Sunday, March 9, 2008

இந்தத் தலைமுறையோடு

1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ளிவாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு வாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். சனிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்படுத்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர்? ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே! ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந்த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.மு.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.

No comments: