Saturday, January 12, 2008

ஹஜ் பயணிகள் கவனிக்கவும்!


ஹஜ் என்ற வார்த்தைக்கு மக்கா நகரிலுள்ள கஃபா ஆலயத்திலும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணித்தல் என்பது பொருள். இதை முஸ்லிம்களின் இறுதிக்கடமை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அது தவறானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மாhக்கத்தின் தனிநபர் கடமைகளில் பிரதானமான ஜந்து கடமையை குறிப்பிடுகிற போது ஹஜ்iஐ இறுதியாக குpறப்பிட்டார்கள் என்பதனால் ஹஜ் இறுதிக் கடமை என்னும் சொல் வழக்கில் வந்தவிட்டதே அன்றி ஒரு முஸ்லிம் நிiவேற்ற வேண்டிய கடமைகளில் ஹஜ் இறுதியானதுமல்ல. அவர் தனது வாழ்வின் இறுதிககட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமை என்றும் அதற்கு அர்த்தமில்லை. ஹஜ்ஜுக்கு அப்பாலும் ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு. அது போல ஹஜ் கடமையை நிறைவேற்றும் வசதி வந்தவிட்டால் வாழ்நாளின் இறுதி கட்டத்திற்கு என்று அதை ஒத்திவைக்கக் கூடாது உடனே நிறைவேற்றி விடவேண்டும்
ஹஜ் இஸ்லாம் மார்க்கதின் பிரதான கடமைகளில் ஒன்று தான் எனினும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயமானதல்ல. பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம், பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் வாய்க்கபட்ட முஸ்லிம்கள் மீது மட்டுமே இது கடமையாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்நிபந்தனைகள் பொருந்தும். பெண்கள்களை பொருததவரை பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் என்பதோடு பாதுகாப்பான சூழல் என்பதும் கவனிக்கப்படும். அதனால் தகுந்த ஒரு பாதகாவலர் கிடைத்hல் மட்டுமே அவர் மீது ஹஜ் கடமையாகும்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கஃபா ஆலயத்iயொட்டி ஹஜ் உம்ரா ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டு வந்தது என்றாலும் காலப்போக்கில் அதன் அடிப்படை அம்சங்களில் தூய்மையும் வாய்மையும் அற்ற சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. ஹீஜ்ர்p ஒண்பதாம் ஆண்டில் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதில் தகுந்த சீhத்திருத்தங்களை செய்து இஸ்லாமிய உம்ரா இஸ்லாமிய ஹஜ் என்பதற்கான வரையரைகளை ஏற்படுத்தினார்கள். அன்றிலிருந்து இடைவெளியில்லாது ஹஜ் கடமையை முஸ்லிம்கள் மிகுந்த உற்காசத்தோடும் பக்தியுணர்வோடும் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஹிஜ்ரீ 1428 ம் ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது. தென்னாப்pக்காவிலிருந்து உலகின் முதல் ஹஜ் குழு நவம்பர் 12 ம் தேதி ஜித்தாவின் மன்னர் அப்தல் அஜீஜ் விமானநிலையத்தில் வந்து இறங்கியிரக்கிறது.
ஆஜர்பைஜான் நாட்டிலிருந்து இருவர் கால்நடையாகவே இந்த ஆண்டு ஹஜ்ஐஜ நிறைவேற்ற வந்தள்ளதாக சவூதியின் ஹஜ் அமைச்சக நெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஷாகித் கோர்பத்தோவ், சாகிப் கெஜிமோவ் என்ற அந்த இருவரும் 3 மாதங்களுக்கு முன் தங்களத பயணத்தை தொடங்கி இரான் துர்க்கி சிரியா ஜோர்டான் வழியாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தள்ளனர். இந்த ஆண்டு சுமார் 10.700 பேர் சினாவிலிருந்து ஹஜ் செய்ய உள்ளனர். சீனாவின் சமீபத்திய வரலாற்றில் இதுவே மிக அதிகம் என்று அஸோஸியேடட் பிரஸ்ஸின் செய்தி குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஒருலட்சத்து 57 ஆயரம் பேர் புனிதப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 1990 ம் ஆண்டு 24 அயிரத்து 200 பேர் என்ற அளவிலிருந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 15 வருடங்களில் 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளாதாரா வளம் பரவலாகியதும் பயணம் செய்யும் வசதிகள் பெரகியதும் தொலை தொடர்பு வசதிகளின் பெரக்கமும் இதற்கு காரணங்களாகும். ஹஜ்கமிட்டி மூலமாக 55,278 ஆண்களும் 47,181 பெண்கள் உட்பட 1,02,459 பேரும் மற்றவர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் பயணமாகவுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை ஹஜ்ஜீக்கு சென்றவர்களில் இதுவே அதிக பட்ச அளவு என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளில் இந்தோனேசியாவிற்கு அடுத்த படியாக ஹாஜிகள் பெருமளவில் கலந்து கொள்ளும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது.
இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வோரின் முதல் குழு 259 இந்தியப் பயணிகளுடன் நவம்பர் 11 ம் தேதி லக்னோவிலிருந்து புறப்பட்டது விட்டது என்றாலும் தமிழ்நாட்டிலிரந்து ஹஜ்கமிட்டி மூலம் பயணமாகின்ற சுமார் 4 ஆயிரம் பேர் நவம்பர் 29 ம் தேதி முதல் தங்கள் பயணத்தை துவங்க உள்ளனர். டிசம்பர் 5 ம் தேதி வரை 9 விமானங்களில் அவர்கள் பயணம் செய்ய உள்ளார்;கள். இது தவிர ஏராளமானோர் தனியார் நிறுவனங்கள் மூலமாக தங்களது கடமையை நிறைவேற்றவள்ளனர்.
ஹாஜிகளுக்கான பயிற்சி முகாம்களும் வழியனுப்ப விழாக்களும நாடு முழவதும்; நடந்து வருகின்றன. ஹஜ் வியனுபபு விழாக்களில் ஹஜ் பயணம் செல்வோர் மட்டுமல்ல வழியனுப்புவோர் கூட ஒரு வித கிளாச்சியோடும் உற்சாகத்தோடும் பங்கே;றபது இந்த விழாக்களின் சிறப்பம்சம். புக்தியுமு; மகஜழ்சியும் கண்ணீராக பெருக்கெடுக்கிற தருணம் அது.
ஹாஜியை வழியனுப்புகையில் அவரிடம் எ;களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பது பெரமானாரின் வழிமுறை. ஊமர் (ரல) அவர்கள் தான் அறியாமைக்காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஒரு உம்ராவை நிறைவேற்ற அனுமதி தருமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் கேட்ட போது அவருக்கு அனுமதி வழங்கிங பெருமானார் உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை மறந்துவீடாதீர் சகோதரரே என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக பிரார்த்தன செய்ய கேட்டுக்கொள்வார்கள். ஆனால் ஹாஜிகள் அத்தனைபேரும் ஒரே ஒரு கோரிக்கை முன்வைத்து மற்றவர்களை தங்களுக்காக பிராhத்திக்ச் சொல்வார்கள். எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்றே கேட்பார்கள்.
இது ஈமானிய குணம். உன்னதமான மனிதர்களின் வழிமுறை. நபி இபுறாகீம் (அலை) கஃபாவை கட்டி முடித்தபிறகு இப்படித்தான் பிரார்த்தனை செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இப்ராஹீமும், இஸ்மாயீலும் கஃபாவின் அஸ்திவாரத்தை உயர்த்திக்கட்டிய போது, ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'' (என்று கூறினர்). (2:127)
இந்த கோரிக்கை உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.இது பற்றிய கவலை ஒரு ஹாஜியின் சிந்தனையை எந்த நேரமும் ஆக்ரமித்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஓரு முஸ்லிம் ஹஜ்கடமை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து செய்யப்படுவதாக இருந்தாலும் சரி அந்தச் செலவு பிரதானமல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தோனேஷியால் கல் வியாபாரம் செய்பவர்;;. ஜகார்த்தாவில் தங்களது வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஹஜ் செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார். ஏங்களுரில் இந்த ஆண்டு ஹஜ்கடமை நிறைவேற்ற இருக்கிறவர்களில் ஒரு தம்பதியினர் தங்களது பெரிய வீட்டை விற்று ஹஜ்ஜுக்கு செல்கின்றர். ஓரு பெண்மணி தன்னிடமிருந்த நகைகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்கிறார். ஆயினும் இநத்தகைய செலவுகளால் ஒரு ஹாஜி மகிமை அடைந்துவிடுவதில்லை.
அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.
ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராhத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும். எனவே ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும். அத்தோடு ஹஜ்ஜின் போது கைகொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்; அதிக செலவு பிடிக்கிற சிரமமான ஹஜ் என்கிற கடமையை ஹஜ்ஜன் மக்பூலன் வ மப்ரூரன் அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.
ஹாஜி அன்று பிறந்த குழந்தை போல வீட்டுக்கு திரும்புகிறார் என்ற நபிமொழியை கவனித்தப் பாhருங்கள்.
ஹஜ்ஜை மாசுபடுத்தகிற செயல்கள் மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல புகாரி -1521)
இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் எந்த நிலையிலும் ஹாஜி நினைவில் வைக்க வேண்டியவை.
முதலாவது, ஹஜ் அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த வாசகம் ஒரு முஸ்லிம் அடிக்கபடி கேள்விப் படுகிற அல்லது உபயோகப்படுத்தகிற வாசகம் எனினும் அவர் அதிகமாக ஏமுhறுகிற விசயமும் இது தான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஹாஜி இந்த ஏமாற்றுத்திற்கு ஒரு போதும் ஆளாகிவிடக் கூடாது. நான் அல்லாஹ்விற்காhக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.
நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்பதோ, பணவசதி இருப்பதால் கிடைத்த வாய்ப்பு என்றோ, ஒரு சுற்றுலா அனுபவம் என்றோ, ஹாஜி என்ற பட்டம் கிடைக்கும் என்றோ அல்லது எந்தச் சிந்தனையும் அற்ற ஒரு கிளாச்சியூட்டும் பயணமாகவோ ஒரு ஹாஜி தன் பயணத்தை அமைத்துக் கொண்டு விடக் கூடாது. இது அல்லாஹ்வுக்கான பயணம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்தப் புகழும் மரியாதையும் என்கு பிரதானமல்ல. இதன் நற்கூலியை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன் என்கிற விசயத்தை அறிவும் மனதும் தெளிவடையும் வண்ணம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தன்னுடைய ஹஜ் அங்கீகரிகப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஹாஜியின் முதல் கடமையாகும். ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.
மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல் நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.
ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.
நபிமொழி தருகிற இரண்டாவது எச்சரிக்கை ஹாஜி, ஹஜ்ஜை மாசுபடுத்துகிற செயல்களை செய்யக் கூடாது.
ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.
''இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன் அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன்'' (என்று நபியே! நீர் கூறுவீராக). (27:91) என்று திருக்குர்ஆன் கூறுகிறது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.
மற்றொரு நபிமொழி பின்வரமாறு கூறுகிறது
அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.
வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி 1833)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு சமயம் மக்காவை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.இது பூமியிலுள்ள சிறந்த இடமாகும். அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடமாகும். நூன் நிர்பந்மாக வெளியேற்றப்படடிருக்காவிட்டால் இந்த இடத்திலிரந்து வெளியேறியிருக்க மாட்டேன் (அஹ்மது)
மக்காவைப் போலவே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்புத் தகுதியை சட்டரீதியாக பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை தென்பட்டது. உடனே, இந்த மலை நம்மை நேசிக்கின்றது நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் மதீனா நகரை புனிதமானதென அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள். (புகாரி 7333)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும் என்று கூறினார்கள்.
மதீனாவின் ஒரு பகுதியை சொர்க்கத் தோட்டம் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அறிவித்துள்ளார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்;கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது. என்று அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 7335)
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தெழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. ஏன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 1190)
இது போல இன்னும் ஏராளமான நபிமெழிகள் மக்கா மதீனா நகரின் புனிதத்தன்மையை பற்றியும் அங்குநடற்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பேசுகின்றன. எனவே ஒரு ஹாஜி இது அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதராலும் புனிதப்படுத்தப்பட்ட இடம் என்ற மரியாதையை மனதில் இருத்திச் செயல்பட்டால் அவரது ஹஜ் அங்கீகாரம் பெறத்தேவையான அம்சங்கள் அனைத்தும் அவரிடம் தானவே வந்துவிடு;ம்.
புனிதமான இடங்களில் நற்காரியங்களுக்கு அதிக நன்மை கிடைப்பது போலவே தீயசெயல்கள் பெருங்குற்றங்களாக ஆகிவிடும் ஆகவே ஹாஜி ஹஜ்ஜுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையம் செய்யக் கூடாது. பிற ஹாஜிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்யக் கூடாது.
இதிலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சாஹிப் சமீபத்தில் தான் ஹஜ்ஜீக்கு சென்ற போது முதல் நாளில் நடற்த அதிர்சிசியான தொரு அனுபவத்தை சொன்னார். அவர் உணவருந்துவதற்காக ஹஜ் சேவை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை வேறு யாரும் உட்கார்ந்து விடாதபடி துண்டை போட்டு ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். அருகில் போய் யாரும் இங்கு வருகிறார்களா என்று கேட்டிருக்கிறார். அது தான் விவகாரமாகிவிட்டது. அந்தப் பெரியவர் வாயில்வந்தபடி கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவ்வார்த்தைகளை கேட்டு அந்த சாப்பாட்டு அரங்கமே அதிர்ச்சியல் உறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
பெருமானாரின் தோழர்கள் எப்படி நடந்த கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஹாஜிகளுக்கு போதுமான எச்சரிக்கை தரும்.
அப்துல்லாஹ்பின உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வருகிற பொது ஹரமுடைய எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதானால் அந்த இடத்திற்கு வந்தவிடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கிற பொது தடிப்பமான வார்த்ததைகள் வந்துவிடக்கூடும். அவ்வார்த்தைகள் ஹரமின் புனிதன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரிதாகிவிடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஹாஜி இஹ்ராமுடைய நிலையில் மனைவியோடு சல்லாபிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது போலவே சக ஹாஜிகளுக்கு சங்கடம் தருவதையும் தவிர்கக வேண்டும். வார்த்தகைளால் வழக்ககாடுவதை தவிர்க்க வேண்டும்.
அந்தப்புனித பூமியில் நிறைந்து காணக்கிடைக்கிற அல்லாஹ்வின் அற்புதங்களை ஹாஜி எண்ணிப்பார்ப்பது அவரது அந்த பகுதியின் கனபெருமானத்தை அவர் நினைவில் நிறுத்த உதவும்.
கஃபாவே ஒரு அதிசயம். அதைப் பார்த்தவர் பார்த்துக் கெர்ண்டே இருக்கிறார். சலிப்பே ஏறபடுவதில்லை. கஃபாவை மக்கள் திரும்கத்திரும்ப வரும் இடமாக தான் ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2.125)
இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டுகிற போது ஏறி நின்ற ஒரு கல்லில் அவரது பாதச் சுவடுகளை பதிய வைத்த இறைவள் அந்தக்கல்லை இன்று வரை அங்கு பாதுகாத்து வைத்திரக்கிறான்.
லட்சக்கணக்கான மக்கள் மக்காகவில் ஆண்டுதோறும் கூடுகிறார்கள். அங்கே அமைதி கொலுவிருக்கிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் அது அமைதியையும் பாதுகாப்பையும் தருகிறது.
உலகின் பல பாகத்திலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வந்து கூடுகிறார்கள்.அவர்களுக்குததேவையான உணவு தண்ணீர் உறைவிட வசதிகளுக்கு எந்தக குறைவும் எற்படுவதில்லை. அவரவர் கலாச்சாரத்திற்கேற்ற உணவையும் வசதியைiயும் அங்கு பெற்றுக் கொள்கிறார்கள். மனித நெருக்கடியை தவிர வேறு எதற்கும் அங்கு நெரக்கடி இல்லை. போக்குவரத்து வசதிக்கும் குறை இல்லை. செல்போன் சிக்னலில் கூட நெரக்கடி இல்லை. இதற்காககவெல்லாம் சவூதி அரசாங்கம் பெரும் முயற்சி எடுக்கிறது என்ற போதும் அந்த அரசாங்கமே கூட இது அத்தனையும் தனது முயற்சியால் நடக்கிறது என்று நம்பாது.
இத்தனை அதிசயங்களையும் கண்ணால் பார்க்கிற ஹாஜி தான் அல்லாஹ்வின் புனித பூமிக்கு தோந்தெடுத்து அழைத்துவரப்பட்டுள்ள பாக்கியசாலி என்ற எண்ணத்தை நினைவில் நிறுத்தி தனக்கான நேரத்தையும் வாய்பபையும் பயன்படுத்திக் கொள்வாரானால் அவர் மினா மைதானத்தில் சைத்தானை நோக்கி எறிகிற சிறுகற்களை மலக்குகள் எடுத்துச் செல்வார்கள். அது அவரது ஹஜ் அங்கீகரிக்ப்பட்டது என்பதற்கான அடையாளம்.
லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கான பொடிக்கற்களை ஜம்ராவிலுள்ள தூனை நோக்கி எறிகிறார்கள். அங்கு வீசப்படுகிற கற்கள் என்னவாகின்ற என்று நபித்தோழர் அபூஸஈதில் குத்ரீ (ரலி)அவர்கள் பொருமானாரிடம் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யாருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானோ அவர் வீசும் கற்களை மலக்குகள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். (மஆரிபுல்குர்ஆன். பாகம் 1 பக்கம் 88)
தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும்.

தேவை ஒரு பக்தி மார்க்கம்.

அவர் ஒரு முஸ்லிம் அதிகாரி. வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மார்க்கப்பற்று மிக்கவர். ஓரு பள்ளிவாசலின் தலைமைப் பதவிக்கு அவருடைய பெயரை பலரும் பிரேரனை செய்த போது அப்பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் செய்யும் நற்செயல்களே குறைவுதான். அதையும் வீணடித்து விடக் கூடாதே என்ற கவலைதான் காரணம் என்று அவர் சொன்னார்.
அந்த பதில் பலத்த யோசனையை கிளறி விட்டது. சமுதயாத்திற்காக பணியாற்றும் ஒரு வாய்ப்பு அதிக நன்மையை பெற்றுதருவதாக அமைய வேண்டும். நம் மார்க்கம் அப்படித்தான சொல்லித்தருகிறது.
ஓரு நபித்தோழர் ஜமாத்துடன் தொழுவதற்காக வேகமாக வந்த கொண்டிருந்தார். வழியில் ஒரு மரக்கிளை முறிந்து விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டு வருவதற்குள் தாமதமாகிவிட்டது. பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுகைகைய நிறைவு செய்தார். உள்ளுர ஒரு பயம் இருந்தது. தாமதமாக வந்ததற்காக பெருமானார் (ஸல்) கோபித்துக் கொள்வார்களோ என அவர் அஞ்சிக் கொண்டிருந்தார். அவர் பயந்ததது போலவே பெருமானார்(ஸல்) அவர்கள் அவரை அழைத்தார்கள். ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் கேட்ட கேள்வி வித்தியாசமாக இருந்தது. நண்பரே நீங்கள் என்ன நற்செயலை செய்து விட்டு வந்தீர்கள்! நீங்கள் செய்த காரியம் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்துவிட்டதே! நீங்கள் செய்த காரியத்திற்காக அல்லாஹ் உங்களுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படி என்ன நற்செயலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். ஆந்த வார்த்தைககளை கேட்டு அந்த நபித்தோழர் அளவிலாத ஆனந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.
அவர் மட்டுமல்ல அவரைப் போலவே மக்களுக்கு பயன்படுகிற சமூகத்தொண்டாற்றுகிற எவருக்கும் பெரும் மகிழ்ச்சியயை தருகிற வார்த்தைகள் தான் அவை.
இவ்வாறு மக்களுக்கு ஆற்றிய சிறு தொண்டு ஒரு மனிதருக்கு இறைவனின் நேசத்தை பெற்றுத் தந்துவிட்டது என்று சொல்லுகிற மார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லகிற முஸ்லிம் சமுதாயத்pல், பள்ளிவாசலின் தலைமை பெறுப்பேற்றால், அதுவே இருக்கிற கொஞ்ச நஞச நன்மைகளையும் அழித்து விடும் என்று ஒருவர் அச்சப்படுகிறார் என்றால், முஸ்லிம் சமூகத்தில் தனிமனிதனுடையவும் சமூகத்தினடையவும் மதிப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்ற பலத்த கேள்வியை அது எழப்புகிறது.
மீண்டும் ஓரு புதிய ரமலானுக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். மக்கள் பள்ளிவசலை நோக்கி படையெடுக்கப் போகிறர்கள். தொழுகை நோன்பு ஈகைகளின் வழியாக தங்கள் பக்தியுணர்வை பெருக்கிக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்வத்தேடு அணி தரள்கிற இந்த சந்தர்ப்த்தில் முஸ்லிம் தனி மனிதருடையவும் சமுதாயத்தினுடயவும் நிலையை மதிப்பீட செய்ய வேண்டிய தேவை எற்பட்டிருக்கிறது.
ரமலானுக்கும் இந்த பரிசோதனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் மிக முக்கியமானது. ரமலான் மாதமுமு; அதில் நிறைவேற்றபடுகிற நற்கரமங்களும் அவை உண்டு பண்ணவேண்டிய தாக்கத்தை தனிமனிதனிடத்திலும் சமுகத்திலும் ஏற்படுத்துகின்றதா என்ற முக்கியமான கேள்விக்hன விடை அதில் ஒளிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதருடைய வாழ்விலும் ரமலானும், அது ஏற்படுத்துகிற நல்லுணர்வும் மிகுந்த மரியாதைக்குரியவை. அளவிடற்கரிய தொரு அருட்கொடை அது.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ரஜப் மாதத்தின் பிறை தென்பட்டுவிட்டால் அல்லாஹ்விடம் ரமலானுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : ரஜப் மாதம் வந்து விட்டால் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அருட்செய்வாயாக! ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப் பளிப்பாயாக! ஏன்று பிரார்த்தனை செய்வார்கள்.(அஹ்மது 2228)
இத்தகையதொரு ரமலானை நாம் பெற்றுக் கொள்கிற போது அது எப்படிப்பட்ட பாதிப்பை நமக்குள் ஏற்படுத்த வேண்டுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்றால் சர்கை;கரை வியாதிக்காரரரை போல உலகின் சரிபாதி இன்பத்தை நாம் அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்களாகி விடுவோம்.
ரமலான் ஏறு;படுத்த வேண்டிய தாக்கம் குறித்து ரமலானுக்கு பிறகு பார்ததுகு; கொள்ளலாமே என்றும் ஒரு கேள்வி எழும். ஆதற்கான பதில் மிகச் சாதரணமானது. ஓரு ரயில் வண்டி புற்பபடுவதற்கு முன்னரே பயணி அவருயை பயணப்பாதையை தீர்மாணித்துக் கொள்ள வேண்டுமே தவிர ரயில் அதனுடைய கடைசி எல்லையை தொட்டுவிட்ட பிறகு அல்ல. அதே போல ரமலானில் சஞ்சரிப்பதற்கு முன்னதாகவே அதன் விளைவாக ஏறு;பட வேண்டிய தாக்கம் குறித்து சிந்தனை செய்து விடவேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனை கற்றுத்தந்து, அதை ரமலான் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கேட்பதை தனது வழிமுறையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால் ரலானைப்பற்றி முன்னதாக வே சிந்தித்து விட வேண்டும் என்ற வழிகாட்டுதலை தருகிறது.
ரமலான் நமது பக்தி உணர்வை மலர்ச்சியடைச் செய்வதற்காக வருகிறது. தொழுகை நோன்பு ஜகாத் என்ற கடமைகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே கருவாக கொண்டிருக்கின்றன. நோன்பை பற்றிய திருக்குர்ஆன் வசனம் இந்த நோக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதை காணலாம். உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகத்தார் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்ட்டிருக்கிறது என்று பேசுகிற 2.183 இறைவசனம், இதன் மூலம் நீங்கள் பக்தியாளர்களாக ஆகக்கூடும் என்று கூறுகிறது.
இந்த வசனம் நினைவூட்டுகிற பக்தி என்கிற செய்தி தான் இன்றைய சுழலில் ரமலானை எதிர்கொள்ளவும் அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை நினைவு கூறவும் மிகவும் தேவைப்படுகிறது.
இன்றைய முஸ்லிம் சமுகத்தில் இஸ்லாம் என்கிற பெயரும் தூய இஸ்லாம் என்ற கோசமும் சமுதாயத்திற்காக என்ற முழக்கங்களும் முன்னெப்போதையும் விட அதிகமாக பேசப்படுகிறது. கடற்த 10 ஆண்டுகளாக இது பற்றி தமிழ் முஸ்லிம் உலகில் மிக நிறைய பேசப்பட்டு விட்டது. இவை ஏற்படுத்திய விளைவுகளை சீர் தூக்கிப்பார்த்தால் சமுதயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியில் பக்தியுணர்வு என்பது அருகிப்போய்விட்டதை வெள்ளிடை மலயென அறியலாம்.
இதற்கான உதாரணங்களைப் பேசப் புகுந்தால் அத பற்றி எழுதப்படகிற காகிதங்கள் கூட நற்றமடிக்கும் என்ற அளவுக்கு கசப்பான செய்திகள் நிறைய உண்டு என்பது, சமதாயத்தை கவனித்துவருகிற அனைவருக்கும் தெரியும்.
முஸ்லிம் சமூகத்திலே பெரிய அளவிலே பேசப்படுகிற ஈமான் இஸ்லாம் என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தகைளாக உச்சரிக்கப்படகிறதே அன்றி அவற்றின் முழப்பரிமாணமும் புரிந்து கொள்ளப்பட வில்லை என்பதை எதார்த்த நிகழ்வுகள் பிரதி பலிக்கின்றன.
ஒவ்வொரு முஸ்லிமிமிடமும் ஈமான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இஸ்லாம் என்ற நடைமுறையும் இருக்கிறது.
ஈமான் என்பது சரியான நம்பிக்கையை குறிக்கிறது. ஈமான் என்பது இறைவனை பற்றிய சரியான நம்பிகை;கை மட்டுமல்ல. அது வாழ்வை பற்றிய சரியான நம்பிக்கையும் கூட. வாழ்கை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலைகள் என விரியும் ஈமானிய அம்சங்கள் முழு மனித வாழ்வையும் சரியான நம்பிக்கையுpன் அடித்தளத்தில் கட்டி எழுப்புகின்றன. இந்த விசயங்களில் எது சரியாக நம்புதலுக்கு உரியதோ அதை நம்பு வதே ஈமான் ஆகும்.
இஸ்லாம் என்பது சரியான செயல்பாட்டை குறிக்கிறது. வணக்க வழிபாடுகள் சமுதாய தொடர்புகள் சமூக உறவுகள் அனைத்திலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதே இஸ்லாம் ஆகும்.
இவ்விரண்டு விசயங்களும் மக்களின் நாளைய சொர்க்க வாழ்வை நிச்சயிக்கின்றன. அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் இவற்றால் இந்த உலகில் ஒருவர் பெறுகிற நன்மை என்ன என்ற கேள்வி பிரதானமானது.
ஈமான் என்கிற சரியான நம்பிக்கையும் இஸ்லாம் என்கிற சரியான நடவடிக்கைகளும் மரணத்திற்குப்பின்னால் மட்டுமல்ல இந்த உலக வாழ்கையையும் அழகுபடுத்துகிற இரண்டு முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளன. அந்த நன்மைகள் தான் ஒரு முஸ்லிமிடம் ஈமான் இருக்கிற இஸ்லாம் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.
ஈமான் என்பது வாழும் முஸ்லிமுக்கு சிந்தனை தெளிவை வழங்ககுகிறது. வழங்க வேண்டும். இஸ்லாம் என்பது நல்ல பண்பாட்டை நற்குணங்களை தருகிறது. தரவேண்டும். இந்த நன்மைகள் ஏற்படாத பட்சத்தில் அவரிடம் ஈமானும் இஸ்லாமும் இருப்பதாக முழுமனதாக ஏற்றுக் கொள்வது இயலாது.
திருக்குர்ஆனின் அல்மாவூன் அத்தியாயம் மிக் முக்கியமாக ஒரு விளக்த்தை சமுதயத்pற்கு முன்னானள் எடுத்து வை;தக்கிறது. தன்னுடைய வாழவு இஸ்லாமிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எவரும் தவறாமல் ஞாபகத்தில் பதித்தருக்க வேண்டிய ஒரு அத்தியாயம் அது.
மாவூன் அத்தியாhத்தின் தொடக்கத்தில், மார்க்கத்தை(அல்லது மறுமை நாளை) நிராகரிப்பவர் யார் தெரியுமா என்று இறைவன் கேட்கிறான்.
இந்தக் கேள்விக்கு பதில் நாம் சொல்லுவதாக இருந்தால் என்ன சொல்வோம்? அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவன். முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒத்துக் கொள்ளாதவன். மறுமை உண்டு என்பதை, சொர்க்கம் நரகம் உண்டு என்பதை நம்பாதவன் தான் காபிர் நிராகரிப்பவன் என்று பதில் சொல்வோம். ஆனால் அல்லாஹ் தருகிற பதில் ஆச்சரியமானது.
அநாதைகளை வெருட்டுபவர்களும் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவர்களும் தான் மறுமை நாளை பொய் என்று நினைக்கிறார்கள் என அல்லாஹ் பதில் கூறுpகிறான்.
ஆநாதைகளை விரட்டுவதும் ஏழைகளுக்கு உதவி செய்ய என்ற எண்ணமில்லாமல் வாழ்வதும், இதயம் இறுகி, சிந்தனை களங்கப்பட்டிருப்பதின் அடையாளங்களாகும். இவர்களது சிந்தனை எப்படி இருக்கும் என்பதை யாசீன் அத்தியாயத்தில் அல்லாஹ் இன்னும் விளக்கமாக கூறுகிறான். இத்தைகய நபர்களிடம் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று சொல்லப்பட்டால் அல்லாஹ் பட்டினி போட்டவனுக்கு நாங்கள் ஏன் உணவளிக்க வேண்டும் என்று கேட்பார்க்ள் என்று கூறுகிறான்
அடுத்த வசனம் இன்னுமு; அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய நபர்கள் தொழுவார்கள் என்றால் அந்த தொழுகையாளிகளுக்கு கேடுதூன் என்கிறது அந்த வசனம். ஏனெனில் அவர்கள் தொழுகையில் கவனமில்லமல் இருப்பார்கள் முகஸ்துதிக் காக பெயர் பெறுவதற்காக தொழுவார்கள். ஒர ஊசியை கூட இரவலாக வழங்கமாட்டார்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் கூறுpகிறான்.
மிக விரிவாக பேசுவதற்குரிய கருத்தாழம் மிகுந்த இந்த அத்தியாயத்தை கவனித்துப்பாருங்கள் நல்ல சிந்தைன இன்றி இருப்பதும் பண்பாடில்லாமல் வாழ்வதும் ஈமான் இஸ்லாம் இன்மையின் அடையாளங்கள் என்பதை புலப்படுத்துவதை காணலாம்.
ஈமானுக்கும் இஸ்லாமுக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பல் வேறு சமயத்தில் கொடுத்துள்ள பலதரப்பட்ட விளக்கங்கள் இதே கருத்தை பலப்படுததுவதாக உள்ளன.
ஈமான் என்பது 63 சொச்சம் கிளைகளை கொண்டதாகும். வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை என்றார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள். (அபூஹுரைரா-புகாரி) மனிதனுடைய ஒரு உயர்தர உணர்ச்சி ஈமானிய நம்பிக்கையின் ஒரு அம்சமாகி அதன் அங்கமாகி விடுவதை இந்நபி மொழி புலப்படுத்துகிறது. வெட்கப்படுபவனை ஈமானிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறது.
பெரியவர்களை மதிக்காதவர் சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரலி) திர்மிதி) பண்படில்லாமல் வாழ்பவரை ஒரு வகையில் இந்நபி மொழி இஸ்லாமிய சமூக மட்டத்திலிருந்து வெளியேற்றுவதை பார்க்கிறோம்.
இதுவெல்லாம் மிக அழுத்தமாக நமக்கு போதிக்கிற செய்தி என்ன? ஒரு கலிமாவை மொழிந்து விடுவது அல்லது அடையாளப்பூர்வமாக சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது என்பதை தாண்டி இஸ்லாமும் ஈமானுமு; ஒரு மனிதரிடம் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன என்பது தானே!
அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதரும் சரியாக புரிந்து வைத்திருக்கிறாரா என்பது தான் இன்றுள்ள பிரதான கேள்வி. ஒரு முஸ்லிமுக்கு அவரது தனி வாழ்வையும் சமூக வாழ்iயும் கட்டமைக்கத் தேவையான சிந்தனை தெளிவை ஈமான் வழங்கியிருக்கிறதா? தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் மானுட மரியாதையோடு வாழ்கிற பண்பாட்டை இஸ்லாம் பழக்கப்படுத்தியிருக்கிறதா? என்பதை ரமலானை வரவேற்பதற்கு முன்னாள் நாம் தெளிவு படுத்திக கொள்ள வேண்டும்.
பொய் தெய்வங்களை கண்டறிந்து அவற்றை நிராகரிக்க கற்றுக் கொடுத்த ஈமான் மோசடித் தலைவர்களையும் போலிப் புரட்சியாளர்களையும் வேஷம் போடும் சமூக ஆர்வலர்களையும் கணடறிய துணை செய்ததா?
கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைப்பையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக கொண்ட வணக்கவழிபாடுகள் இஸ்லாமிய நடைமுறைகள், நகரீகக் குறைபாட்டையும் சண்டை சச்சரவுகளை அழித்துவிட்டதா?
மில்லியன் டாலர் பெருமானமுள்ள இந்தக் கௌ;விகளுக்கு விடை தேடிப் பார்த்தால் தனிமனிதனுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பை அளந்துவிட முடியும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறாக சொல்லப்பட்ட செய்தியை பரப்பினார் என்பதற்hக நபித்தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு 80 கசையடிகள் வழங்கப்பட்டன. அதே ஹஸ்ஸான் (ரலி) அவர்கயள் பிற்காலத்தில் ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஒருவர் அன்னை அவர்களே உங்கள் மீதான அவதூறு வழக்கில் ஈடுபட்டபவரை உங்கள் அருகே அனுமதித்திருக்கிறீர்களே என்று கேட்ட போது, ஆயிஷா (ரலி)அவர்கள் அளித்த பதில் மிகுந்த கவனத்திற்குரியது. ஹஸ்ஸான் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் அல்லவா அவரை குறை சொல்லாதீர்கள் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் பெருமை நினைவு கூர்ந்தார் என்பது இஸ்லாமிய வரலாறு. ஈமானும் இஸ்லாமும் உருவாக்கிய தெளிவையும் பண்பையும் பறைசாற்றும் இந்த வரலாறு, ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் தனிமனிதர்களுடையவும் சமூனத்தினுடையவும் மதிப்பு எப்படி இரந்தது என்பதை வெளிச்சப்படுத்துகிறது.
ஒரு ரமலானை எதிர் கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தனிப்பட்ட பக்தியுணர்வை இந்த அளவீடகளில் பெருக்கிக் கொண்டு சமதாயம் தூய்மை அடைய உதவ வேண்டும். அப்படி ஒரு காலம் வரம் போது நல்லவர்கள் சமுதயப் பொறுப்பிற்கு வருவதற்கு அச்சப்பட மாட்டார்கள்.