Saturday, December 1, 2007

எம் தந்தையர் ..

கவிக்கோ அப்துல் ரகுமான் அமெரிக்காவுக்கு போய்விட்டு வந்த பிறகு தனக்கு அதிhச்சியளித்த ஒரு அனுபவத்தை சொன்னார்: ஒரு தமிழ் இலக்கிய சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருக்கிறார்கள். அந்த அரங்கிற்;குப் போன போது அது ஒரு சர்ச்சின் தோற்றத்தில் இருந்திருக்கிறது. இது என்ன கட்டடம் என்று கேட்டிருக்கிறார். முன்னாள் சர்ச்சாக இருந்தது இப்போது அதை வாடகைக்கு விடுகிறார்கள் என்று பதில் கிடைத்திருக்கிறது. இன்னொரு முறை ஒரு கோயிலில் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் அங்கு போனபோது அதுவும் ஒரு சர்ச்சினுடைய தோற்றத்தில் இருந்திருக்கிறது. சர்ச்சிலேயே கோயிலா என வியந்து கேட்டிருக்கிறார் ஆமாம் சர்ச்சை விலைக்கு விற்றார்கள் நாங்கள் வாங்கி அதை கோயிலாக மாற்றி விட்டோம் என்று அங்குள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள். சர்ச்சுகளுக்கு வருவோர் இல்லாத காரணத்தால் நிறைய சர்ச்சுகள் வாடகைக்கு விடப்படவும் விற்பனை செய்யப்படவுமான ஒரு சூழ்நிலை அஙகு நிலவுவதாக அவர் குறிப்ப்ட்டார். புதிய அறிவியல் தத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிருத்து மதகுருமார்கள் மதத்தின பெயரால் அவற்றை நிராகரித்தார்கள்;. விஞ்ஞானிகளுக்கு தண்டனை கூறி தீர்ப்பளித்தார்கள். கிருத்துவ திருச்சபைகள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட கருத்துக்களுக்காக அறிவியவோடு முரண்பட்டதனால் தான் இப்படி ஒரு நிலமை ஏற்படடது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்ற தாலமியின் கருத்துக்ககளையே உலக மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். கோபர் நிகஸ் (1473 - 1543) என்ற வான் ஆய்வாளர் முதன் முதலாக இதை மறுத்து பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது என்ற கருத்தை ழn வாந சநஎநடயவழைn ழக வாந hநயஎநடெல டிழனநைள என்ற தலைப்பில் ஒரு நூலாக எழுதினார். திருச்சபை அதை எதிர்த்தது. தேவ குமாரனான இயேசு பிறந்த இடம் தான் உலகின் மையப்புள்ளியாக இருக்க முடியும் சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றி வருவதுதான் பொருத்தமானது பூமி இன்னொன்றை சுற்றுவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் மறுத்தார்கள். அது மட்டுமல்ல பூமக்கு மேலே சொர்க்கம் இருப்பதாகவும் பூமிக்கு கீழே நரகம் இருப்பதாகவும் சொர்க்கத்தில் தான் நட்சத்திரங்கள் பதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிவந்திருந்தனர். கோபர் நிகஸின்; தத்துவம் அதற்கு முரண்படவே புதிய அறிவியல் கண்டுபிடிப்பை அவர்கள் நிராகரித்தனர். அதனால் அந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. வான் ஆய்வாளர் கலீலீயோ இன்னும் சில ஆய்வுகளின் அடிப்படையில் அந்தத்தத்துவத்தை திரும்பக் கூறிய போது அவருக்கு திருச்சபை மரண தண்டனை விதித்தது. ஒரு உண்மையை சொன்னதற்காக ஏன் உயிரை விட வேண்டும் என்ற சிந்தனையில் அப்போது கலீலியோ மன்னிப்கேட்டு தப்பித்தார்.நீ வேதனையில் குழந்தையை பெற்றெடுப்பாய் என்ற பைபளின் வாசகத்தை மேற்கோள் காட்டி பிரசவ சமயத்தில் வலியை குறைக்க மருந்து தருவதற்கு திருச்சபை எதிர்ப்பு தெரிவித்தது. அறுவை சிகிட்சை முறை அமல்படுத்தப்பட்ட போது அதையும் திருச்சபை எதிர்த்தது.இவ்வாறு திருச்சபை அறிவியலுக்கு முரண்படும்போது ஆரம்பத்தில் திருச்சபையின் கருத்துக்களுக்கு கட்டுப்பட்டிருந்த மக்கள் விஞ்ஞான ஆய்வுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க்படட்ட சூழ்நிலையில் மதத்தை ஒதுக்கி வைத்து விட்டு விஞ்ஞானத்தின் வாசலை சரனனடைந்தனர். அதன் பிறகு அறிவியலே அங்கு மதமாகிவிட்டது. சமயம் என்பது வெறும் அடையாளமாகிப் போனது. சமயத்தின் தீவிரப் பற்றாளர் கூட அறிவியலுக்கு அடுத்தபடியாகததான் மத நம்பிக்கைகக்கு இடமளிக்கிறார். சற்று அழுத்தமாக சொல்வதானால் ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சி என்பது என்பது நடைமுறையில் இருந்த கிருத்துவத்தை உடைத்த பின்னரே தலை நிமிர்ந்தது.இந்த விபத்து முஸ்லிம்களில் ஏற்படவில்லை. காரணம் முஸ்லிம்கள் இஸ்லாத்தின வழியாகவே அறிவியலைப் பெற்றனர். இஸ்லாமும் முஸ்லிம் அறிஞர்;களும் விஞ்ஞானத்தின் வரவேற்பாளர்களாக இருந்தார்களே அன்றி எதிர்பார்ப்பாளர்களாக இருக்க வில்லை. ராஜி போன்ற பல முஸ்லிம் சமய அறிஞர்களே விஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தார்கள். முஸ்லிம்களின் வேதமே புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாசலை திறந்து விட்டது. சமயங்களும் வேதங்களும் பொதுவாக நம்பிக்கையை பற்றியும் இறைவழி பாட்டை பற்றியுமே பேசுபவை என்றால் இஸ்லாமும் திருக்குர்ஆனும் அதிலிருந்து வேறுபட்டு மனிதனை சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் தூண்டின. அதற்கு காரணம் இருந்தது. ஏனெனில் சரியான சிந்தனை தான் மனிதனுக்கு தெளிவான உறுதியான பகத்தயை தர முடியும் என்று இஸ்லாம் கருதகிறது. அண்டங்களை ஆராய்ச்சி செய்து முதிர்ந்து தெளிந்த ஒருவர் இவை அத்தனைக்கும் பிறகு இவற்றை ஒழுங்காக அமைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வருகிற போது அவரது இறை நம்பிகை;ககை வலுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும். அவருடய பணிதல் அர்த்தமுள்ளதாகவும் அழுத்தமானதாகவும் இருக்கும். இத்தைகயை பணிதலையும் இத்தகைய கட்டுப்பாட்டையுமே இஸ்லாம் எதிர்பார்க்கிறது. இஸ்லாத்தின் இந்த எண்ண ஓட்டத்தை திருக்குர்ஆpன் 3:191 வசனம் புலப்படுத்துகிறது. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கும் அவர்கள் ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'' என்று கூறுவர். (3:191)இறைவனை வழிபடுவதோ இறை மார்க்கத்தை பின்பற்றுவதோ எந்த யோசனையும் இன்றி கன்மூடித்தனமாக நடைபெறுவதை இஸ்லாம் விரும்பவில்லை. திருக்குர் ஆன் கூறுகிறது. அவர்களிடம் இறைவனுடைய வசனங்கள் கூறப்பட்டால்;, செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) 25:73 எனவே சகலத்தையும் பற்றி சிநத்திக்க குர்ஆன் உத்தரவிட்டது. வானம் பூமி இரவு பகல் ஒட்டகம் மலை மணற்பரப்பு கடல் கப்பல் காற்று என அரபியாரின் வாழ்வுக்கு மிக நெருக்கமான அனைத்து விசயங்களையும் எடத்துக் கூறி அவை பற்றிச் சிந்திக்குமாறு இறைவன் உத்தரவிட்டான். அதன் பயனாக அறிவுலகத்திலிருந்து வெகுதூரம் விலகி இருந்த அரபுகள் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் ஆரம்பித்தார்கள். இறை நம்பிக்கையில் தெளிவும் உறுதியும் பெற்றார்கள். நிறைய புதிய விசயங்களை கண்டு பிடித்தார்கள். நல்ல அறிவுக்கு கருத்துக்கள் உலகில் எங்கு கிடைத்த போதும் அதை தங்கள் இடத்திற்கு கொண்டு தங்களது மொழியில் அதற்கு உருக்கொடுத்தார்கள். அதில் தங்களுடைய பங்களிப்பை இணைத்து அவர்கள் கடந்து சென்ற உலகுக்கெல்லாம் அவற்றை காணிக்கையாக வழங்கினார்கள். திருக்குர்ஆனின் வெளிச்சப்பாதையில் நடைபோட்ட முஸ்லிம் சமுதாயம் அறிவுலகில் சுடர்விட்டு பிரகாசித்தது. நவீன உலகை கட்டமைத்த சிற்பிகள் முஸ்லிம்களின் முன்னோர்கள். அவர்களின் அறிவுக் கொடைகளின் விளைவாகவே உலகம் வெளிச்சம் பெற்றது. அன்றை விஞ்ஞானத்தின் அத்துனை துறைகளிலும் அவர்களே உலகின் ஞான ஆசியரிர்களாக திகழ்ந்தார்கள். இன்றைய இளைய சமுதாயம் முஸ்லிம் முன்னோடிகளின் அரிய சாதனைகளை கேள்விப்படுகிற போது அது அவர்களுக்கு கற்பனையோ என்று தோன்றலாம். ஆனால் அவை கலப்படமற்ற சத்தியங்கள். சுpறந்த கல்வியை தேடுவோர் இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவிற்கும் படைஎடுக்கலாம். ஒரு காலம் இருந்தது. சிறந்த கல்வி வேண்டும் என்போர் முஸ்லிம்களின் பக்தாதுக்கும் கார்டோவாவுக்கும் தான் பயணம் சென்றார்கள். அங்கு தான் அவர்கள் நிபுணர்களாக முடியும் என்ற நிலமை இருந்தது. இன்று ஐரோப்பாவும் அங்குள்ள கிருத்துவர்களும் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஒரு காலம் இருந்தது. அப்பொது ஐரோப்பிய கிருத்துவர்கள் மருத்துவம் படிப்பபதையும் மருத்தவம் பார்ப்பதையும் கடவுளோடு போட்டியிடும் செயலாக கருதி அதை வெறுத்தார்கள். யயெவழஅல உடலியல் ஆய்வு இழிவானதாக கருதப்பட்டது. அப்போது பெரும்பாலும் யூதர்களே ஐரோப்பாவின் மருத்துவர்களாக இருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் மருத்துவ்கல்லூரிகளில் கல்வி பயின்றவர்களே! இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றின் தனி மருத்துவராக இருந்த புட்ரஸ் அல் போன்ஸி ஸ்பொயின் முஸ்லிம்களிடம் மருத்துவம் பயின்றவராவார். அவிசென்னா என்று மருவிப்போன அலி பின் சீனா தான் மருத்துவ உலகின் பிதாமகராக கரதப்படுகிறார். ஆவர் எழுதிய அல் கானூன் பித் திப்பு என்று நூல் 15 ம் நூற்றாண்டிலேடீய 16 பதிப்புகள் வெளியிடப்பட்டடிருக்கிறது. வைசூரி மற்றும் தட்டம்மை நோய் பற்றி ஆராய்ந்து முதலில் நூல் எழுதியவர் அர் ராஜி ஆவர். அவர் எழுதிய அல் ஜுத்ரி வர் ஹஸ்பா என்ற அரபு நூல்தான் இந்நோய் பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.1565 ஆண்டு இந்நூல் வெனிஸ் நகரில் லத்தீன மொழியில் மொழிபெயர்க்கப்ட்ட பிறகு இந்நூல் ஐரோப்பா மழுவதும் பரவியுள்ளது. இந்நூலை படித்த பிறகுதான் எட்வெர்ட் ஜென்னர் அம்மைக் கான தடுப்பூசியை அம்மை குத்துததலை பற்றி ஆய்வு செய்தார் என வரலாறு சொல்கிறது. இந்நோய்களை கடவுளின் சாபம் என்று ஐரோப்பா கருதிய காலகட்டத்தில் எந்த ஒரு நோயுக்கும் மருந்துண்டு; என்ற பெருமானார்(ஸல்) அவர்களின் பொன் மொழி (முஸ்லிம் 4084) இமாம் ராஜியை இது பற்றி ஆராயத்தூண்டியது.சிறந்த மருத்துவம் வேண்டும் என்போர் நாடிச் செல்லும் நகராக அன்றைய பக்தாத் திகழ்ந்தது. பீமாரிஸ்தான் என்ற பெயரில் நூற்றுக்கணக்காகன படுக்கை வசிதி கொண்ட மருத்துவமனைகள் 10 ம்நூற்றாண்டில் பக்தாதில் அமைந்திருந்திருந்தன. அப்பாஸிய கலீபா அல் முக்ததரிர் மருத்தர்களுக்கு சான்றளிக்கும் நடைமுறையை துவங்கினார். அரசாங்கம் வழங்கும் தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மட்டுடே மருத்துவம் பார்க்க அனுமதிக்பபடுவர் என்று அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் விளைவாக 860 மருத்துவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதனால் உலகில் போலி மருத்துவர்கள் இல்லாத முதல் நகரமாக பக்தாது நகரம் விளங்கியது என்று வரலாற்று போற்றுகிறது. இன்றைய கால கட்டத்தில் மருத்துவர்கள் அரசிதழ் பதிவு பெற்றவர் அதிகாரியாக (கெஸட்ட் ஆபீஸர்) கருதப்படுகிறார். இந்த நடைமுறையை உலகிற்கு அறிமகப்படுத்தியவர் முஸ்லிம் மன்னர் கலீபா அல்முகததரி;தான் எனபதை வரலாறு தனது ஞாபகத்தில் பதித்து வைத்திருக்கிறது. நுஒpநசiஅநவெயட அநவாழன எனப்படும் ஆய்வு நடைமுறையை ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் பேகன் (சுழபநச டியஉழn ). இவர் முஸ்லிம்களின் ஸ்பெயினில் கல்வி கற்றுவிட்டு வந்தவராவார்.12 ம் நூற்றாண்டிலேயே உலக வரை படத்தை (வோர்ல்டு மேப்) தயாரித்துக் கொடுத்தார் அல் இத்ரீஸ் என்ற முஸ்லிம் ஆய்வாளர். கெமிஸ்ட்ரீ (வேதியில்) துறையின் தந்தையாக ஜாபிர் பின் ஹய்யான் போற்றப்படுக்pறார்.15 நூற்றாண்டு வரை அவருடைய நூற்கள் தான் ஐரோப்பாவில் வேதியில் துறையின் இறுதிச்சான்றுகளாக கருதப்பட்டன. உலகம் முழவதிலும் எண்கள் (நம்பர்களை) எழுதுகிற போது 123 என்று எழுதும் வழக்கம் தான் வழக்கத்தில் இருக்கிறது. மற்ற நடைமுறைகள் அனைத்து சற்றேறரக்குறைய ஒழிந்து விட்டன அல்லது அழிந்து விட்டன என்று சொல்லலாம். காரணம் மற்றவை அனைத்தும் கிரமமானதாக இருந்தன. ஐரோப்பிய சமுதயம் ரோம எண்களை பயன்படுத்தி வந்தது. அதை புனிதமானது என்று கூட கருதினார்கள். அனால் அதில் பெரிய எண்களை எழுதவது சிரமமானது. எண்பத்தி எட்டு என்று எழதவதற்கு டுஓஓஓ ஏஐஐ என்று ஏழு எழுத்துக்களை எழுத வேண்டும். 123 என்ற எண்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலககம் நிம்மதிப் பெருகூச்சு விட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற 123 என்ற எண்களுக்கு முழுவடிவம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்று நம்பிள்ளைகளுக்கு நாம் சொன்னால் அவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளப்பார்கள். தமிழ் நாட்டில் விற்பனையாகிற ஒரு அரிச்சுவடிப் புத்தகத்தை வாங்கி எண்கள் என்ற பாடத்தை எடுத்து 123 என்ற எண் வடிவங்களுக்கு மேலே பார்த்தீர்கள் என்றால் அவை அரபி என்ககள் என்று அடையாளம் இடப்பட்டிருப்பதை காணலாம். ஐரோப்பியர்களும் இந்த எண்களை அரபி என்கள் என்றே குறிப்பிட்டார்கள்.ஆனால் புழைய இஸ்லாமிய அரபி நூல்களில் இந்த எண்களை இந்திய எண்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். உண்மையில் இந்த எண்களில் 1 முதல் 9 முடிய உள்ள எணகள் இந்திய எண்களே! இந்தியர்களிடம் 9 வரை தான் நம்பர் இருந்தது. அதனால் அது முழமை பெறாமல் இருந்தது. இரு நூறு என்று சொல்வதற்கு 2 நூறு என்று தான எழுத வேண்டியிருந்தது. இந்த நம்பர்களை ஆங்வு செய்த அபு மூஸா அல்குவாரிஜ்மி (780 - 850)என்ற முஸ்லிம் கணிதவியலாளர்தர்ன் இனறைய வழக்த்திலள்ள சைபர் நடைமுறையை பயன்படுத்தி எண்களை இலகுவாக கையாள முடியும் என்று உணர்த்தினார். இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் முஸ்லிம்கள் அறிவுலகத்தின் அரசர்களாக வாழ்ந்த வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அறிவியல் துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பா அறிவியல் ஒளியற்ற இரண்ட கண்டமாக இருந்தது என பிரிட்டானிய கலைக்களஞ்சியம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 6 ம் நூற்றாண்டுக்கும் 10 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் இருண்ட காலம் என்றழைக்கப்படுகறிது. ஐரொப்பாவில் வன்முறை நிறைந்து அறிவொளி இருண்டுகிடந்த காலம் அது. (; பிரிட்டன் என்ஸைக்ளோபீடியா1984)இருண்டு கிடந்த ஐரோப்பாவிற்கு மட்டுமுல்ல அன்றை முழு உலகிற்கும் முஸ்லிம்களே விஞ்ஞானத்தினுடையவும் நாகரீகத்தினுஐடயவுமான கொடைகளை வாரிவழங்கிக் கொண்டிருந்தார்கள். காலச் சுழற்சியின்; எந்தக் கொடும்; புயலில் அந்த பழம் பெருமை சரிந்தததோ தெரியாது. முஸ்லிம் சமுதாயம் அறிவீனத்தின் பள்ளத்தில் விழுந்து இழிவுச் கதியை சாந்து பூசிக் கொண்டு விட்டது. இதற்கு கீழ் இன்னுமு; விழுவதற்கு பள்ளமில்லை எனும் அளவு வீழ்ந்து பட்ட பிறகு எழுந்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு முஸ்லிம் சமுதாயம் ஆளிகியிருக்கிறது. எந்த ஊண்று கோல்களின் துணையுமில்லாமல் தட்டுமடுமாறு அது எழ முயற்சி செய்யும் போது முன்னோர்கள் வாழ்ந்த பொற்காலத்தை பற்றிய கனவு, எம் தந்தையைர்..அவர்கள் என்ற உணர்வு அதன் மூச்சுக்காற்றில் சக்தியை ஏற்றட்டும். முஸ்லிம்களிடம் ஆர்வத்தை உண்ட பன்னுவதற்காக முன்னோர்களின் வரலாறுகளை சொல்வது பெருமானார் (ஸல்) அவர்களுடைய பழக்கம். யூதர்களில் ஒருவர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தார் என்ற செய்தியை பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்ன போது அன்னாருடைய தோழர்கள் அது கேட்டு ஆச்சரியமும் ஆதங்ககமும் கொண்டனர். நாமும் அப்படி ஆக வேண்டுமே என்ற ஆர்வம் கொண்டனர். அப்போது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ரமலானில் ஒரு இரவை கத்ருடைய இரவாக ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாக முஸ்லிம்க்கு வழங்கினான் என்பது இஸ்லாமிய வரலாறு. முன்னோர்களின் சிறப்பான வாழ்வு முறைகளை ப்பற்றி கேள்விப்படும் போது அந்தப் பெருமையில் கரைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று உயிர்தெழ வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்தினுடையது. ஏழ்மை என்பது பரிதாபத்திற்குரியதல்ல . ஒரு பணக்கார வம்சத்தின் வாரிசு ஏழையாக வாழ நேரிட்டால் அது பரிதாபத்திற்குரியது. ஓரு விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் கல்வியறிவற்றவராக இருப்பது சகித்துக் கொள்ளத்தக்கது தான் . ஆறிவாளிகளின் குடும்பத்தில் ஒருவர் அல்லது வாத்தியார் வீட்டுப் பிள்ளை படிப்பறிவற்றவராக இருப்பது அதிகம் கேலிக்குரியது.இத்தகைய பரிதாபத்திற்கும் கேலிக்கும் இன்று ஆளாகியிருக்கிற இன்றுள்ள முஸ்லிம் சமுதாயம் அறிவியலின் தளத்தில் தனது பலத்தை பெருக்கிக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மிகுந்த மரியாதைக்குரியது. ஆறிவியலின் புதிய கண்டு பிடிப்புகளை மாhக்கம் கற்றுத் தந்திரக்கிற அளவீடுகளின் சரியான அடிப்படையில் அணுகி அவற்றை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும். கம்ப்யூட்;ரினால் கிடைக்கிற நன்மைகள் ஏராளமாக இருக்கிற போது அதை டிவி பொட்டி என்று கருதி நிராகரிக்கிற மூர்க்கத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் ஒரு முஸ்லிம் நிபணரவாவது இன்றைய சூழ்நிலையில் அவரக்கு மட்டுமே பெருமை சேர்ப்பதாக இல்லாமல் சமுதயத்திற்கும் மரியதை பெற்றுதருவதாகவும் அமையும். நூறு பணக்காரர்களை விட நூறு செல்வாக்கு பெற்ற தலைவர்களைவிட ஒரு சிந்தனையாளர் ஒரு விஞ்ஞானி சமுதாயத்திற்கு அதிகம் முக்கியமானவராவார். கிரேக்க நாடு எத்தனையோ அரசர்களை பார்த்திருக்கலாம். எத்தனையோ செல்வந்தர்களைப் பார்த்திருக்கலாம். ஒரு சாக்ரடீஸ் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கவனித்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். எனவே சமுதயத்தில் பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தரப்படுகிற மரியாதை படித்தவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தரப்பட வேண்டும்.ஆறிவியல் துறைகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். அதே சமயத்தில் அறிவியலின் புதிய வெளிப்பாடுகள் அத்தனையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாது. எதை எடுப்பது எதை விடுவது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாகவே இருக்கின்றன. சில விசயங்களை தீர்மாணிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் முடிவு தெளிவானதாகவும் உலக சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகவும் அமையும் என்பதை சமுதாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.அறிவியல் என்பது அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் வழி நம் விழிகளுக்கு வெளிச்சத்தை தரட்டும்.

No comments: