கூடங்கள் பல உண்டு. அவற்றில் யூதரல்லாத ஒரு மாணவன் வெற்றியடைய 35 சதவீத மதிப்பெண்கள் போதுமானது என்றால் ஓரு யூதன் வெற்றியடைவதற்கு 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை அவர்கள் வைத்திருப்பதாக மௌலானா வஹீதுத்தீன்கான் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய கடுமையான பயிற்சிகளின் விளைவாகவே யுதர்களில் பெரும் அறிஞர்களளும் விஞ்ஞானிகளும் தோன்றினார்கள். அதன் விளைவாகவே அவர்களை மதித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு மற்றவர்கள் ஆட்பட்டார்கள். நம்முடைய நாட்டிலே கூட கிருத்துவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்? கிருத்துவ சமுதாயம் கல்வியறிவு பெறுவதில் முன்னிலையில் இருக்கிறது என்பது தான். நமது நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கும் ஆபத்துகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக பெருவாரியான மக்களால் முன்மொழியப்பட்டார். அரசியல் பாரம்பரியமோ எப்படியாவது பெரும் பதவியை பிடித்துவிடவேண்டும் என்ற ஆவலோ இல்லாத ஒருவர் நாடடின் உயர்ந்த பொறுப்புக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கல்வியறிவு தானே அதற்கு காரணம்? சிறுபான்மை பெரும்பான்மைய வெற்றி கொள்வதற்கான வழியை அல்லாஹ் எப்படி அமைத்திருக்கிறான் பாருங்கள்? லாயிலாக இல்லல்லாஹ் கலிமாவை மொழிந்து விட்டால் முஸ்லிம்களுக்கு மறுமையில் வெற்றி கிட்டும் என்பது நிச்சயம் தான். ஆனால் இந்த உலகில் வெற்றி பெறுலதற்கான காரணிகளை அல்லாஹ் எல்லோருக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறான். ஒரு கிருத்துவனோ யூதவனோ வெற்றியடைவதற்கு என்ன காரணிகள் தேவையோ அதே காரணிகள் முஸ்லிம்கள் வெற்றி பெறவும் பொதுவாக தேவைப்படும். அந்தக்காரணிகள் சரியாக இல்லையெனில் முஸலிம்களுக்கு வெற்றி என்பது ஒரு அதிசயமான பொருளாக ஆகிவிடும். ஆதிகாலம் தொட்டு இன்று வரை எந்த ஒரு தனிமனிதனுடையவும் சமுதாயத்தினுடையவும் மலர்ச்சிக்கு கல்விதான் பிரதான காரணமாக இருக்கிறது. கல்வி பெற்ற சமுதாயமே நிறைந்த நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை திருக்குர்ஆன் மிக அழுத்தமாக போதித்துள்ளது. குர்ஆனைப்போல இவ்வளவு அழுத்தமாக இன்னொரு வேதம் போதித்திருககிறதா என்பது சந்தேகத்திற்குரியதாகும். எவர் கல்வியறிவு கொடுக்கப் பெற்றாரோ அவர் நிறைவான நன்மைனகள் கொடுக்கப்பட்டவிட்டார் என்று திருக்குர்ஆன் (2.269) கூறுகிறது.நம்மிடம் கைகட்டி சேவகம் செய்தவர்களெல்லாம் இன்று டை கட்டி ஏவல் செய்யும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். வியாபாரிகள் என்ற நிலையிலிருந்த முஸலிம் சமதாயம் சிறுவியாhபாரிகள் என்று நிலைக்கு சிறுத்துவிட்டது. உணர்ச்சி வசப்படுவதற்கு மட்டுமே நமது இளைய தலைமுறை பயிற்று விக்கப்பட்டிருக்கிறது. அதனால் கல்வியறிவின் தீட்சணயமும் தெளிவும் அதற்கு விலக்கப்பட்டவிட்டது. அதன் விளையாக இழிச் சொற்களையும் கடும் தண்டனைகளையும் அது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் சில முஸ்லிம் இளைஞர்கள் ஒரு வியாபாரத்திறகு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பேருந்தில்; மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒரு இளைஞர் தினசரிப்பத்ரிகையை வரித்து வைத்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். முஸ்லிம் இளைஞர் அவருக்கு அருகே உட்கார்ந்தார்கள். அதில் சிரமம் ஏற்பட்டது. சற்று தள்ளி அமருங்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர் கொஞ்சமாக நகர்ந்தார். இன்னும் சற்று தள்ளி அமருங்கள் என்று கேட்டனர். துலுக்கப் பயல்களுக்கு... என்று முனுமுனுத்தபடி அவர் நகர மறுத்தார். பிரச்சினை பெரிதாகிவிட்டது. அவர் சட்டையை பிடித்தார். முஸ்லிம் இளைஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள். உடனே கைத்தொலைபேசியில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அவர் அந்த இளைஞர்களை போலீஸில் சிக்கவைத்தார். சமாதானம் செய்து கொண்டிருந்தவுரும் போலீஸில் சிக்கினார். அவருடைய மனைவிக்கு மறு நாள் வளைகாப்பு நடக்க இருந்தது. போலீஸிற்கு சென்ற பிறகு தான் அடிபட்டவர் ஒரு வக்கில் என்பது தெரிந்தது. பொது இடத்தில் தகறாறு என்பது சாதாரணமான ஒரு 75 கேஸ் தான். காவல் நிலையத்திNலுயே ஜாமீன் பெற்று விட முடியும். மறு நாள் கோர்ட்டில் பைனை கட்டி விட்டால் போதுமானது. ஆனால் அந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார். எந்த விசேஷத்தை எடுத்துக் கூறிய போதும் அவர் செவி சாய்க்கவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு தான் ஜாமீன் கிடைத்தது. வக்கீலை அடித்துவிட்டார்கள் என்பது பெரிய விசயமாகிவிட்டது. வக்கீல் திட்டியதோ சச்ரவு செய்ததோ அரங்கிற்கே வரவில்லை.ஏனப்பா! போலீஸ் உங்களைப் பிடித்த போது அந்த ஆள் எங்களை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டினாhன் என்று நீங்களும் அவாருக் எதிராக ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கலாம் தானே என்று கேட்டேன். எங்களுக்கு அதுவெல்லாம் தோன்ற வில்லை என்று அந்த இளைஞர்கள் பதில் சொன்னார்கள். ஒரு சிறு தகறாறை 5 நாள் சிறையில் வைக்கும் ஒரு வழக்காக மர்றுவதற்கு அந்த வக்கீலுக்கு அவரயை கல்வி உதவியது. முஸ்லிம்களின் கலவியறிவின்மை வழக்கிற்கு காரணமானவன் நழுவிச்செல்வதற்கு வாய்ப்பளித்து விட்டது. நமது உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கும் நமக்கு ஏற்படுகிற தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கூட உரிய கல்வியறிவு இருந்தால் மட்டுNமு முடியும்.இல்nலை எனில் நமக்கேற்படுகிற சோதனைகள் தொடர்கதையாகிவிடும். நமது தலைமுறை தான் கல்விபெறுவதில் பின் தங்கிவிட்டது. நமக்கு அடுத்த தலைமுறை அந்த பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்றால் கல்pயறிவு விசயத்தில் நமது கவனிப்பு தீவிரமடைய வேண்டும். எத்தகைய தீpவிர கவனத்தை செலத்த வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் உண்டு. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒரு கிருத்துக் குடும்பம் டியூஷன் நடத்திக் கொண்டிருந்தது. முஸ்லம் மாணவர்களோடு அந்த வீட்டுப் பையனும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அந்த வாhத்தியாரின் மனைவி தன்னுடைய மகனை கண்டிக்கிறார். டேய் ஒழுங்கா படி. முஸ்லிம் பசங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழுச்சுக்குவாங்க! நீ நல்லா படிச்சாத்தான் உனக்கு சாப்பாடு என்று கண்டித்ததாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம் சொன்னார். எப்படி ஆர்வம் ஊட்டுகிறார்கள் பாருங்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியப்படத்தகுந்த அந்த ஆர்வம் தான் இப்பொது நமக்கு தேவைப்படுவது. புடிப்பு ஒன்று தான் தங்களை மேம்படுத்த முடியும் என்ற அந்த தீவிரச்சிந்தனை முஸ்லிம் சமுதாயத்திற்கு வர வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு அந்த உணர்வு ஊட்டப்பட பட வேண்டும்.நம்முயை வழிகாட்டி அருமைப் பெருமானார்(ஸல்) அவர்கள் கல்விப்பயணத்தை சொர்க்கத்திற்கான பயனம் என்று சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். கல்லிவயை தேடிய பாதையில் நடைபோடுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புதிது புதிதாக அறிவுத்துறைகள் வளர்ச்சியடைகிற போது அதை பாய்ந்துதோடிப் கற்றுக்கொள்ள வேண்டியது முஸ்லிம்களது பொறுப்பு என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஞானம்மிகுந்த சொற்கள் முஃமினகளிடமிருந்து தவறிப்போன பொருளாகும் அதை காணும் இடத்தில் எடுத்துக் கொள்ள அதிக உரிமை படைத்தவர்கள் அவர்களே! என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ( அறிவிப்பாளர் அபூஹுரைரா - நூல் திhமிதி 2611)கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிற சமயத்தின் சொந்தக்காரர்கள் கல்வி பெறுவதில் சுணங்கி நிற்பது எந்தவகையிலும் பொருத்தமாகாகது. மார்க்கத்தின் வழிகாட்டுதலை முறையாகப் பயன்படுத்திய காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அறிவுத்துறைகள் அத்தனையிலும் உலகிற்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். வானியல் தொடங்கி வரலாறு வரைக்கும் அனைத்து துறைகளிலும் முன்னோடிகள் மூல ஆசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களது கண்டுபிடிப்புகளே இன்iறைய நாகரீக உலகத்திற்கு அடித்தளமிட்டது என்பது கலப்படமற்ற உண்மையாகும். இன்று வாழ்கிற முஸ்லிம் மாணவச் சமுதாயம் தனது முன்னோடிகளை நினைவில் நிறுத்திக் கொண்டு நாம் எத்தகைய உயர்ந்த பாரம்பரியத்தின சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தோடு நாளைய எதிர்காலததிற்கான உயர்ந்த இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்;. அதை உருவாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.பள்ளிக் கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பும் போது ஏதோ நான்கு எழுத்து படித்துவிட்டு வரட்டும் என்ற அலட்சிய பாவத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது. ஒரு கட்டிடத்திற்கான அடித்தளத்தை அமைக்கும அக்கறையை அதில் காட்டவேண்டும். பிள்ளைகளை அவர்களது தகுதிக்கு மீறி சிரமப்படுத்தக் கூடாது என்கிற அதே நேரத்தில் கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகில் சிறக்க முடியும் என்ற மனோபவாத்தை நமது சிறுவர்களிடம் பதிக்க வேண்டும்.முஸ்லிம் ஜமாத்ததுக்கள் தங்களது மஹல்லாவிற்குட்பட்ட மக்களில் கல்வி இடை முறிவு ஏற்படாதவாறு பாhத்துக்கொள்வது இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு செய்கிற பேருதுவியாக இருககும். அதே போல வசதிவாய்பபு படைத்தவர்கள் ஒவ்வொரு வரும் தமது குடும்பத்தில் அத்தகைய இடை முறிப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது காலம் கருதிச் செய்த சிறந்த தர்மமாக அமையும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நட்டல் அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் எனும் செய்யுளுக் கேற்பச் செயல்படுவது இன்றைய சூழலில் பொருத்தமானது. பள்ளிவாசல் ஜமாத்துகள் மக்தப் மதரஸாக்களுடன் சேர்த்து ஆங்கிலம் ஆறிவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளுக்கு டுயூசன் ஏற்பாடு செய்வது அடுதத தலைமுறைக்கு மிகப் பயனள்ளதாக இருக்கும். மாநகராட்சி பள்ளிகளில் மட்டுமே படிக்க முடிந்த மாணவர்களை கைதூக்கி விடுவதாக அமையும். இப்போது சுறுசுறுப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிற இளைஞர்கள் பலர் கொஞ்சமாவது ஆங்கிலம் படித்திருந்தால் இன்னும் சிறப்பாக முன்னேறியிருக்கலாமே என்று ஆதங்கப்படுவதை அனுபவத்தில் பார்க்கிறோம். தலைவராவதற்கு முன்னால் கற்றுக்கொள்ளுங்கள் (த அல்லமூ கப்ல அன் தஸவ்வதூ) என்ற ஹஜ்ரத் உமர் (ரல) அவர்களின் எச்சரிக்கையை (புகாரீ) நாம் மறந்து விட்டது அந்தச் சமயங்களில் நினைவுக்கு வருகிறது.பெண்களுக்கு உயர்கல்வி கற்பிப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது. அவர்களையும் உயர் கல்வி பெற வைப்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையபகும்.கல்வி யறிவு பெறுவதில் பெண்களை தடை செய்வது குழந்தைகளுக்கிடையே போதம் பாராட்டுகிற பாவமான காரியமாகும். அவ்வாறு பேதம் பாராட்டுலதை மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை பெற்றோர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழலில் திருமணத்திற்கு பெண்பார்க்கும் போது படித்த பெண்கள் வேண்டும் என்று கேட்கப்படுகிறது. வேலைக்கு செல்லத் தேவையில்லை என்றாலும் தாம் பெற்ற குழந்தகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதற்காகவேனும் பெண்கள் படித்திருக்கிற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கிய விசயமுமு; கவனிக்கத்தக்கதாகும்.நமது மாணவர்களுக்கு சலுகைகளை காட்டி நம்பிக்கைகயூட்டுவதை விட அவர்கள் பொதுவில் போட்டி போடத்தக்க முயற்சியயை மேற்கொள்ள ஊக்கம் தருவதும் உற்சாகப்படுத்த வேண்டும் கல்வித்துறையிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது நமது உரிமைக் கோரிக்கையாக இருக்கலாம் ஆனால் பொதுவில் போட்டி போடத் தேவையான அளவு நமது மாணவர்களின் கல்வித்தறனை வளர்ச்சியயடைய வைப்பது தான் நமது சரியான வெற்றியை உறுதி செய்யும்.பள்ளிக் கூடங்களின் திறப்பை செர்க்கவாசலின் திறப்பாக கருத வேண்டிய கடமை முஸ்லிம்களுடையது. அது அவர்களுடைய மறுமை பேற்றை மட்டுமல்ல இம்மைப் பேற்றையும் வளப்படுத்தும். கல்வித்துறையில் காட்டுகிற ஈடபாடுதான் நாளைய நமது எதிர்காலத்தின் மரியாதையை திர்;மாணிக்கப்போகிறது.

No comments: