<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-565020473366443179</id><updated>2012-01-25T18:42:26.672-08:00</updated><title type='text'>சிந்தனைச் சரம்</title><subtitle type='html'>மாத இதழில் வெளியான கட்டுரைகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-2255985074390856965</id><published>2008-07-26T03:11:00.000-07:00</published><updated>2008-07-26T03:16:04.899-07:00</updated><title type='text'>கொஞ்சம் துறவு... जून 2008</title><content type='html'>“ஆடம்பரமாக வாழாதீர்கள். அதீத செலவினத்தை தவிருங்கள்’ என்று சொன்னவர் யார்?” ஓரு வார இதழில் இப்படி ஒரு புதிர் போடப் பட்டிருந்தது.  பதிலை தேர்ந்தெடுக்க வசதியாக நான்கு பெயர்களை குறிப்பிடிருந்தார்கள். தாயுமானவர், புத்தர், நபிகள் நாயகம், மன்மோகன் சிங். என்ற அந்த நான்கு பெயர்களையும் படித்து விட்டு நான் நபிகள் நாயகம் என்பதை தேர்வு செய்தேன். அது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக்  கொள்ள அந்த பத்திரிகையை தலைகீழாக திருப்பி சரியான விடைகளை பார்வையிட்ட போது அங்கே, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. விடை நான் நினைத்தது இல்லை. இதைச் சொன்னவர் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசியல் வாதி தேர்ந்த ஒரு மதகுருவைப் போல நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்வது, அதுவும் சமயம் மதம் என்பதெல்லாம் ஒரு அலங்காரத்திற்கு வைத்துக் கொள்ளத்தக்கது அவ்வளவுதான் என்ற எண்ணம் மோலோங்கியிருக்கிற காலத்தில் இப்படி ஒரு அறிவுறையை சொல்லியிருப்பது ஒரு ஆச்சரியம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிரதமர், அதுவும் முதலாளித்துவ மனோபாவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணர், திடீரென ஒரு மதகுருவின் குரலில் பேச வேண்டிய அவசியம் என்ன நேர்ந்த்தது? வேறோன்றும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. மற்றொருபுறம் அதன் வாங்கும் திறன் குறைந்த்திருக்கிறது. இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் தோழமைக் கட்சிகளுடையவும், எதிர்கட்சிகளுடையவும் கடுமையான கேள்விகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றனர். இது உலகளாவிய பிரச்சினை உள்ளூர் பிரச்சினை அல்ல என்ற அவர்களுடைய குரல் எடுபடவில்லை. இவ்விருவரின் பொருளாத்தார மேதமை தொடர்ந்து கேலிசெய்யப் பட்டு வருகிறது.இதற்கிடையில் எரிகிற தீயில் எண்ணை வார்ப்பது போல அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா ரைஸும் அதிபர் மேன்மை தாங்கிய புஷ் அவர்களும் உணவுப் பொருட்களின் இந்த விலை ஏற்றத்திற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாக சாப்பிடுவதுதான் என்று கூறித் தொலைத்தார். உள்ளூர் தலைவர்களிலிருந்து உலகத்தலைவர்கள் வரை அதிபர் புஷ்ஷை பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார்கள். ஆனால் மன்மோகன் அவர்களோ, சிதம்பரம் அவர்களோ வாய்திற்ககவில்லை. அதிபர் புஷ் சொன்னதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்பது போல பிரதமர் மன்மோகன் சிங் ஆடம்பரமாக வாழாதீர்கள்.அதீத செலவினத்தை தவிருங்கள் என்று இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியிர்க்கிறார். நாட்டு மக்கள் மிக நிதானமாக யோசிக்க வேண்டிய விசயம் இது.  மதங்களின் வழிகாட்டுதல்கள் சாஸ்வதமானவை என்பது நிரூபணமான தருணமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பொருளாதாரத்தில் இப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்கிறது. முன்பு ஒரு அமெரிக்க டாலரைப் பெருவதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது 40 ரூபாயுக்கு ஒரு டாலரை வாங்க முடியும். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதன் பலன் நாட்டு மக்களுகுகு கிடைத்திருக்கும் என்றால் முன்னர் ஒரு ரூபாயுக்கு கிடைத்த சாக்லேட் 90 காசுக்கு கிடைக்க வேண்டும் ஆனால் நிலமை வேறு மாதியிருக்கிறது. ஒரு ரூபாய் சாக்லெட் இபோது ஒண்ணரை ரூபாயக ஆகிவிட்டது. 60 ரூபாயுக்கு கிடைத்த சமையல் எண்ணை 90 ரூபாயாகிவிட்டது. 36 ரூபாயுக்கு கிடைத்து வந்த துறையூர் அரிசி இப்போது 41 ரூபாயாகிவிட்டது. இரும்பு விலை 56 சதவீதம் உயர்ந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிற அதே நேரத்தில் ருபாயின் வாங்கும் திறன்  சரிந்திருக்கிறது. இதை பணவீக்கம் என்று பொருளாதாரம் குறிப்பிடுகிறது. இந்த பணவீக்கம் சமீப கால வரலாற்றில் இல்லாத அளவாக 7.83 சதவீதததை எட்டியிருக்கிறது. அதாவது அந்த அளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி துறையின் வளர்ச்சியால் கார் பங்களா என வாழ்கை வசதிகள் பெருகி.. இலட்சக் கணக்கினாலான பணம் சாமாண்ய நடுத்தர வர்கத்து மக்களிடம் புரள.. சிற்றூர்களிலும் கூட ஷாப்பிங் மால்களும் உயர் ரக காப்பி ஷாப்புகள் மிளிர…நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளதை மக்கள் தங்களது வாழ்வியல் போங்கில் அனுபவித்து உணர்ந்து கொண்டிருந்த சூழலில் இந்த பணவீக்கம் ஒரு திடீர் அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது அந்த எச்சரிக்கைதான் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துறவியை போல அவர் பேசுகிறார் என்று சிலர் நையாண்டி செய்கிறார்கள். உண்மை தான். ஆனால் இந்தத் துறவு இனறைய இந்திய தேசத்தின் தேவை என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு புதிய வகை பணக்கார வர்க்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிக சிரமம் அல்லது துணிச்சலான முயற்சி எதையும் மேற்கொள்ளாமலே ஒரு கனிசமான தொகையினர் பெரும் செல்வந்தர்களாகி வருகினறனர். குறிப்பாக இளைஞர்களும் இளைஞிகளும் கல்வித்தகுதி ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் பொருள் ஈட்டிவருகினறனர். அவர்களிடம் ஆடம்பர மோகம் அதிகமாக இருக்கிறது. 5 ரூபாயுக்கு கிடைக்கிற காப்பியை தவிர்த்துவிட்டு 50 ரூபாயுக்கு காப்பி குடிப்பதை தேர்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் இத்தகைய வாடிக்கையாளர்கள் பெருகுகிற போது அந்தப் பகுதியில் காப்பியின் விலை கனிசமாக உயர்ந்து விடுகிறது. சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவ்ர் கூட சில பிளக்ஸ் அட்டைகளையும் கண்ணாடி அலங்காரங்களையும் செய்வதன் மூலம் இரண்டைரை ரூபாய் டீயை 10 ரூபாயுக்கு விற்கிறார். அதைப் பற்றி யாரும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் துபாய் சென்றிருந்த போது ஒரு நாள் டீ கடைக் காரர் இன்று முதல் டீயின் விலை அரு திர்ஹம் என்றார். உடன் வந்த நண்பர் கடைக்காரரிடம் எதற்கப்பா இந்த விளையாட்டு இன்னும் ஓரிரு நாளில் நீயே விலையை குறைத்து விடுவாய் என்றார். இல்லை. இல்லை. இந்த முறை விலை குறைக்கப் படாது என்றார் கடைக்காரர். பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நண்பர் திரும்பினார். என்ன விசயம் என்று நான் நண்பரைக் கேட்டேன். இங்கு அவ்வப் போது டீ கடைக்காரர்கள் இப்படி டீ விலையை உயர்த்துவார்கள். இங்குள்ள உழைக்கும் மக்கள் தான் இது போன்ற கடைகளில் டீ குடிப்பார்கள். அவ்ர்களுக்கு டீ ஒரு திர்ஹம் என்பது பெரிய தொகை. அதனால் டீ விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். டீ குடிப்பதை குறைத்து கொள்வார்கள். வியாபாரம் குறைவதைப் பார்த்து கடைக்காரர்கள் மீண்டும் பழைய விலைக்கே விற்க ஆரம்பித்து விடுவார்கள். இது இங்கு அவ்வப் போது நடக்கிற நாடகம் தான் என்று நண்பர் சொன்னார். துபாயின் டீ விலையை போல இல்லாமல் நமது நாட்டில் ஒரு பொருளுக்கு விலையேரிவிட்டால் பிறகு அது இறங்குவதே இல்லை, இந்தியாவில் பெருகி வரும் ஆடம்பர மோகத்தால் உயர்கிற பொருட்களின் விலை, ஆடம்பரக்கடைகளை தொடர்ந்து சாமாண்யக் கடைகளையும் தொற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ஒரு சைவ ஹோட்டலில் மதிய சாப்பாடு 225 ரூபாய். இதற்கும் அது ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல் அல்ல. சற்று வித்தியாசமாக்கப்பட்டுள்ள ஒரு ரெஸ்ட்டாரெண்ட் அவ்வளவே! ஆனாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெயரைப் பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதிய ஆடம்பரக் கலாச்சாரம் ஒவோர் விசயத்திலும் தொடர்கிறது. அது பொருட்களின் விலை உயர்வுக்கு காரண்மாகிறது. இந்தியாவ்லும் சீனாவிலும் இத்தகை ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு புதிதாக ஆட்பட்டோரின் எண்ணிக்கை பெருகிவிட்ட காரணத்தினால் தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாக வெள்ளை மாளிகை உணவு அறிக்கையை வெளியிட்டது. ஒரு பெரிய பொருப்பில் இருக்கும் ஆட்சித் தலைவர் ஒருவர் சம்பந்தமில்லாமல் ஒரு காரணத்தை சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக பொருளாத விசயத்தில். எனவே அமெரிக்க அதிபர் கூறும் காரணம் புறக்கணித்தக்க ஒன்றல்ல. அதனால் தான் டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபரின் குரலை, வெளியுலகம் சற்றென்று புரிந்து கொள்ள முடியாத வாறு சற்று மாற்றி,  குற்ற்ம் சாட்டாமல் அறிவுரையாக கூறியுள்ளார். ஆடம்பரமாக வாழாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவுரை முஸ்லிம்களுக்கு புதிதல்ல. இஸ்லாமின் பொருளாதார வழிகாட்டுதலில் இந்த இரண்டு அறிவுரைகளும் பிரதானமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் முஸ்லிம்களிக்கு கற்றுக் கொடுக்கிற பண்புகளில் ஜுஹ்து என்ற துறவு மனப்பான்மை பிரதானமானது. வீடுவாசலைத் துறந்து காட்டிலே கடுந்தவம் புரிபவர்களிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் இந்த ஜிஹ்து துறவு மனப்பான்மை இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனும் மக்களும் என்னை நேசிக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்றுகேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். துறவு கொள் இறைவனும் மக்களும் உன்னை நேசிப்பார்கள் என்று பதிலளித்தார்கள். (இப்னுமாஜா)&lt;br /&gt;&lt;br /&gt;துறவு என்ற வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப் படுகிற பொருள் ஒன்று உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு. வண்ணவண்ணமான ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு. ருசி ருசியாண உணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு. சம்பத்திக்கச் செல்லாமல் பிச்சை எடுத்து உண்பது துறவு,குடும்பமாக வாழமல் தனிமனிதனாக வாழ்வது துறவு என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது. அந்தப் பொருள் இறை வேதங்கள் எதுவும் கொடுத்த பொருள் அல்ல. சில போலி சம்ய வாதிகள் மக்களிடம் அனுதாபத்தையும் தனி மரியாதையையும் பெறுவதற்காக தாங்களே உருவாக்கிக் கொண்டதாகும். திருக்குரான் இந்த உண்மையை பிட்டு வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உன்மையில் வேதங்கள் கற்றுக் கொடுக்கும் துறவு இதுவல்ல. உண்மையன சமயத் தத்துவங்கள் கூறும் துறவு என்ன என்பதை இஸ்லாம் வெளிப்படுத்துகிறது. இந்த உலகில் காணப் படும் நல்ல இன்பங்களை அனுபவித்துக் கொண்டு அதில் எல்லை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கற்றுத்தருகிற துறவு மன்ப்பான்மையாகும். ஏ.சி அறையில் தண்ணீர்ப் படுக்கையில் படுத்திருக்கும் ஒருவர் இது இறைவன் தனக்கு கொடுத்திருக்கும் அருள். இறைவன் நாடிவிட்டால் இது என்னிடமிருந்து நாளைக்கே பறிக்கப் படலாம் என்ற உணர்வை உள்ளத்திலே கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வாரானால் அவரும் துறவிதான். நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் சொன்னார்கள், இந்த உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலை நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும் என்று எதிர்பார்க்காதே! ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு வாழ்ந்து கொள். இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால் பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது. அதே நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக துறவுபூண்டுவிடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு இடத்திலும்  தேவைக்கு அதிகமாக செலவ்ழிப்பது ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான். ஆடம்பரம் இஸ்லாம் பெரிதும் வெறுக்கிற விசயம். ஆற்றின் கரையிலிருந்து முகம் கழுவுகிற போது கூட தேவைக்கு அதிகமாக தண்ணீரை உபயோகிப்பதை இஸ்லாம் தடுக்கிறது. தேவயானதை தேவையான விதத்தில் சாப்பிடவும் பருகவும் அனுமதிக்கிற திருக்குரான் வீரயம் செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறது. விரையம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று திருக்குரான் பல இடத்திலும் திரும்பத்திரும்பக் கூறுகிறது. இறைவனது விருப்பம் சாரத எதிலும் நன்மை இருக்க முடியாது.  ஒவ்வொரு தனிமனிதனும் யோசிக்க வேண்டிய விசயம் இது. தனிப்பட்ட வாழ்வில், விழாக்களில், பெருமைக்காக செய்யப் படுகிற ஆடம்பரங்களில் பெரிதாக எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஒரு திருமண விழாவில்  வாரியிறைக்கப்படுக்ற ஆடம்பரச் செலவுகளால் அந்த மணமக்களின் வாழ்வில் மகிழ்சி கூடிவிடப் போவதில்லை. ஆடம்பரத்தால நல்ல வாழ்கை தந்துவிடமுடியுமென்றால்  இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸூம் டயானாவும் பிரிந்திருக்கவே முடியாது, எனென்றால் 20 ம் நூற்றாண்டின் மிக ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் அது,&lt;br /&gt;&lt;br /&gt;ஆடம்பரமாக வாழாதீர்கள் அது  இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால் உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின் நலனையும் பாதிப்புக்குள்ளாகும்  என்பது பொருளாதார தத்துவமாக மாறியிருக்கிறது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது அறிவுரை அதீத செலவினத்தை தவிருங்கள் என்பது. அதாவது  கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள் என்கிறார். முன்பெல்லாம் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் வீட்டுக்கு என்ன தேவை என்பதை எழுதி எடுத்துக் கொண்டு போய் கடைகளைஇல் வாங்கி வருவார்கள். இப்போதை ஷாப்பிங் மால் கலாச்சாரத்தில் கண்ணில் தெரிவதை எல்லாம் வாங்கிக் குவிக்கிற பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு ஷாப்பிங்கின் போதும் ஒரு புதிய பொருள் வீட்டுக்கு வருகிறது, இது தேவையானது தானா எனபது சரியாக யோசிக்கப் படுவதில்லை. கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது இலவசங்களின் தாக்கம் அந்த யோசனையைத் தடுத்துவிடுகிறது. இதுவும் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மன்மோகன்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வீட்டில் எத்தனை படுக்கைகள் இருக்கலாம் என்பதை சொல்லுகிற போது. குடும்பத் தலைவருக்கு ஒரு  படுக்கை, அவரது மனைவிக்கு ஒரு படுக்கை. விருந்தாளிக்கு ஒரு படுக்கை இருக்காலம். (தேவையற்று இருக்கும்) நான்காவது படுக்கை சாத்தானுக்குரியது என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்றைத வாங்கிக் குவிப்பதை சாத்தானிய குணம் என சம்யங்கள் வர்ணித்தன. அதையே விலைவாசி உயர்வுக்கான மற்றொரு காரணம் என இப்போது டாக்டர் மன்மோகன் சிங் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும் பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின்  பல்ஸையும் பாதிக்கிறது என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் “அந்த”தேசமும் வளம் பெறும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை உங்களது பர்ஸை திறக்கிற போது. இந்த ஈமானியத் துறவு முதலில் தலையை காட்டடும். பிறகு காந்தியின் தலை வெளியே சிரிக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-2255985074390856965?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/2255985074390856965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=2255985074390856965' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/2255985074390856965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/2255985074390856965'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/07/2008.html' title='கொஞ்சம் துறவு... जून 2008'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-8414020912054319150</id><published>2008-03-09T11:35:00.000-07:00</published><updated>2010-12-08T19:07:04.463-08:00</updated><title type='text'>ஊர்வலங்களில்.. இஸ்லாம்..</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள்  என்று என்று அழைக்கப்படுகிற்து.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆஸூரா என்றால் பத்தாவது என்று  பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும்.  10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவில் அன்று  தேசிய விடுமுறை விடபப்டுகிறது. அடுத்த நாள் செய்த்தித் தாள்களில் முஹர்ரம் ஊர்வலங்களைப் பற்றிய செய்திகள் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். கத்தி போடுதலும் நெஞ்சில் அடித்துக் கொள்ளுதலும் விஷேசமாக காட்டப் படும். இந்த ஆண்டு வித்தியாசமாக முஹர்ரம் தீ மிதியை காட்டினார்கள். காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதையும், தடையை மீற முயன்றவர்களை ராணுவம் விரட்டுவதையும் கூட காட்டினார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தேகம் இருந்த்து. நமது நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்புக்கு விடுமுறை இல்லை. முஹர்ரம் 10 க்கு மட்டும் லீவு விடுகிறார்களே ஏன்? ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா? அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில வருடங்கள் பிடித்தது. இந்த விடுமுறை நம்மைப் போன்ற முஸ்லிம்களுக்காக அல்ல. ஷியாக்களுக்காக விடப்பட்ட விடுமுறை இது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக இன்னொரு ஒரு கேள்வி இருந்த்து. ஷியா என்றால் யார்? இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக? இந்தக் கேள்விக்கு அந்த வயதில் ஒரு விளக்கம் கிடைத்தது. ஷியா என்பவர்கள் அலியார் கூட்டத்தை சார்ந்தவர்கள். தங்களை முஸ்லிம் என்று நிரூபித்துக் கொள்வதற்காக இதை எல்லாம் செய்து காட்டுகிறார்கள் என்ற கருத்துக் கிடைத்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது நக்கல் மிகுந்த ஒரு விமர்ச்சனம் என்பது எனக்கு பின்னாள் புரிந்த்தது. அப்போது அலி(ரலி)யாருக்கும் அவரது மகனும் பெருமானார்(ஸல்) அவர்களின் பேரருமான ஹுசைன் (ரலி) அவர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லை என்பதும்,அவர்களது பெயைர்ச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திய ஒரு பிரிவினர்களே இவர்கள் என்பதும் பின்னர் தெளிவாகிய விசயங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலி (ரலி) அவர்களது குடும்பத்தோடு மாத்திரமல்ல இஸ்லாத்தோடும்  கூட அவர்களது தொடர்பு மிக மெலிதானதே! அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப் பட்ட  ஒரு அரசியல் பிரிவாக வளரத் தொடங்கிய இவர்கள் காலப் போக்கில் ஒரு சமயப் பிரிவாக அடையாளம் காணப் பட்டாலும் சில மெல்லிய இழைகளே அவர்களயும் இஸ்லாம் என்ற சொல்லையும் பிணத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய சமய நம்பிக்கை களிலிருந்தும் அதன் வழிகாட்டுதல் களிலிர்ந்தும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள்.  முஹர்ரம் 10 ம் நாளன்று அவர்கள் செய்து காட்டுகிற வித்தைகளும் விபரீதங்களும் இதற்குச் சான்று&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இஸ்லாத்தில் முதன் முதலாக தோன்றிய தீவிரவாதக் குழுவான காரிஜிய்யா எனப் படுவோரால் முஹம்மது (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள் அப்போது  ஏற்பட்டஅனுதாபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஒரு குழுவினர் உருவாக்கிய தத்துவம் தான் ஷீஇய்யத் எனப்படும் ஷியா தத்துவம்.  அலி ரலி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன் ஹுசை (ரலி) அவர்கள் அரசியல் இடைத்தரகர்களின் கொடுஞ்செயலால் ஹிஜ்ரீ 61 ம் ஆண்டு முஹர்ரம் 10 ம் நாள்  (கீ.பி .680 அக்டோபர் 10 ) இராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் படுகொலை செய்யப் பட்டார்கள். அப்போது ஏற்பட்ட் குழ்ப்பத்தை  பயன்படுத்தி பெருமளவில் தங்களுக்கு ஆதரவை திரட்டிக் கொண்டார்கள் ஷியா தத்துவத்தின் உற்பத்தியாளர்கள்.  அந்த ஆதரவை  தக்கவைக்கவும் தங்களது கொள்கைய நியாயப் படுத்திக் கொள்ளவும் ஆண்டுதோர்றும் முஹர்ரம் 10 இந்த வேடிக்கை விநோதத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாத்தான். நடந்து விட்ட சோக நிகழ்வுக்காக அவர்கள் வருந்தினாலும் கூட மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரசியல் குறுமதியாளர்களின் சூழ்ச்சிக்குள் அவர்கள் பலியாக வில்லை. இத்தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள். இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வர்களுக்கு உதவியது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் ஹுசைன் (ரலி) அவர்களை தங்களது பிரச்சினையில் இழுத்து விட்டு பிறகு அவரை நட்டாற்றில் சிக்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டுப் போனவர்கள் தங்களது போலியான பற்றை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசிய்ல வளர்சிக்கும்  இந்த வழிமுறையே சிறந்த்தது என்று இதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.  அதனால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையு வழிகாட்டு தலையும் பறி கொடுத்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஹர்ரம் ஊர்வலங்களின் போதும் அதை தொடர்ந்து நடக்கிற நிகழ்சிகளின் போதும் நடக்கிற விசயங்கள் எதுவும் இஸ்லாமிய விழுமியங்களுக்கோ அதன் வழிகாட்டுத்லுக்கோ உடன்பாடனதோ ஒப்பானதோ அல்ல. மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று முழு உலக்மும் புரிந்து வைத்திருக்கிறதோ அதற்கு நேர் மாறானவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் உத்திரவு என்பதும் அதே போல யாருடைய இறப்பிற்காக வும் ஓலமிட்டோ நெஞ்சில் அடித்துக் கொண்டோ சட்டையை கிழித்துக் கொண்டோ அழக்கூடது என்பது இஸ்லாமின் திட்டவட்டமான வழிகாட்டுதல் என்பதும் முழு உலகுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் தெருவில் உள்ள இந்துப் பாட்டிக்கு கூட யார் சாவுக்கும் முஸ்லிம்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என்பது தெரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் தெளிவானது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும்(ஆணும்) ஒரு இறப்பிற்காக  மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனை இழந்த பெண்ணைத்தவிர அவள் நான்கு மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ( ஸஹீஹுல் புகாரி 5334)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(துக்கத்தில்) கன்னத்திஅடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக்காலத்து ஒப்பாரி வைப்பவனும் நம்மாச் சார்ந்தவன் அல்ல. (( ஸஹீஹுல் புகாரி 1294)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துக்கத்தில் மொட்டை அடித்துக் கொள்பவனும், ஒப்பாரி வைப்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அபூதாவூது 2733)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவர்கள் ஆண்டுதோரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு அழுகிறார்கள், ஒப்பாரிப் பாட்டு பாடுகிறார்கள். கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்கிறார்கள், உடலை கீறிக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹம்சா (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும், மகன் இபுறாகீம் (ரலி) அவர்களின் இறப்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள பெரிதும் பாத்தித்தவை. ஆனால் அதற்காக பெருமானார் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த  போது முஸ்லிம் சமுதாயத்திற்கு அதைவிட்ப் பெரிய துக்கம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹஜ்ரத் அலி, ஹுசைன் (ரலி)  போன்ற  முஸ்லிம்கள் எவரும் ஒப்பாரி வைக்கவோ ஓலமிடவோ இல்லை. ஏன் இப்போது கூட ஷியாக்கள் பெருமானாருக்காக அழுவதில்லை. ஹுசைன் (ரலி) அவர்களுக்காக மட்டும் செய்யப்படுகிற இந்த ஆர்ப்பாட்டங்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புடையது அல்ல. நண்பர் சொன்னது போல குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலப் போக்கில் ஷியாக்களில் பல பிரிவிகள் ஏற்படத்தொடங்கியது ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களைவிட வேகமாக இஸ்லாத்திலிருந்து அன்னியப் பட்டனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பத்ரிக்கைகளுக்கும் மீடியக்களுக்கும் ஷியாக்களின் முஹர்ரம் கூத்துகள் வேடிக்கையாக இருப்பதால் இது போல ஒரு வேடிக்கை முஸ்லிம்களின் மற்ற விஷேசங்களில் இல்லை என்பதால் இதை பெரிதாகக் காட்டுகின்றன. இதன் காரணமாக்வே முஹர்ரம் ஊர்வலங்கள் பிரபலமடைந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஹர்ரம் 10 நாளை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும், அன்றைய தினத்தில் நோன்பு நோற்கச் சொன்னதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் நோன்பிற்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் முஹர்ரம் 10 ஐ இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதை ஹீசைன் (ரலி) அவர்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தி புரிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பலரும் முஹர்ரம் 10 என்றதும் ஹுசைன் (ரலி) அவர்களையே நினைவு கூறுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதேட்சையாக ஆஷூரா நாளன்றோ அல்லது அதற்கு சமீபத்தில் வருகிற வெள்ளிக்கிழ்மை அன்றோ ஜுமா உரை நிகழ்த்துகிற இமாம்கள் பலரும் கர்பலாவைப் பற்றிப் பேசுகின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கர்பலாவின் சோக நிகழ்வுகளும், அததிலிருந்து சமுதாய்ம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் சொல்லப் பட வேண்டியவை தான் என்றாலும் அது ஆஷூராவின் சிறப்பு குறித்து தவறான புரிதலை ஏற்ப் படுத்துவதால் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அல்லது இரண்டு விசயத்திற்கும் இடையே எந்த தொடர்புமில்லை என்பதை புரிய வைத்து விட்டு கர்பலாவைப் பற்றிப் பேசலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் மூலம் இஸ்லாம் ஆஷூரா நாளன்று நோன்புக்கு உத்தரவிடப்பட்ட&amp;nbsp; பிறகு அறுபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் ஏற்ப்பட்ட&amp;nbsp; ஒரு பெரும் விபத்து என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இஸ்லாம் ஆஷூர நாளை சிறப்பித்துச் சொன்னதற்கான காரணம் வேறு. அன்று தான்  நபி மூஸா (அலை) அவர்களுக்கும்  யூதர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிவிட்டது அந்த வழியாக அவர்கள் பிர் அவ்னிடமிருந்து தப்பித்தார்கள்.  மனித சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் உரிய ஒரு விசயத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அன்றைய தினம் நோன்பு நோற்கும்படி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஹம்மது (ஸல்) அவ்ர்கள் மதீனாவுக்கு வந்த போது அங்கிருந்த யூதர்கள் ஆஷூரா நாளன்று நோன்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை கேட்டார்கள். அதற்கு பதிலளித்த யூதர்கள் ஆஷூரா நாளில் தன் மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் பிர் அவ்னுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை அளித்தான் அந்நாளை கண்ணியப் படுத்த்வே தாங்கள நோன்பு நோற்பதாக கூறினர். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களையும் நோன்பு நோற்க உத்தரவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட  நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அழுத்த்மான காரணம்  இருந்த்து.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூஸா (அலை) அவர்கள் ஒரு நபி.  இலட்சியவாதி. கொள்கையாளர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லட்சியவாதிகளுக்கு வாரிசுகளாக அவர்களது கொள்கையை கடைபிடிப்பவர்களும் அதை முன்னெடுத்துச் செல்பர்களும் தான் இருக்க முடியுமோ தவிர அவருடைய பிள்ளைகளோ குடும்பத்தினர்களோ அல்ல. தேசத் தந்தை காந்தி, ஒரு இலட்சியவாதி இந்திய மக்களின் முன்னோடி என்றால் அவரது உண்மையான வாரிசுகள் அவரது கொள்கை வழியை பின்பற்றுவோறே தவிர அவருடைய குடும்பத்தினர் அல்ல.குடும்பத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைக்கலாம். அவரது கொள்கை வழியில் செல்லாமல் அவருக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது.  இந்த நாட்டில் காந்தீய வாதிகளுக்கு கிடைத்த் மரியாதை காந்தியின் சொந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை அல்லவா? அது போலத்தான் நபிமார்களுக்கும் அந்நபிமார்களது கொள்கையை பின்பற்றுபவர்கள் தான் வாரிசாக உரிமை கொண்டாட முடியும். (நபிமார்கள் சொத்துக்களுக்கு கூட அவர்களது சொந்தப் பிள்ளைகள் வாரிசுரிமை கோரமுடியாது. அது வேறு விசயம்.) அந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களது குடும்பத்தினர் என்ற அடிப்படயில் யூதர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனல் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்து கொடுத்த தவ்ராத்தின் நேரிய வழியிலிருந்து அவர்கள் வெகு தூரம் விலகிவந்து விட்டனர். முஹம்மது (ஸல்) அவர்களோ அந்த நபித்துவத்தின் தொடர்ச்சியாக அதே சத்திய நெறிய இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் போதித்து வந்தார்கள். முஸ்லிம்களோ அன்னாரது வழியை இழை பிசகாது கடைபிடித்து வந்தார்கள் என்வே தான் மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக அருகதை உடையவர்கள் என்று கூறிய முஹம்மது (ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்கும் படி உத்தர்விட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடமிர்ந்து முஸ்லிம்களின் நட்வடிக்கைய வேற்படுத்திக் காட்டுவதற்காக முஹர்ரம் 9 ம் நாளும் நோன்பு வைக்கச் சொன்னார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த  6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல்  பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற  செய்தியாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூஸா (அலை) காப்பாற்றப் பட்டார்கள் என்பத்தை மட்டுமல்ல் மனித வாழ்வின் செம்மையான போக்குக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை இந்நிகழ்சி தருகிறது என்பதையும் சேர்த்து எண்ணிப்பார்த்து நோன்பு வைத்தால் அந்த நோன்பின் அர்த்த பரிமாணம் கனமானதாக இருக்கும் கத்தி வீசும் காரியங்களை விட.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-8414020912054319150?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/8414020912054319150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=8414020912054319150' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/8414020912054319150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/8414020912054319150'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/03/blog-post_2405.html' title='ஊர்வலங்களில்.. இஸ்லாம்..'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-2004241465661955994</id><published>2008-03-09T11:28:00.000-07:00</published><updated>2008-03-09T11:33:06.893-07:00</updated><title type='text'>நல்லதொரு குடும்பம்</title><content type='html'>ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தருகிற விளக்கத்தின்படி  துல் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில்  உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான்.  அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;சில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா? அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா? என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.&lt;br /&gt;ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.&lt;br /&gt;இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.&lt;br /&gt;அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும்  வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.&lt;br /&gt;ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித  சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.&lt;br /&gt;ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.&lt;br /&gt;குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.&lt;br /&gt;கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.&lt;br /&gt;ஆபாசமாக நடிக்கிற  நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.&lt;br /&gt;தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.&lt;br /&gt;அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது  சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள். &lt;br /&gt;இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை. &lt;br /&gt;குடும்ப  வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.&lt;br /&gt;கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது.  பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்?  என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.&lt;br /&gt;இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.&lt;br /&gt;இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.&lt;br /&gt;இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd! eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;&gt; ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf! ,d;Dk;&gt; gpd; tUk; kf;fspy; vdf;F eP ew;ngaiu vw;gLj;Jthahf! (26:84&gt;) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.&lt;br /&gt;ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல.  ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?&lt;br /&gt;ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு  வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.&lt;br /&gt;இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.&lt;br /&gt;ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.&lt;br /&gt;ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும்  பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.&lt;br /&gt;நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம்  உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.&lt;br /&gt;எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)&lt;br /&gt;பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான். &lt;br /&gt;ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய  இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.&lt;br /&gt;மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு  தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு,  ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.&lt;br /&gt;மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய  அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது. &lt;br /&gt;இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.&lt;br /&gt;உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.&lt;br /&gt;உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில்  சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.&lt;br /&gt;ஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை -  நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)  &lt;br /&gt;ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.&lt;br /&gt;இஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது,  அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.&lt;br /&gt;ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!&lt;br /&gt;இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்&lt;br /&gt;எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)   &lt;br /&gt;ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள்  தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.&lt;br /&gt;ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.&lt;br /&gt;ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை  ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.&lt;br /&gt;உங்களுக்கு?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-2004241465661955994?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/2004241465661955994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=2004241465661955994' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/2004241465661955994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/2004241465661955994'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/03/blog-post_09.html' title='நல்லதொரு குடும்பம்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-7035951447952876266</id><published>2008-03-09T10:50:00.000-07:00</published><updated>2008-03-09T10:51:26.861-07:00</updated><title type='text'>இந்தத் தலைமுறையோடு</title><content type='html'>1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ளிவாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு வாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். சனிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்படுத்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர்? ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே! ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந்த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.மு.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-7035951447952876266?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/7035951447952876266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=7035951447952876266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7035951447952876266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7035951447952876266'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/03/blog-post.html' title='இந்தத் தலைமுறையோடு'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-6481657868712109567</id><published>2008-01-12T06:02:00.000-08:00</published><updated>2008-01-12T06:03:24.889-08:00</updated><title type='text'>ஹஜ் பயணிகள் கவனிக்கவும்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஹஜ் என்ற வார்த்தைக்கு மக்கா நகரிலுள்ள கஃபா ஆலயத்திலும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணித்தல் என்பது பொருள். இதை முஸ்லிம்களின் இறுதிக்கடமை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அது தவறானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மாhக்கத்தின் தனிநபர் கடமைகளில் பிரதானமான ஜந்து கடமையை குறிப்பிடுகிற போது ஹஜ்iஐ இறுதியாக குpறப்பிட்டார்கள் என்பதனால் ஹஜ் இறுதிக் கடமை என்னும் சொல் வழக்கில் வந்தவிட்டதே அன்றி ஒரு முஸ்லிம் நிiவேற்ற வேண்டிய கடமைகளில் ஹஜ் இறுதியானதுமல்ல. அவர் தனது வாழ்வின் இறுதிககட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமை என்றும் அதற்கு அர்த்தமில்லை. ஹஜ்ஜுக்கு அப்பாலும் ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு. அது போல ஹஜ் கடமையை நிறைவேற்றும் வசதி வந்தவிட்டால் வாழ்நாளின் இறுதி கட்டத்திற்கு என்று அதை ஒத்திவைக்கக் கூடாது உடனே நிறைவேற்றி விடவேண்டும்&lt;br /&gt;ஹஜ் இஸ்லாம் மார்க்கதின் பிரதான கடமைகளில் ஒன்று தான் எனினும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயமானதல்ல. பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம், பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் வாய்க்கபட்ட முஸ்லிம்கள் மீது மட்டுமே இது கடமையாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்நிபந்தனைகள் பொருந்தும். பெண்கள்களை பொருததவரை பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் என்பதோடு பாதுகாப்பான சூழல் என்பதும் கவனிக்கப்படும்.  அதனால் தகுந்த ஒரு பாதகாவலர் கிடைத்hல் மட்டுமே அவர் மீது ஹஜ் கடமையாகும்.&lt;br /&gt;பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கஃபா ஆலயத்iயொட்டி ஹஜ் உம்ரா ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டு வந்தது என்றாலும் காலப்போக்கில் அதன் அடிப்படை அம்சங்களில் தூய்மையும் வாய்மையும் அற்ற சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. ஹீஜ்ர்p ஒண்பதாம் ஆண்டில் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதில் தகுந்த சீhத்திருத்தங்களை செய்து இஸ்லாமிய உம்ரா இஸ்லாமிய ஹஜ் என்பதற்கான வரையரைகளை ஏற்படுத்தினார்கள். அன்றிலிருந்து இடைவெளியில்லாது ஹஜ் கடமையை முஸ்லிம்கள் மிகுந்த உற்காசத்தோடும் பக்தியுணர்வோடும் நிறைவேற்றி வருகிறார்கள். &lt;br /&gt;ஹிஜ்ரீ 1428 ம் ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது. தென்னாப்pக்காவிலிருந்து உலகின் முதல் ஹஜ் குழு நவம்பர் 12 ம் தேதி ஜித்தாவின் மன்னர் அப்தல் அஜீஜ் விமானநிலையத்தில் வந்து இறங்கியிரக்கிறது.&lt;br /&gt;ஆஜர்பைஜான் நாட்டிலிருந்து இருவர் கால்நடையாகவே இந்த ஆண்டு ஹஜ்ஐஜ நிறைவேற்ற வந்தள்ளதாக சவூதியின் ஹஜ் அமைச்சக நெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஷாகித் கோர்பத்தோவ், சாகிப் கெஜிமோவ் என்ற அந்த இருவரும் 3 மாதங்களுக்கு முன் தங்களத பயணத்தை தொடங்கி இரான் துர்க்கி சிரியா ஜோர்டான் வழியாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தள்ளனர். இந்த ஆண்டு சுமார் 10.700 பேர் சினாவிலிருந்து ஹஜ் செய்ய உள்ளனர். சீனாவின் சமீபத்திய வரலாற்றில் இதுவே மிக அதிகம் என்று அஸோஸியேடட் பிரஸ்ஸின் செய்தி குறிப்பிடுகிறது.&lt;br /&gt;இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஒருலட்சத்து 57 ஆயரம்  பேர் புனிதப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 1990 ம் ஆண்டு 24 அயிரத்து 200 பேர் என்ற அளவிலிருந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 15 வருடங்களில் 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளாதாரா வளம் பரவலாகியதும் பயணம் செய்யும் வசதிகள் பெரகியதும் தொலை தொடர்பு வசதிகளின் பெரக்கமும் இதற்கு காரணங்களாகும். ஹஜ்கமிட்டி மூலமாக  55,278 ஆண்களும் 47,181 பெண்கள் உட்பட 1,02,459 பேரும்  மற்றவர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் பயணமாகவுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை ஹஜ்ஜீக்கு சென்றவர்களில் இதுவே அதிக பட்ச அளவு என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளில் இந்தோனேசியாவிற்கு அடுத்த படியாக ஹாஜிகள் பெருமளவில் கலந்து கொள்ளும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது.&lt;br /&gt;இந்தியாவிலிருந்து  ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வோரின் முதல் குழு 259 இந்தியப் பயணிகளுடன் நவம்பர் 11 ம் தேதி லக்னோவிலிருந்து புறப்பட்டது விட்டது என்றாலும் தமிழ்நாட்டிலிரந்து ஹஜ்கமிட்டி மூலம் பயணமாகின்ற  சுமார் 4 ஆயிரம் பேர் நவம்பர் 29 ம் தேதி முதல் தங்கள் பயணத்தை துவங்க உள்ளனர். டிசம்பர் 5 ம் தேதி  வரை 9 விமானங்களில் அவர்கள் பயணம் செய்ய உள்ளார்;கள். இது தவிர ஏராளமானோர் தனியார் நிறுவனங்கள் மூலமாக தங்களது கடமையை நிறைவேற்றவள்ளனர். &lt;br /&gt;ஹாஜிகளுக்கான பயிற்சி முகாம்களும் வழியனுப்ப விழாக்களும நாடு முழவதும்; நடந்து வருகின்றன. ஹஜ் வியனுபபு விழாக்களில் ஹஜ் பயணம் செல்வோர் மட்டுமல்ல வழியனுப்புவோர் கூட ஒரு வித கிளாச்சியோடும் உற்சாகத்தோடும் பங்கே;றபது இந்த விழாக்களின் சிறப்பம்சம். புக்தியுமு; மகஜழ்சியும் கண்ணீராக பெருக்கெடுக்கிற தருணம் அது.&lt;br /&gt;ஹாஜியை வழியனுப்புகையில் அவரிடம் எ;களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பது பெரமானாரின் வழிமுறை. ஊமர் (ரல) அவர்கள் தான் அறியாமைக்காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஒரு உம்ராவை நிறைவேற்ற அனுமதி தருமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் கேட்ட போது அவருக்கு அனுமதி வழங்கிங பெருமானார் உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை மறந்துவீடாதீர் சகோதரரே என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக பிரார்த்தன செய்ய கேட்டுக்கொள்வார்கள். ஆனால் ஹாஜிகள் அத்தனைபேரும் ஒரே ஒரு கோரிக்கை முன்வைத்து மற்றவர்களை தங்களுக்காக பிராhத்திக்ச் சொல்வார்கள். எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்றே கேட்பார்கள்.&lt;br /&gt;இது ஈமானிய குணம். உன்னதமான மனிதர்களின் வழிமுறை. நபி இபுறாகீம் (அலை) கஃபாவை கட்டி முடித்தபிறகு இப்படித்தான் பிரார்த்தனை செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.&lt;br /&gt;இப்ராஹீமும், இஸ்மாயீலும் கஃபாவின் அஸ்திவாரத்தை  உயர்த்திக்கட்டிய  போது, ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'' (என்று கூறினர்). (2:127)&lt;br /&gt;இந்த கோரிக்கை உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.இது பற்றிய கவலை ஒரு ஹாஜியின் சிந்தனையை எந்த நேரமும் ஆக்ரமித்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஓரு முஸ்லிம் ஹஜ்கடமை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து செய்யப்படுவதாக இருந்தாலும் சரி  அந்தச் செலவு பிரதானமல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தோனேஷியால் கல் வியாபாரம் செய்பவர்;;. ஜகார்த்தாவில் தங்களது வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஹஜ் செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார். ஏங்களுரில் இந்த ஆண்டு ஹஜ்கடமை நிறைவேற்ற இருக்கிறவர்களில் ஒரு தம்பதியினர் தங்களது பெரிய வீட்டை விற்று ஹஜ்ஜுக்கு செல்கின்றர். ஓரு பெண்மணி தன்னிடமிருந்த நகைகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்கிறார். ஆயினும் இநத்தகைய  செலவுகளால் ஒரு ஹாஜி மகிமை அடைந்துவிடுவதில்லை.&lt;br /&gt;அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.&lt;br /&gt;ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ  பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். &lt;br /&gt;ஆனால் ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராhத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும். எனவே ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும். அத்தோடு ஹஜ்ஜின் போது கைகொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்; அதிக செலவு பிடிக்கிற சிரமமான ஹஜ் என்கிற கடமையை ஹஜ்ஜன் மக்பூலன் வ மப்ரூரன் அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.&lt;br /&gt;ஹாஜி அன்று பிறந்த குழந்தை போல வீட்டுக்கு திரும்புகிறார் என்ற நபிமொழியை கவனித்தப் பாhருங்கள்.&lt;br /&gt;ஹஜ்ஜை மாசுபடுத்தகிற செயல்கள் மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல புகாரி -1521)&lt;br /&gt;இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் எந்த நிலையிலும் ஹாஜி நினைவில் வைக்க வேண்டியவை.&lt;br /&gt;முதலாவது, ஹஜ் அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றப்பட வேண்டும்.&lt;br /&gt;இந்த வாசகம் ஒரு முஸ்லிம் அடிக்கபடி கேள்விப் படுகிற அல்லது உபயோகப்படுத்தகிற வாசகம் எனினும் அவர் அதிகமாக ஏமுhறுகிற விசயமும் இது தான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;ஹாஜி இந்த ஏமாற்றுத்திற்கு ஒரு போதும் ஆளாகிவிடக் கூடாது. நான் அல்லாஹ்விற்காhக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.&lt;br /&gt;நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்பதோ, பணவசதி இருப்பதால் கிடைத்த  வாய்ப்பு என்றோ, ஒரு சுற்றுலா அனுபவம் என்றோ, ஹாஜி என்ற பட்டம் கிடைக்கும் என்றோ அல்லது  எந்தச் சிந்தனையும் அற்ற ஒரு கிளாச்சியூட்டும் பயணமாகவோ ஒரு ஹாஜி தன் பயணத்தை அமைத்துக் கொண்டு விடக் கூடாது. இது அல்லாஹ்வுக்கான பயணம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்தப் புகழும் மரியாதையும் என்கு பிரதானமல்ல. இதன் நற்கூலியை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன் என்கிற விசயத்தை அறிவும் மனதும் தெளிவடையும் வண்ணம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தன்னுடைய ஹஜ் அங்கீகரிகப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஹாஜியின் முதல் கடமையாகும்.       ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.&lt;br /&gt;மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல் நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.&lt;br /&gt;ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய  அந்தஸ்த்தை பெற இது உதவும்.&lt;br /&gt;நபிமொழி தருகிற இரண்டாவது எச்சரிக்கை ஹாஜி, ஹஜ்ஜை மாசுபடுத்துகிற செயல்களை செய்யக் கூடாது. &lt;br /&gt;ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.&lt;br /&gt;''இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன் அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன்'' (என்று நபியே! நீர் கூறுவீராக). (27:91) என்று திருக்குர்ஆன் கூறுகிறது&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;மற்றொரு நபிமொழி பின்வரமாறு கூறுகிறது&lt;br /&gt;அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை.  எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது.  எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது.  இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது.  இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்)  அவர்கள் கூறினார்கள்.  அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள்.  அதற்கு நபி (ஸல்)  அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.&lt;br /&gt;வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி  1833)&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு சமயம் மக்காவை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.இது பூமியிலுள்ள சிறந்த இடமாகும். அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடமாகும். நூன் நிர்பந்மாக வெளியேற்றப்படடிருக்காவிட்டால் இந்த இடத்திலிரந்து வெளியேறியிருக்க மாட்டேன் (அஹ்மது) &lt;br /&gt;மக்காவைப் போலவே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்புத் தகுதியை சட்டரீதியாக பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை தென்பட்டது. உடனே, இந்த மலை நம்மை நேசிக்கின்றது நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் மதீனா நகரை புனிதமானதென அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள். (புகாரி 7333)&lt;br /&gt;மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள் அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும் என்று கூறினார்கள்.&lt;br /&gt;மதீனாவின் ஒரு பகுதியை சொர்க்கத் தோட்டம் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அறிவித்துள்ளார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்;கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது. என்று அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 7335)&lt;br /&gt;எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தெழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. ஏன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி  1190)&lt;br /&gt;இது போல இன்னும் ஏராளமான நபிமெழிகள் மக்கா மதீனா நகரின் புனிதத்தன்மையை பற்றியும் அங்குநடற்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பேசுகின்றன. எனவே ஒரு ஹாஜி இது அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதராலும் புனிதப்படுத்தப்பட்ட இடம் என்ற மரியாதையை மனதில் இருத்திச் செயல்பட்டால் அவரது ஹஜ் அங்கீகாரம் பெறத்தேவையான அம்சங்கள் அனைத்தும் அவரிடம் தானவே வந்துவிடு;ம்.&lt;br /&gt;புனிதமான இடங்களில் நற்காரியங்களுக்கு அதிக நன்மை கிடைப்பது போலவே தீயசெயல்கள் பெருங்குற்றங்களாக ஆகிவிடும் ஆகவே ஹாஜி ஹஜ்ஜுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையம் செய்யக் கூடாது. பிற ஹாஜிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்யக் கூடாது.&lt;br /&gt;இதிலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சாஹிப் சமீபத்தில் தான் ஹஜ்ஜீக்கு சென்ற போது முதல் நாளில் நடற்த அதிர்சிசியான தொரு அனுபவத்தை சொன்னார். அவர் உணவருந்துவதற்காக ஹஜ் சேவை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை வேறு யாரும் உட்கார்ந்து விடாதபடி துண்டை போட்டு ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். அருகில் போய் யாரும் இங்கு வருகிறார்களா என்று கேட்டிருக்கிறார். அது தான் விவகாரமாகிவிட்டது. அந்தப் பெரியவர் வாயில்வந்தபடி கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவ்வார்த்தைகளை கேட்டு  அந்த சாப்பாட்டு அரங்கமே அதிர்ச்சியல் உறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.&lt;br /&gt;பெருமானாரின் தோழர்கள் எப்படி நடந்த கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஹாஜிகளுக்கு போதுமான எச்சரிக்கை தரும்.&lt;br /&gt;அப்துல்லாஹ்பின உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வருகிற பொது ஹரமுடைய எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதானால் அந்த இடத்திற்கு வந்தவிடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கிற பொது தடிப்பமான வார்த்ததைகள் வந்துவிடக்கூடும். அவ்வார்த்தைகள் ஹரமின் புனிதன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரிதாகிவிடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.     &lt;br /&gt;எனவே ஹாஜி இஹ்ராமுடைய நிலையில் மனைவியோடு சல்லாபிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது போலவே  சக ஹாஜிகளுக்கு சங்கடம் தருவதையும் தவிர்கக வேண்டும். வார்த்தகைளால் வழக்ககாடுவதை தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;அந்தப்புனித பூமியில் நிறைந்து காணக்கிடைக்கிற அல்லாஹ்வின் அற்புதங்களை ஹாஜி எண்ணிப்பார்ப்பது அவரது அந்த பகுதியின் கனபெருமானத்தை அவர் நினைவில் நிறுத்த உதவும்.&lt;br /&gt;கஃபாவே ஒரு அதிசயம். அதைப் பார்த்தவர் பார்த்துக் கெர்ண்டே இருக்கிறார். சலிப்பே ஏறபடுவதில்லை. கஃபாவை மக்கள் திரும்கத்திரும்ப வரும் இடமாக தான் ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2.125)   &lt;br /&gt;இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டுகிற போது ஏறி நின்ற ஒரு கல்லில் அவரது பாதச் சுவடுகளை பதிய வைத்த இறைவள் அந்தக்கல்லை இன்று வரை அங்கு பாதுகாத்து வைத்திரக்கிறான்.&lt;br /&gt;லட்சக்கணக்கான மக்கள் மக்காகவில் ஆண்டுதோறும் கூடுகிறார்கள். அங்கே அமைதி கொலுவிருக்கிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் அது அமைதியையும் பாதுகாப்பையும் தருகிறது. &lt;br /&gt;உலகின் பல பாகத்திலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வந்து  கூடுகிறார்கள்.அவர்களுக்குததேவையான உணவு தண்ணீர் உறைவிட வசதிகளுக்கு எந்தக குறைவும் எற்படுவதில்லை. அவரவர் கலாச்சாரத்திற்கேற்ற உணவையும் வசதியைiயும் அங்கு பெற்றுக் கொள்கிறார்கள். மனித நெருக்கடியை தவிர வேறு எதற்கும் அங்கு நெரக்கடி இல்லை. போக்குவரத்து வசதிக்கும் குறை இல்லை. செல்போன் சிக்னலில் கூட நெரக்கடி இல்லை. இதற்காககவெல்லாம் சவூதி அரசாங்கம் பெரும் முயற்சி எடுக்கிறது என்ற போதும் அந்த அரசாங்கமே கூட இது அத்தனையும் தனது முயற்சியால் நடக்கிறது என்று நம்பாது.       &lt;br /&gt;இத்தனை அதிசயங்களையும் கண்ணால் பார்க்கிற ஹாஜி தான் அல்லாஹ்வின் புனித பூமிக்கு தோந்தெடுத்து அழைத்துவரப்பட்டுள்ள பாக்கியசாலி என்ற எண்ணத்தை நினைவில் நிறுத்தி தனக்கான நேரத்தையும் வாய்பபையும் பயன்படுத்திக் கொள்வாரானால் அவர் மினா மைதானத்தில் சைத்தானை நோக்கி எறிகிற சிறுகற்களை மலக்குகள் எடுத்துச் செல்வார்கள். அது அவரது ஹஜ் அங்கீகரிக்ப்பட்டது என்பதற்கான அடையாளம்.&lt;br /&gt;லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கான பொடிக்கற்களை ஜம்ராவிலுள்ள தூனை நோக்கி எறிகிறார்கள். அங்கு வீசப்படுகிற கற்கள் என்னவாகின்ற என்று நபித்தோழர் அபூஸஈதில் குத்ரீ (ரலி)அவர்கள் பொருமானாரிடம் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யாருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானோ அவர் வீசும் கற்களை மலக்குகள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். (மஆரிபுல்குர்ஆன். பாகம் 1 பக்கம் 88)&lt;br /&gt;தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும். &lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-6481657868712109567?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/6481657868712109567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=6481657868712109567' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/6481657868712109567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/6481657868712109567'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/01/blog-post_12.html' title='ஹஜ் பயணிகள் கவனிக்கவும்!'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-8162606439207322602</id><published>2008-01-12T06:00:00.000-08:00</published><updated>2008-01-12T06:01:21.981-08:00</updated><title type='text'>தேவை ஒரு பக்தி மார்க்கம்.</title><content type='html'>அவர் ஒரு முஸ்லிம் அதிகாரி. வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மார்க்கப்பற்று மிக்கவர். ஓரு பள்ளிவாசலின் தலைமைப் பதவிக்கு அவருடைய பெயரை  பலரும் பிரேரனை செய்த  போது அப்பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் செய்யும் நற்செயல்களே குறைவுதான். அதையும் வீணடித்து விடக் கூடாதே என்ற கவலைதான் காரணம் என்று அவர் சொன்னார்.&lt;br /&gt;அந்த பதில் பலத்த யோசனையை கிளறி விட்டது.  சமுதயாத்திற்காக பணியாற்றும் ஒரு வாய்ப்பு அதிக நன்மையை பெற்றுதருவதாக அமைய வேண்டும். நம் மார்க்கம் அப்படித்தான சொல்லித்தருகிறது.&lt;br /&gt;ஓரு நபித்தோழர் ஜமாத்துடன் தொழுவதற்காக வேகமாக வந்த கொண்டிருந்தார். வழியில் ஒரு மரக்கிளை முறிந்து விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டு வருவதற்குள் தாமதமாகிவிட்டது. பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுகைகைய நிறைவு செய்தார். உள்ளுர ஒரு பயம் இருந்தது. தாமதமாக வந்ததற்காக பெருமானார் (ஸல்) கோபித்துக் கொள்வார்களோ என அவர் அஞ்சிக் கொண்டிருந்தார். அவர் பயந்ததது போலவே பெருமானார்(ஸல்) அவர்கள் அவரை அழைத்தார்கள். ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் கேட்ட கேள்வி வித்தியாசமாக இருந்தது. நண்பரே நீங்கள் என்ன நற்செயலை செய்து விட்டு வந்தீர்கள்! நீங்கள் செய்த காரியம் அல்லாஹ்விற்கு  மிகவும் பிடித்துவிட்டதே! நீங்கள்  செய்த காரியத்திற்காக அல்லாஹ் உங்களுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படி என்ன நற்செயலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். ஆந்த வார்த்தைககளை கேட்டு அந்த நபித்தோழர் அளவிலாத ஆனந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;அவர் மட்டுமல்ல அவரைப் போலவே மக்களுக்கு பயன்படுகிற சமூகத்தொண்டாற்றுகிற எவருக்கும் பெரும் மகிழ்ச்சியயை தருகிற வார்த்தைகள் தான் அவை. &lt;br /&gt;இவ்வாறு மக்களுக்கு ஆற்றிய சிறு தொண்டு ஒரு மனிதருக்கு இறைவனின் நேசத்தை பெற்றுத் தந்துவிட்டது என்று சொல்லுகிற  மார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லகிற முஸ்லிம் சமுதாயத்pல், பள்ளிவாசலின் தலைமை பெறுப்பேற்றால், அதுவே இருக்கிற கொஞ்ச நஞச நன்மைகளையும் அழித்து விடும் என்று ஒருவர் அச்சப்படுகிறார் என்றால், முஸ்லிம் சமூகத்தில் தனிமனிதனுடையவும் சமூகத்தினடையவும்  மதிப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்ற பலத்த கேள்வியை அது எழப்புகிறது.&lt;br /&gt;மீண்டும் ஓரு புதிய ரமலானுக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். மக்கள் பள்ளிவசலை நோக்கி படையெடுக்கப் போகிறர்கள். தொழுகை நோன்பு ஈகைகளின் வழியாக தங்கள் பக்தியுணர்வை பெருக்கிக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்வத்தேடு அணி தரள்கிற இந்த சந்தர்ப்த்தில் முஸ்லிம் தனி மனிதருடையவும் சமுதாயத்தினுடயவும் நிலையை மதிப்பீட செய்ய வேண்டிய தேவை எற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;ரமலானுக்கும் இந்த பரிசோதனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் மிக முக்கியமானது.  ரமலான் மாதமுமு; அதில் நிறைவேற்றபடுகிற நற்கரமங்களும் அவை உண்டு பண்ணவேண்டிய தாக்கத்தை தனிமனிதனிடத்திலும் சமுகத்திலும் ஏற்படுத்துகின்றதா  என்ற முக்கியமான கேள்விக்hன விடை அதில் ஒளிந்து கிடக்கிறது.&lt;br /&gt;ஒவ்வொரு தனிமனிதருடைய வாழ்விலும்  ரமலானும், அது ஏற்படுத்துகிற நல்லுணர்வும் மிகுந்த மரியாதைக்குரியவை. அளவிடற்கரிய தொரு அருட்கொடை அது.&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ரஜப் மாதத்தின் பிறை தென்பட்டுவிட்டால் அல்லாஹ்விடம் ரமலானுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : ரஜப் மாதம் வந்து விட்டால் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அருட்செய்வாயாக! ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப் பளிப்பாயாக! ஏன்று பிரார்த்தனை செய்வார்கள்.(அஹ்மது 2228)&lt;br /&gt;இத்தகையதொரு ரமலானை நாம் பெற்றுக் கொள்கிற போது அது எப்படிப்பட்ட பாதிப்பை நமக்குள் ஏற்படுத்த வேண்டுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்றால்  சர்கை;கரை வியாதிக்காரரரை போல உலகின் சரிபாதி இன்பத்தை நாம் அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்களாகி விடுவோம்.&lt;br /&gt;ரமலான் ஏறு;படுத்த வேண்டிய தாக்கம் குறித்து ரமலானுக்கு பிறகு பார்ததுகு; கொள்ளலாமே என்றும் ஒரு கேள்வி எழும். ஆதற்கான பதில் மிகச் சாதரணமானது. ஓரு ரயில் வண்டி புற்பபடுவதற்கு முன்னரே பயணி அவருயை பயணப்பாதையை தீர்மாணித்துக் கொள்ள வேண்டுமே தவிர ரயில் அதனுடைய கடைசி எல்லையை தொட்டுவிட்ட பிறகு அல்ல. அதே போல ரமலானில் சஞ்சரிப்பதற்கு முன்னதாகவே அதன் விளைவாக ஏறு;பட வேண்டிய தாக்கம் குறித்து சிந்தனை செய்து  விடவேண்டும்.&lt;br /&gt;பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனை கற்றுத்தந்து, அதை ரமலான் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கேட்பதை தனது வழிமுறையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால் ரலானைப்பற்றி முன்னதாக வே சிந்தித்து விட வேண்டும் என்ற வழிகாட்டுதலை தருகிறது.  &lt;br /&gt;ரமலான் நமது பக்தி உணர்வை மலர்ச்சியடைச் செய்வதற்காக வருகிறது. தொழுகை நோன்பு ஜகாத் என்ற கடமைகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே கருவாக கொண்டிருக்கின்றன. நோன்பை பற்றிய திருக்குர்ஆன் வசனம் இந்த நோக்கத்தை  சிறப்பாக வெளிப்படுத்துவதை காணலாம். உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகத்தார் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்ட்டிருக்கிறது என்று பேசுகிற 2.183 இறைவசனம், இதன் மூலம் நீங்கள் பக்தியாளர்களாக ஆகக்கூடும் என்று கூறுகிறது.  &lt;br /&gt;இந்த வசனம் நினைவூட்டுகிற பக்தி என்கிற செய்தி தான் இன்றைய சுழலில் ரமலானை எதிர்கொள்ளவும் அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை நினைவு கூறவும் மிகவும் தேவைப்படுகிறது.&lt;br /&gt;இன்றைய முஸ்லிம் சமுகத்தில் இஸ்லாம் என்கிற பெயரும் தூய இஸ்லாம் என்ற கோசமும் சமுதாயத்திற்காக என்ற முழக்கங்களும் முன்னெப்போதையும் விட அதிகமாக பேசப்படுகிறது. கடற்த 10 ஆண்டுகளாக இது பற்றி தமிழ் முஸ்லிம் உலகில் மிக நிறைய பேசப்பட்டு விட்டது. இவை ஏற்படுத்திய விளைவுகளை சீர் தூக்கிப்பார்த்தால் சமுதயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியில் பக்தியுணர்வு என்பது அருகிப்போய்விட்டதை வெள்ளிடை மலயென அறியலாம்.&lt;br /&gt;இதற்கான உதாரணங்களைப் பேசப் புகுந்தால் அத பற்றி எழுதப்படகிற காகிதங்கள் கூட நற்றமடிக்கும் என்ற அளவுக்கு கசப்பான செய்திகள் நிறைய உண்டு என்பது, சமதாயத்தை கவனித்துவருகிற அனைவருக்கும் தெரியும். &lt;br /&gt;முஸ்லிம் சமூகத்திலே பெரிய அளவிலே பேசப்படுகிற ஈமான் இஸ்லாம் என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தகைளாக உச்சரிக்கப்படகிறதே அன்றி அவற்றின் முழப்பரிமாணமும் புரிந்து கொள்ளப்பட வில்லை என்பதை எதார்த்த நிகழ்வுகள் பிரதி பலிக்கின்றன.&lt;br /&gt;ஒவ்வொரு முஸ்லிமிமிடமும் ஈமான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இஸ்லாம் என்ற நடைமுறையும் இருக்கிறது.&lt;br /&gt;ஈமான் என்பது சரியான நம்பிக்கையை குறிக்கிறது. ஈமான் என்பது இறைவனை பற்றிய சரியான நம்பிகை;கை மட்டுமல்ல. அது வாழ்வை பற்றிய சரியான நம்பிக்கையும் கூட. வாழ்கை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலைகள் என விரியும் ஈமானிய அம்சங்கள் முழு மனித வாழ்வையும் சரியான நம்பிக்கையுpன் அடித்தளத்தில் கட்டி எழுப்புகின்றன. இந்த விசயங்களில் எது சரியாக நம்புதலுக்கு உரியதோ அதை நம்பு வதே ஈமான் ஆகும். &lt;br /&gt;இஸ்லாம் என்பது சரியான செயல்பாட்டை குறிக்கிறது. வணக்க வழிபாடுகள் சமுதாய தொடர்புகள் சமூக உறவுகள் அனைத்திலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதே இஸ்லாம் ஆகும்.&lt;br /&gt;இவ்விரண்டு விசயங்களும் மக்களின் நாளைய சொர்க்க வாழ்வை நிச்சயிக்கின்றன. அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் இவற்றால் இந்த உலகில் ஒருவர் பெறுகிற நன்மை என்ன என்ற கேள்வி பிரதானமானது.&lt;br /&gt;ஈமான் என்கிற சரியான நம்பிக்கையும் இஸ்லாம் என்கிற சரியான நடவடிக்கைகளும் மரணத்திற்குப்பின்னால் மட்டுமல்ல இந்த உலக வாழ்கையையும் அழகுபடுத்துகிற இரண்டு முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளன. அந்த நன்மைகள் தான் ஒரு முஸ்லிமிடம் ஈமான் இருக்கிற இஸ்லாம் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.&lt;br /&gt;ஈமான் என்பது வாழும் முஸ்லிமுக்கு சிந்தனை தெளிவை வழங்ககுகிறது. வழங்க வேண்டும்.  இஸ்லாம் என்பது நல்ல பண்பாட்டை நற்குணங்களை தருகிறது. தரவேண்டும். இந்த நன்மைகள் ஏற்படாத பட்சத்தில் அவரிடம் ஈமானும்  இஸ்லாமும் இருப்பதாக முழுமனதாக ஏற்றுக் கொள்வது இயலாது.&lt;br /&gt;திருக்குர்ஆனின் அல்மாவூன் அத்தியாயம் மிக் முக்கியமாக ஒரு விளக்த்தை சமுதயத்pற்கு முன்னானள் எடுத்து வை;தக்கிறது. தன்னுடைய வாழவு இஸ்லாமிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எவரும் தவறாமல் ஞாபகத்தில் பதித்தருக்க வேண்டிய ஒரு அத்தியாயம் அது.&lt;br /&gt;மாவூன் அத்தியாhத்தின் தொடக்கத்தில், மார்க்கத்தை(அல்லது மறுமை நாளை)  நிராகரிப்பவர் யார் தெரியுமா என்று இறைவன் கேட்கிறான்.&lt;br /&gt;இந்தக் கேள்விக்கு பதில் நாம் சொல்லுவதாக இருந்தால் என்ன சொல்வோம்? அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவன். முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒத்துக் கொள்ளாதவன். மறுமை உண்டு என்பதை, சொர்க்கம் நரகம் உண்டு என்பதை  நம்பாதவன் தான் காபிர் நிராகரிப்பவன் என்று பதில் சொல்வோம். ஆனால் அல்லாஹ் தருகிற பதில் ஆச்சரியமானது.&lt;br /&gt;அநாதைகளை வெருட்டுபவர்களும் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவர்களும் தான் மறுமை நாளை பொய் என்று நினைக்கிறார்கள் என அல்லாஹ் பதில் கூறுpகிறான்.&lt;br /&gt;ஆநாதைகளை விரட்டுவதும் ஏழைகளுக்கு உதவி செய்ய என்ற எண்ணமில்லாமல் வாழ்வதும், இதயம் இறுகி, சிந்தனை களங்கப்பட்டிருப்பதின் அடையாளங்களாகும். இவர்களது சிந்தனை எப்படி இருக்கும் என்பதை யாசீன் அத்தியாயத்தில் அல்லாஹ் இன்னும் விளக்கமாக கூறுகிறான். இத்தைகய நபர்களிடம் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று சொல்லப்பட்டால் அல்லாஹ் பட்டினி போட்டவனுக்கு நாங்கள் ஏன் உணவளிக்க வேண்டும் என்று கேட்பார்க்ள் என்று கூறுகிறான் &lt;br /&gt;அடுத்த வசனம் இன்னுமு; அதிர்ச்சியளிக்கிறது.  இத்தகைய நபர்கள் தொழுவார்கள் என்றால் அந்த தொழுகையாளிகளுக்கு கேடுதூன் என்கிறது அந்த வசனம். ஏனெனில்  அவர்கள் தொழுகையில் கவனமில்லமல் இருப்பார்கள் முகஸ்துதிக் காக பெயர் பெறுவதற்காக தொழுவார்கள். ஒர ஊசியை கூட இரவலாக வழங்கமாட்டார்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் கூறுpகிறான். &lt;br /&gt;மிக விரிவாக பேசுவதற்குரிய கருத்தாழம் மிகுந்த இந்த அத்தியாயத்தை கவனித்துப்பாருங்கள் நல்ல சிந்தைன இன்றி இருப்பதும் பண்பாடில்லாமல் வாழ்வதும் ஈமான் இஸ்லாம் இன்மையின் அடையாளங்கள் என்பதை புலப்படுத்துவதை காணலாம்.&lt;br /&gt;ஈமானுக்கும்   இஸ்லாமுக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பல் வேறு சமயத்தில் கொடுத்துள்ள பலதரப்பட்ட விளக்கங்கள் இதே கருத்தை பலப்படுததுவதாக உள்ளன.&lt;br /&gt;ஈமான் என்பது 63 சொச்சம் கிளைகளை கொண்டதாகும். வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை என்றார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள். (அபூஹுரைரா-புகாரி) மனிதனுடைய ஒரு உயர்தர உணர்ச்சி ஈமானிய நம்பிக்கையின் ஒரு அம்சமாகி அதன் அங்கமாகி விடுவதை இந்நபி மொழி புலப்படுத்துகிறது. வெட்கப்படுபவனை ஈமானிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறது.&lt;br /&gt;பெரியவர்களை மதிக்காதவர் சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரலி) திர்மிதி)  பண்படில்லாமல் வாழ்பவரை ஒரு வகையில் இந்நபி மொழி இஸ்லாமிய சமூக மட்டத்திலிருந்து வெளியேற்றுவதை பார்க்கிறோம்.&lt;br /&gt;இதுவெல்லாம் மிக அழுத்தமாக நமக்கு போதிக்கிற செய்தி என்ன? ஒரு கலிமாவை மொழிந்து விடுவது அல்லது அடையாளப்பூர்வமாக சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது என்பதை தாண்டி இஸ்லாமும் ஈமானுமு; ஒரு மனிதரிடம் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன என்பது தானே!&lt;br /&gt;அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதரும் சரியாக புரிந்து வைத்திருக்கிறாரா என்பது தான் இன்றுள்ள பிரதான கேள்வி. ஒரு முஸ்லிமுக்கு அவரது தனி வாழ்வையும் சமூக வாழ்iயும் கட்டமைக்கத் தேவையான சிந்தனை தெளிவை ஈமான் வழங்கியிருக்கிறதா? தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் மானுட மரியாதையோடு வாழ்கிற பண்பாட்டை இஸ்லாம் பழக்கப்படுத்தியிருக்கிறதா? என்பதை ரமலானை வரவேற்பதற்கு முன்னாள் நாம் தெளிவு படுத்திக கொள்ள வேண்டும்.&lt;br /&gt;பொய் தெய்வங்களை கண்டறிந்து அவற்றை நிராகரிக்க கற்றுக் கொடுத்த ஈமான்  மோசடித் தலைவர்களையும் போலிப் புரட்சியாளர்களையும் வேஷம் போடும் சமூக ஆர்வலர்களையும் கணடறிய துணை செய்ததா?  &lt;br /&gt;கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைப்பையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக கொண்ட  வணக்கவழிபாடுகள் இஸ்லாமிய நடைமுறைகள், நகரீகக் குறைபாட்டையும் சண்டை சச்சரவுகளை அழித்துவிட்டதா?&lt;br /&gt;மில்லியன் டாலர் பெருமானமுள்ள இந்தக் கௌ;விகளுக்கு விடை தேடிப் பார்த்தால் தனிமனிதனுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பை அளந்துவிட முடியும்.&lt;br /&gt;அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறாக சொல்லப்பட்ட செய்தியை பரப்பினார் என்பதற்hக நபித்தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு 80 கசையடிகள் வழங்கப்பட்டன. அதே ஹஸ்ஸான் (ரலி) அவர்கயள் பிற்காலத்தில் ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஒருவர் அன்னை அவர்களே உங்கள் மீதான அவதூறு வழக்கில் ஈடுபட்டபவரை உங்கள் அருகே அனுமதித்திருக்கிறீர்களே என்று கேட்ட போது, ஆயிஷா (ரலி)அவர்கள் அளித்த பதில் மிகுந்த கவனத்திற்குரியது. ஹஸ்ஸான் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் அல்லவா அவரை குறை சொல்லாதீர்கள் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் பெருமை நினைவு கூர்ந்தார் என்பது இஸ்லாமிய வரலாறு. ஈமானும் இஸ்லாமும் உருவாக்கிய தெளிவையும் பண்பையும் பறைசாற்றும் இந்த வரலாறு, ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் தனிமனிதர்களுடையவும் சமூனத்தினுடையவும் மதிப்பு எப்படி இரந்தது என்பதை வெளிச்சப்படுத்துகிறது.&lt;br /&gt;ஒரு ரமலானை எதிர் கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தனிப்பட்ட பக்தியுணர்வை இந்த அளவீடகளில் பெருக்கிக் கொண்டு சமதாயம் தூய்மை அடைய உதவ வேண்டும். அப்படி ஒரு காலம் வரம் போது நல்லவர்கள் சமுதயப் பொறுப்பிற்கு வருவதற்கு அச்சப்பட மாட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-8162606439207322602?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/8162606439207322602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=8162606439207322602' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/8162606439207322602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/8162606439207322602'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2008/01/blog-post.html' title='தேவை ஒரு பக்தி மார்க்கம்.'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-7345812151119109784</id><published>2007-12-01T10:06:00.000-08:00</published><updated>2007-12-01T10:12:37.206-08:00</updated><title type='text'>சீர்திருத்தம் என்பது எதுவரை?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது எங்களது பள்ளிவாசலில் வழக்கம். நேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது. அது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது. தூக்கக் கலக்கத்திலோ, ஒரு சம்பிரதாயத்திற்காகவோ இவர்கள் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை என்ற திருப்தி எனக்கு. என்ன இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே என்ற கேள்வி அவர்களுக்கு.அந்த நபி மொழி இது தான். ஆபூஹுரைiரா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஓரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியம (மகிழ்ச்சிய) டைகிறான். விலங்குகளோடு அவர்கள் சுவர்கத்துக்குள் நுழைவார்கள். (புகாரி 3010)முதல் பார்வையில் இந்நபி மொழி நம்முடைய புருவங்களை உயரவைக்கும். செர்க்கம் என்பதே எல்லா சிரமங்களிருந்தும் விடுதலை தருகிற சுகமல்லமா? அந்த சொர்கத்துக்குள்ளேயே கைவிலங்கோடு செல்வதா? பிறகும் அது சொக்கமாக இருக்குமா? ஒரு வேளை திருமணம் செய்து கொள்கிற ஆண்களை அல்லாஹ் ஒருவரியில் விமாச்சிக்கிறானா? அல்லது சில ஜும்ஆ உரைகளை கேட்கும் நிர்பந்தத்திற்குள்ளான மக்களுக்காக சொல்லப்பட்ட நற்செய்தியா? அல்லது சிறைக் கூடங்களை நிரப்புவதை சமயக் கடைமையாக்கிய தலைவர்களை நம்பி ஏமாந்து போன மக்களுக்கான ஆறுதலா? ஏது பற்றி இந்நபிமொழி பேசுகிறது எனபதை சட்டடென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு சந்தேக வினாவை இந்நபி மொழி எழப்புகிறது.ஊண்மையில் இந்த அசம்பாவிதங்களைப் பற்றி எல்லாம் இல்லாமல் மிக மக்கியமான ஒரு வழிகாட்டுதலை அதுவம் இன்றைய நகரீகரிக உலகிற்கு தேவையான ஒரு தெளிவை இந்நபிமொழி தருகிறது.விலங்கிடப்பட்ட நிலையில் சொர்க்கத்தில் நுழைபவர்கள் என்ற வார்த்தை, வேறு வழியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்பவர்களை குறிக்கிறது.முஸ்லிம்களோடு சண்டையிட்டு தோற்றுப் போனவர்கள் கைதிகளாக பிடிக்கபட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படுகிற போது அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாமை தழுவினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்தகையோர் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை தழுவினாலும் இஸ்லாம் என்கிற அபரிமிதமாகன நன்மையின் விளைவாக சொர்க்கத்திற்குள்ளே நுழையும் வாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். அதை கண்டு அல்லாஹ் ஆச்சரியமடைவதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அல்லாஹ் ஆச்சரியமடைகிறான் என்ற வார்ததை அல்லாஹ் திருப்தியடைகிறான் என்ற பொருள் கொண்டது என ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறும்புக்கார மாணவர் ஒருவர் ஆசிரியரிமிருந்து தண்டனை பெற்ற பிறகு சரியாக நடந்து கொண்டால் அதைப்பார்த்து ஆசிரியருக்கு ஏற்படுமே ஒரு திருப்தி கலந்த ஆச்சரியம் அத்ததைகய திருப்தி, நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு சொhக்கத்திற்கு சொந்தக்காரர்களாகிறவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு ஏற்படுகிறது என்பது இந்நபி மொழியின் கருத்து.நிர்பந்த சூழ்நிலையில்தான் இஸ்லாத்திற்கு வந்தார்கள் மனம் விழும்பி வரவில்லை என்றாலும் இஸ்லாமின் நன்மையை, அதன் பலாபலன்களை அவர்கள் பெறுக்கொள்வார்கள்.மக்கா வெற்றியடைந்தவுடன் இஸ்லாமைத் தழுவியோர் பலரும், தாயிப் நகரிலிருந்து இஸ்லாமைத் தழுவியோர் பலரும் இத்தைகய மனோ நிலையில் தான் இஸ்லாமைத் தழுவினார்கள். ஆயினும் இஸ்லாமின் பலாபலன்களை உணர்ந்த பிறகு, அதன் கனிகளைச் சுவைத்த பிறகு சொhக்கத்திற்குரிய வாழ்கை அவர்களிடம் வந்தது.கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டிய விசயம் இது. இழை பிசகினாலும் இஸ்லாம் சமய நிர்பந்தம் செய்கிறது அல்லது வாள் முனையில் மக்களை மதம் மாற்றுகிறது என்ற கருத்தோட்டம் வந்தவிடுகிற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயம் ஈர்ப்பதில் இஸ்லாத்திற்கு துளியும் விருப்பம் கிடையாது. இந்த மாhக்கத்தை தழுவும் விசயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று திருக்குர்ஆன் பகிரங்கப் பிரகடணம் செய்துள்ளது.இஸ்லாம் கொள்கைப் பிடிப்பை அழத்தந் திருத்தமாக வலியுறுத்துகிற மார்க்கம். கொள்கை விசயத்தில் துளியும் சமரசம் செ;யது கொள்ளாத சமயம். அத்தகைய ஒரு சமயம் வேண்டா வெருப்பாகவோ, அலட்சிய மனோபாவத்துடனோ எவரும் தம் மார்க்கத்திற்கு வருவதை ஏற்காது. ஏற்கவும் இல்லை. ஒரு அடையாளத்திற்காவோ ஆட்களை காட்டுவதற்காகவோ நூறு பேரை குல்லா போடவைக்க வேண்டிய எந்த அரசியல் தேவையும் இஸ்லத்திற்கு இல்லை. எனவே நிர்பந்தப்படுத்தி எவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வருவது குறித்து இந்நபி மொழியில் பேசப்படவில்லை. நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பற்றியே இது பேசுகிறது. நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு கொண்டு வருதல் என்பதற்கும் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்குதல் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.குழந்தையை அடித்து மிரட்டி மருந்து சாப்பிட வைப்பது நிர்பந்தம். அதே குழந்தைக்கு மிட்டாய் தருவதாய்ச் சொல்லி அக்குழந்தை தானே மருந்தை உண்ணும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அதை நிர்பந்த சூழ்நிலை என்று சொல்லலாம்.நிர்பந்தப்படுத்தப் படும் போது மறுப்தற்கு வாய்ப்பிரக்காது, நிர்பந்த சூழ்நிலையில் மறுப்பதற்கு வாய்ப்ப்புக்கிடைக்கும். ஆனால் ஏற்பதனால் கிடைக்கிற நன்மைகள் மறுக்கவிடாமல் செய்து விடும்.இத்தகைய நிர்பந்தச் சூழலில் ஒருவர் இஸ்லாமைத் தழுவினாலும் அது வரவேற்கத்தக்கதே! நிர்பந்தத்திற்கு வந்தவர் தானே என்று ஏளனமாக கருதுவதற்குரிய விசயமல்ல அது. மாறாக அல்லாஹ்வை ஆச்சரியப்படவைக்கிற விசயம் அது என்ற கருத்தை முதல் பொருளாக இந்நபிமொழி வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இலக்கிய பாணியில் குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ள இந்நபி மொழி, சீர்திருத்தத்திற்கான முயற்சியை எந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சாடையாக உணர்த்துகிறது.சீர்திருத்தவாதிகள், கொள்கை கோட்பாடுகளில் பற்றுக் கொண்டோர், தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம் என்ற சித்தாந்தத்தில் உறுதி கொண்டோர் மிக அக்கறையோடு கவனிக்க வேண்டிய விசயம் இது.ஓரு சீர்திருத்வாதி நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயப்படுத்தக் கூடாது தான் என்றாலும் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்கி அவரை தன் தன்பக்கத்திற்கு ஈர்ப்பது தவறாகாது. என்பது மாத்திரமல்ல அத்தகைய நிர்பந்த சூழ்நிலைகளை உருவாக்க்குவதில் அவர் அக்கறை எடுத்தக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இந்பிமொழி தருகிறது.இன்றைய நாகரீக உலகம் ஒரு மனிதர் அடுத்தவர் மீது அக்கறை கொள்வதற்கு மிகக்குறுகிய எல்லைகளை வைத்திருக்கிறது. மதுவினால் சமுதாயம் சகதியில் கிடக்கிறதா? பரவாயில்லை அது கிடந்துவிட்டு போகட்டும். ஆதற்காக மதுக்குடிக்காதே என்று நீ சட்டம் போடாதே! ஏன் சத்தம் கூட போடாதே! சக மனிதனின் மதி கெட்டு மிதிபட்டுச் சீரழிந்தாலும் சரி அது அவனது உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது அநாகரீகம். போதி மரத்தடி புத்தனாக மாறி எதையாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்று நீ விரும்பினால் ஒன்று செய்! மதுக்கடைகளை விளம்பரப்படுத்தும் வானளாவிய போர்டுகளின் ஒரு மூளையில் கண்ணுக்கு தெரிhயத சிறிய எழுத்தில் குடி குடியை கெடுக்கும் என்று போட்டு வை! என்பது தான் இன்றைய நகரீகம் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதற்கு வைத்திருக்கிற அளவுகோல். இந்த அளவுகோலை நாச10க்கானது என்றும் நாகரிகமானது என்றும் நிறுவுவதில் மேற்குலகும் அது சார்ந்த ஊடகங்களும் வெற்றியடைந்துவிட்டன.அதன் விளைவாக மேற்குலக மோகம் சூழ்ந்த மக்களிடம் அறிவுரை எனப்தோ சீர்திருத்தம் என்பதோ ஒரு நன்மை பெறுவதற்கான வழி என்ற மரியாதையை இழந்து விட்டன. ஒரு கட்டத்தில் அது மனித உரிமை மீறலாகவும் பிற்போகுத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கூட சித்திரிக்கப்படுகிறது. அதனால், நல்லுரைகளும் நன்னெறி நூற்களும் கண்ணாடிப் பெட்டிக்குள் கவனமாக பாதுகாக்கப்டுகின்றன. நீங்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம்.இந்த சூழ்நிலையில் ஓருவர்மீது ஒருவர் சாய்நதபடி அந்தப் பெட்டிக்குள் இருக்கிற அறபோதனைகளை வாசிக்கிற இளைஞனும் யுவதியும் ஸோ! இட்ஸ் ஸவீட் யா! ஏன்று ஐஸ்கீரிமை சப்பியபடி நகர்ந்து வீடுகிறார்கள்.இந்தக் கோட்பாட்டின் விளைவாக தமது சொந்தக் குழந்தைகளை கூட வழிப்படுத்த முடியாத சூழ்நிலை மேற்குலகு சார்ந்த பெற்றோர்களுக்கு சட்ட ரீதியாக ஏற்பட்டது. ஒரு தந்தை தவறான பாதையில் செல்லத் தொடங்கிய தன்னுடைய பெண் மகளை கண்டித்தார். ஆவள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்நது தனியாக வாழ அனுமதி பெற்றேதோடு தந்தையிடமிருந்தே மாதச் செலவுக்கான தொகையும் பெற்றுக் கொள்ள தகுதியும் பெற்றாள். இத்தகைய தீர்ப்புகள், இன்றைய மேற்குலகின் கலாச்சாரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. கண்ணுக்கு நேர போதைப் பொருளை உபயோகிக்கிற பிள்ளைகளைக் கூட கண்டித்து தடுக்கிற சக்தியற்றவர்களாக பெறறோர்கள் ஆனார்கள். காலப்பொக்கில் அதை தடக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தேவையறற்றது மனோ நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். கல்விக் கூடங்கள், அலுவலகங்கள், சமூக சமய மையங்கள் அனைத்திலும் இந்த எண்ணம் மேலோங்கி இதுவே மேற்குலகின் மனசாட்சியாகவும் பண்பாடாகவும் மாறிவிட்டது. ஒரு சமூக அக்கறை, அல்லது சீhதிருத்த முயற்சிக்கான எல்லை இது தான் என்ற இந்த வரையரை இஸ்லாத்தின் இயல்புக்கு எதிரானது. இந்த எல்லையை இஸ்லாம் ஏற்கவில்லை.ஓரு சீர்திருதத்திற்கான முயற்சி என்பது அடுத்தவரின் உரிமை என்ற அளவீட்டை தாண்டி அவரது நலன் என்ற எல்லைக் கோட்டை தொடவேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது. அதையும் தாண்டி சமுதாய நலன் என்ற சிகரத்தையும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விருப்பமாகும். அதே நேரத்தில் இத்தகைய நலம் நாடுதல் என்பது சாத்வீகமான அல்லது சாத்தியப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டுமேயன்றி வன்மமான நிர்பந்திக்கிற வழிவகைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும் தெளிவாக இஸ்லாம் உத்திரவிட்டுள்ளது.இஸ்லாமின் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் ஒர வயதான பெண்மணியை அணுகி இஸ்லாமை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெண்;மணி மறுத்துவிட்டார். (அன அஜுஸுன் கபீரத்துன் வல் மவ்து இலைய்ய கரீபுன்) நானோ முதிhந்தவள்.மரணத்தின் பக்கத்திலிருப்பவள். இந்த சமயத்தில் என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னார். அந்த மக்கள் தலைவர் மார்க்கத்தில் நிர்பந்தம் அல்லை என்ற குர்ஆனிய வசனங்களை முனுமுனுத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.இந்த நிகழ்வில் ஒரு சீர்திருத்த வாதியின் அக்கறைக்கான அளவும் அதன் எல்லையும் மிகத்துல்லியமாக வரையரைக்கு உட்பட்டிருப்பதை காணலாம். ஒரு ஜனாதிபதி தனது சமூக கடமையை எந்த நிலையிலும் மறக்கவில்லை. ஓரு கிழவியொடு பேசுகிற அளவுக்கு கீழே இறங்கி வரவும் அவர் தயங்கவில்லை. ஓரு ஆட்சித் தலைவர் இறங்கி வந்து ஒரு குடியானவனிடம் பேசினால் அது ஒருவகை நிர்பந்தமாகி விடாதா என்று அவர் கவலைப் படவும் இல்லை. ஆனால் அந்த பெண் மறுத்த போது அவளை அவர் நிர்பந்தப்படுத்தவும் இல்லை.ருஷ்யாவில் லெனின் ஸ்டாலின் போன்றோர் கம்யூனிஸத்தை பரப்பியதற்கும், முஸ்லிம்கள் வெற்றி கண்ட நாடுகளில் கலீபாக்கள் இஸ்லாமைப் பரவச் செய்தத்தற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு இது.ஓரு தத்துவம் தோற்றுப் போனதற்கும் ஒரு சமயம் வெற்றியடைந்தததற்குமான காரணத்தை கூட இந்தப் பின்னணியல் அறிந்து கொள்ளலாம்.ஓரு நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படுத்துவது வரை சீர்திருத்தவாதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நியாயம் இன்றி எவரையும் நிர்பந்தப்படுத்தக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவனுக்கு உடல்நலமில்லை என்று அறிந்தார்கள். நலம் விசாரிப்பதற்காக சிறுவனுயைட வீட்டிற்குச் சென்றார்கள். குசல விசாரிப்புகள் முடிந்த பிறகு அந்தச் சிறுவனுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளின் சாரம்சமாக திகழ்கிற கலிமா வாசகத்தை சொல்லிக் கொடுத்து அதைச் சொல்லும்படி சொன்னார்கள். என்ன செய்வதென்று புரியாமல் சிறுவர் திகைத்தார். தன் வீடு தேடி வந்து சுகம் விசாரித்த இஸ்லாமியத் தலைவரின் அன்புக் கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி? அப்படி அடிபணிந்து விட்டால் தந்தை என்ன சொல்வாரோ? ஏன்ற பரிதவிப்பில் தந்தையை பாhக்கிறார். தந்தை சொன்னார் மகனே! அபுல்காஸிமின் (முஹம்மதின்) வார்த்தகை;கு கட்டுப்படு! ஆச்சிறுவர் இஸ்லாமைத் தழுவினார். நுரகிலிருந்து இவரை காப்பாற்றிய இறைவனு;ககே எல்லா புகழும் என்று கூறியபடி முஹம்மது (ஸல்)அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். (புகாரி 1268)இந்தச் செய்தியும் ஒரு நல்ல விசயத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதில் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்க தயங்கத் தேவை இல்லை என்பதை உணர்ததுகிறது.ஓரு கொள்கை வாதி இப்படித்தான் இருக்க முடியும். அது தான் கொள்கை வாதிக்கான அடையாளமும் கூட. நம்மில் பலபேர் மது அருந்துவதில்லை. அதனாலேயே நாம் மதுவுக்கு எதிரான கொள்கையுள்ளவர்கள் என்று அர்த்தம் ஆகிவிடாது. காசில்லாததால், அல்லது வாய்ப்பில்லாதததால், அல்லது சமூகம் தூற்றுமே என்று பயப்படுவதால் நாம் குடிக்காதவர்களாக இருக்க வாயப்புண்டு. மது அருந்துகிற ஒருவரை நாம் தடுத்து திருத்துகிற போது அல்லது கிடைக்கிற சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைப்பறிறி பிரச்சாரம் செய்கிற போது தான் நாம் அந்தக் கொள்கையுடைவர் என்பது நிஜப்படும்.ஓரு கொள்கைவாதி அல்லது சீர்திருத்த வாதியின் அடையாளம் அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதில் அவர் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்தும்.அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்துமே அமைகிறது.என் கடமையை நான் சொல்லி விட்டேன். மற்றது உன் பாடு என்ற வாசகத்தை ஒரு சீர்திருத்தவாதி அவரது முன்னுரையின் முடிவில் சொல்லக் கூடாது. முடிவுரையின் கடைசி வரியில்தான் சொல்ல வேண்டும். ஆதுவரை அவர் முயற்சி செய்ய வேண்டும்.திருக்குர்ஆன் குடும்பத்தை சீர்திருத்துவது குறித்து பேசுகிற போது நீங்கள் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நெருப்பிலிரு;து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்ற ஒரு வாசகத்தை சொல்கிறது. (66:6)திருக்குர்ஆனிய விரிவுரையாளர்களால் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இந்த வசனத்தின் அமைப்பும் கருத்தும் சீர்திருத்தம் செய்ய முயற்சித்தல் என்ற களத்தின் கணபரிமாணத்தை மிகச் சரியாகவும் பக்குவமாகவும் விண்டுரைத்து விடுகிறது.ஓருவரை நெருப்பிலிருந்து காப்பாற்றுதல் என்றால் அவர் விழுந்த பிறகு காப்பாற்றுதல் என்று அதற்கு பொருளாகாது. விழுவதற்கு முன்னரே தடுத்துவிடவேண்டும். அதே போல நெருப்பில் விழப் போகிறவரைப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, விழாதே ! இறந்துவிடுவாய் என்று ஊதுகுழல் வைத்து உபதேசித்துக் கொண்டிருப்பது அவரைக் காப்பாற்றுவதாகாது. இதையே ஒரு பதாகையில் எழதிக் காட்டி எச்சரிக்கை செய்வதும அவரை காப்பாற்றியதாகாது. அவரது கையைப் பிடித்துத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படித் தடுக்கிற போது தன்சக்தி முழவதையுமு; பிரயோகித்தால் கூட அது தவறாகிவிடாது. ஒரு பொறுப்புள்ள மனிதன் இப்படித்தான் செய்யவேண்டும்.சமூக அக்கறை குறித்த இஸ்லாத்தின் கருத்து இந்த அளவு வரை நீண்டு செல்கிறது. விட்டேத்தியான அல்லது ஒரு மேம்போக்கான வெற்று உபதேசமோ அல்லது கருத்துரையோ ஒரு முஸ்லிமின் பொறுப்புணர்வை முழமையாக பிரதிபலிபதாகாது.நீங்கள் உங்கள் குடும்பத்தை மார்க்கத்திற்காக பக்குவப்படுத்துவதில் எந்த அளவு முயற்சி செய்கிறீர்கள்? உங்களது பணியாளர்களை நெறிப்படுத்துவதில் எவ்வளவு தூரம் உங்களது செல்வாக்கை செலுத்துகிறீர்கள்? தவறு செய்பவர்களை திருத்துவதில் எந்த அளவு அக்கறை செலத்துகிறீர்கள்? சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவு பங்கு செலுத்துகிறீர்கள்? ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டமைப்பதில் எவ்வளவு தூரம் ஆhவம் காட்டுகிறீர்கள்கள்? அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்களது வாழ்வில் ஒளியேற்றிய மார்க்கத்ததை உலக மக்களுக்கு வெளிச்சப்படுத்த எந்த விளக்கை ஏற்றிவைத்தீர்கள்? காசு கொடுக்காமல் கட்டுப்படுத்தி வைத்து அல்லது வசதி வாய்ப்புக்களை முடக்கி வைத்து நம்குடும்பத்தை நாம் நெறிப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் சென்றோமா? பணியளர்களோடு பழகி, பரிசுகள் வழங்கி, சௌகரியங்கள் செய்து கொடுத்து அவர்களை பக்குவப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் இறங்கிச் சென்றோமா? உறவுகளோ நண்பர்களோ தவறு செய்கிற போது உறவு அல்லது நட்புப் பாலத்தை நெருக்கியும் இறுக்கியும் அவர்களை வழிதிரும்பச் செய்ய முடியாதா? அந்த அளவுக்கு நாம் நகர்ந்து சென்றோமா?இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. கைவிலங்கோடு சொர்க்த்தில் நுழைபவர்களை பாhத்து அல்லாஹ் ஆச்சரியப்படுவதாக வருகிற நபி மொழி நம்மிடம் கேட்கிறது.நல்லதை சொல்வதற்கு நாகரீகத்தின் பெயரால் தயக்கம் காட்டுகிற குணத்தை கலைந்து எறிந்து விட்டால் நம்மால் நேர்வழி பெற்றவர் ஒருவர் சொர்க்கத்துக்குள் பாதம் பதிக்கிற காட்சியைப் பார்க்கிற போது அல்லாஹ் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியடைலா.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-7345812151119109784?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/7345812151119109784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=7345812151119109784' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7345812151119109784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7345812151119109784'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_4761.html' title='சீர்திருத்தம் என்பது எதுவரை?'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-1455840183223409611</id><published>2007-12-01T10:02:00.000-08:00</published><updated>2007-12-01T10:03:53.433-08:00</updated><title type='text'>தீராத விளையாட்டுப் பிள்ளைகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஒரு நபித்தோழர் வீட்டு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்। தொருவில் மாடு ஒன்று இடையனோடு செல்லாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அவன் சாட்டடயால் ஒரு அடி அடித்தான் மாடு நடக்கத் தொடங்கியது. இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நபித்தோழர் அந்தச் சாட்டையடி தன்மேல் விழுந்தது போல் துள்ளி எழுந்தார். நான் பாடம் பெற்றுக் கொண்டேன் நான் பாடம் பெற்றுக் கொண்டேன நான் பாடம் பெற்றுக் கொண்டேன், எஜமானன் சொல்லுக்கு கட்டுப்படாத யாரும் தண்டனை பெற்றே தீருவர் என்று முனகிக் கொண்டே அவர் எழந்த சென்றார்.இது முஃமின்களின் குணம். தன்னை சுற்றி நடைபெறுகிற எந்த ஒரு சிறு நிகழ்விலிரந்தும் பாடம் பெற்று விழிப்படைந்த கொள்ள வேண்டியது அவரது இயல்பாக இருக்க வேண்டும் என்பது குர்ஆனுடைய எதிர்பார்ப்பு.கடந்த மாதம் மதுரையில்; மிக மோசமான வன்முறைகள் நடந்தன. சுயநலத்தோடு பொய் செய்திகளை பரப்பி வரகிற தினகரன் நாளேடு வெளியிட்ட கருத்தக் கணிப்பால் கொடூரமமான வன்முறைகள் அரங்கேறின. குண்டர்களின் வெறியாட்டங்களுக்கு மூன்ற அப்பாவி மனித உயிர்கள் பலியாயின. அரசு சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.பொதுமக்கள் அச்சத்தின் பிடிக்குள் தள்ளப்பட் பட்டார்கள். ஒரு பெரிய நாட்டில் அங்காங்கே ஏதாவது கலவரம் நடப்பது, வன்முறை வெடிப்பதும் சகஜம் தான் என்றாலும் இந்த வன்முறை சராசரியானது அல்ல. பொருளாதாரத்திலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சியடைந்து, கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு மாநிலத்தில் ஆளும் தரப்பை சார்ந்தவர்களின் நாற்றம் பிடித்த குடும்பச் சண்டையால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த அப்பாவி மனித உயிhகள் பலியாகயிருக்கிறார்கள். காவல் துறையின் மேற்பார்வையில் இத்தனை அராஜகங்களும் அரங்கேறியிரக்கின்றன. பசுவின் கன்றுக்காக தன் மகனையே தேர் காலடிக்கு காணிக்கையாக்கிய மனு நீதிச் சோழனின் கதைகளை சொல்லிச் சொல்லியே ஓட்டு வாங்கிய தலைவர்கள் தங்கள் வாரிசுகளின் வாலாட்டல் குறித்து வாய் மூடிய மௌனச்சாமிகளாக மோனத்தவம் இருக்கிறார்கள். தானைத் தலைவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் கைமாறுகளில் இதுவும் ஒன்று என்று என மக்களும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். என்ன பெரிதாக நடந்துவிட்டது போல அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பது பொல மதுரை கலவரங்களுக்கு தில்லியில் தீர்வு காணப்பட்டு விட்டது. குடுமப பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்ட விதத்தில் ஆளும் கட்சி ஆசுவாசம் அடைந்து விட்டிருக்கலாம். ஆனால் மக்கள் ஆசுவாசம் அடைந்து விட முடியாது. ஏனெனல் அவர்களது பாதுகாப்பு குண்டர்களின் கைகளில் இருக்கிறது. அந்த குண்டர்கள் அரச பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது சமூக ஆர்வலர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திரக்கிறது. காமராசரின் கல்வித் திட்டத்தால் வளமடைந்து வரும் தமிழ்நாடு திராவிட இயக்கங்களின் அரசியல் பண்பாட்டால் இன்னும் எத்தனை சீர்குலைவுக்கு ஆளாகப் போகிறதோ என்ற அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிக்கிறார்கள். இந்தக் கவலைகள், அங்கலாய்ப்புக்களைத் தாண்டி, இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாட்டில் உள்ள நல்லவர்களும் முஸ்லிம்களும் பெற்றுக் கொள்ள வேண்டிய சில முக்கியமான பாடங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய அந்தப்பாடங்களை கற்றுத்தருகிறது.குண்டர்களை மதிக்கக் கூடாது சட்டத்தை மீறீ நடக்கிற குண்டர்களை மதிக்கக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவர்களுக்கு கட்டுப்படுவதையும், பொதுச் சபைகளில் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவதையும் இஸ்லாம் வன்மiயாக கண்டிக்கிறது. ஏன்? அத்தகையவர்களை புகழ்ந்து பேசுவது கூட பெருந்தவறு என்பது இஸ்லாமின் அறிவுரையாகும். வரம்பு மீறிச் செல்லும் ஒருவன் பகழப்படும் போது அல்லாஹ் கோபமடைகிறான்.அவனது அர்ஷ் கிடுகிடுக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ்(ரலி) நூல் மிஷ்காத்)நபிகள் நாயகத்தின் இந்த வார்த்தைகளில் தொனிக்கிற கடுமையை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமயத்திலும் சமூகத்திலும் வரம்பு மீறிச் செல்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஆவர்களது ஆளுமைக்கு உடன்படுவது மாத்திரமல்ல அவர்களது பராக்கிரமங்களை புகழ்வதே கூட பாவம் என்பதை இந்த நபி மொழி புலப்படுத்துகிறது. குணடர்கள் சமயச்சாயம் பூசிக் கொண்டாலும் சரி சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொண்டாலும் சரி அவர்களை ஒவ்வாமையோடு தான் சமதாயம் பார்க்க வேண்டும். பொதுச் சேவை செய்கிறார்கள் நமக்குச் சார்பாக பஞ்சாயத்து செய்கிறார்கள் என்ற காரணங்களுக்காக குண்டர்களுக்கு முக்கியத்துவம் தருவது சமுதயா நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். குண்டர்களை மதிப்பது தனிமனிம மதிப்பீடுகளையும் பாதிக்கும். சுமதாயத்தின் பண்பாட்டு செழமையையும் பாதிக்கும். என்றைக்காவது ஒரு நாள் தங்களது ஆசை புறக்கிணிக்கப்படுகிற போது அவர்கள் இப்படித்தான் சமூக விரோதச் செயல்களை கட்டவிழ்த்து விடுவார்கள். அது தனிப்பட்டவர்களின் குடும்பத்தையும் நாட்டையும் சேர்ததே பாதிப்புக்கு உள்ளாக்கும். துரதிஷ்ட வசமாக இன்றைய உலகில் குண்டாயிசம் ஹீரோயிசம மாகிவிட்டது. அவர்கள் மதிக்கப்டுவதும் போற்ப்படுவதும் அரசயில் அதிகாரத்திற்கு உயர்த்தப்படுவதும் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன வளமடைந்து வருகிற இந்தியாவின் எதிர்காலத்துpற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கிளில் பிரதானமானது சமூகத்தில் குணடர்களின் ஆதிக்கம் பரவிவரவது தான் என்று ஆய்வாளர்களும் சமூக ஆர்வலர்களும் பயப்படுகிறார்கள். அரசியலில் அவர்களத பங்களிப்பு சட்த்தின் ஆட்சியை பள்ளிலிளிக்கச் செய்து கொண்டிருக்கிறத. தற்பொதைய இந்தியப் பாராளுமன்ற உறுப்பிளனர்களில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று சோஷியல்வாட்ச்.ஆர்க் என்ற இணைய தளம் சொல்கிறது. பொறுப்புள்ள குடிமக்கள் குண்டர்களையும் குண்டாயிசத்தையும் முடிந்தசரை தடுக்க கடைமைப்படடுள்ளார்கள். குண்டாயிசத்திற்கு எதிராக பலத்தை பிரயோகிக் இயலுமென்றால் பலத்தை பிரயோகிக்க வேண்டும். அல்லது எழுத்தால் பேச்சால் எதிர்க்க வேண்டும் குறைந்த பட்சம் அஐத வெறுத்து ஒதுக்கவாவது செய்ய வேண்டும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறை. முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள், இயக்கங்களின் பின்னணியில் குண்டாயிசத்தை தங்களது ஆயுதமமவும் பயன்படுத்திக் கொள்ளக் சுடாது. குண்டாயிசத்திற்கு ஆதராவாகவும் நடந்து கொள்ளக் கூடாது. அது சமூக விரோதம் என்பது மாத்திரமல்ல சமயத்திற்கும் விரோதமானது என்பது தான் இங்கு உணர்ந்து கொள்ள வேண்டிய பிரதான பாடமாகும்.தவறான பிள்ளைகளால் தொடரும் துயரம் ஒரு மனிதரின் அந்தஸ்தும் மரியாதையும், ஏன் மன அமைதியும் கூட அவரது நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்த விசயம் அல்ல அவரது சந்ததிககளின் நடவடிக்களையும் பொறுத்த விசயமாகும். ஓரு இறைநம்பிக்கையாளரின் பக்திகரமான வாழ்வு கூட அவரை மட்டுமே பொறுத்த விசயமல்ல. அவரது சந்ததிகளின் நடவடி;கைகளையும் பொறுத்த விசயமாகும். புல புகழ் பெற்ற மனிதர்கள் அவர்களது சந்ததிகளால் மிகுந்த மனசஞ்சலத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நம்மை சுற்றிக்கூட சற்றே பார்வையை சுழற்றினால் தந்தை பாடுபட்டுச் சேர்த்த செல்வத்தை ஊதாரித்தனமாக செலவழித்து குடும்பத்தை அலங்கோலப்படுத்திய பிள்ளைகள் பலர் நம் கண்களுக்கு தட்டுப்படுவார்கள். தந்தை உருவாக்கி வைத்த நிறுவனத்தை தரமற்றதாக்கிய பிள்ளைகள் பலரையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மானத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்து கொண்டிருந்த பெற்றோரை அவமமானச் சகதியில் தள்ளிவிட்ட வாரிசுகள் பலரையும் பற்றி வரலாறு உண்டு. காந்தி என்ற பெயருக்கு இந்த தேசத்தில் கிடைக்கிற மரியாதை எத்தகையது? ஆனால் அந்த பெருந்தகையின் புகழ் வாழ்விவில் கூட ஹரிலால் என்ற அவருடய குடிகார மகனால் கறைபடிந்தது உண்டு. இத்தகைய விபத்துக்கள் நிகழும் போது ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோமே என்று ஆதங்க்பட்டு நிற்பது அறிவுடைமை ஆகாது. இத்ததகைய ஒரு நிலை நமது பிள்ளைகளின் வழியாக வந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக நடந்து கோள்வதும் அதற்கேற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலத்துவதும பெற்றோரது கடமையாகும். முஸ்லிம் பெற்றோர்கள் இது விசயயத்தில் மிகுந்து கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் மற்ற எல்லவற்றையும் விட ஒரு பெரிய ஆபத்தை பற்றி அவர்களை திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. ஒருவர் நல்லவராக இருந்து அவரது மக்கள் தவறானவர்களாக இருந்துவிட்டால் அது அவரது புழழ்வாழ்வை மட்டுமல்ல பக்தி வாழ்வை கூட பாhதித்து விடும் என்று குர்ஆன் கூறுகிறது. நபி மூஸா (அலை) அவர்கள், நபி கிழ்ரு (அலை) அவர்களோடு ஒரு ஞானப்பயணம் சென்ற வரலாற்றை பேசுகிற திருக்குர்ஆன் ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறது. அவ்விரு நபிமார்களின் பயணப் பாதையில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நபி கிழ்ரு அலை அவர்கள் ஒரு சிறுவனுக்கு அருகே சென்று சட்டென்று அவனை கொலை செய்துவிட்டார்கள். அதிர்ந்து போன மூஸா (அலை) அவர்கள்; என்ன காரியம் செய்து விட்டீர்? ஏதனால் இப்படிச் செய்தீர்? என்று விளக்கம் கேட்ட போது நபி கிழ்ர் (அலை) சொன்னார்கள். இந்தச் சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் பக்தி மிக்கவர்வர்கள். இவன் (வளர்ந்து) அவர்களை அக்கிரமம் செய்யுமாறும், அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் செய்துவிடுவான் என்று பயந்து அப்படிச் செய்தோம் (18:80)திருக்குர் ஆன் கூறும் கடந்த கால வரலாற்றுத்தகவல்கள் எதுவும் கதைக்காக மட்டுமே சொல்லப்படுவதில்லை.அதையும் தாண்டிய சில பரிய நோக்கங்கள் அந்தச் செய்திகளில் உண்டு. அந்த வரலாறுகளில் இருந்து வாழும் மனிதர்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய பாடங்களுக்காகவே அவை பேசப்பட்டுயள்ளன. இந்த வரலாற்றுச் செய்தியும் அப்படித்தான். தவறான பிள்ளைகள் காரணமாக பெற்றோர் அக்கிரமம் செய்கிற சூழ்நிலை ஏற்படலாம் என்ற செய்தியும் நல்ல பெற்றோர்கள் இறை நிராகரிபட்பிற்கு செல்வதற்கு கூட அந்தப்பிள்ளைகள் காரணமாகக் கூடும் என்ற செய்தியும் இந்த வரலாறு கற்றுத்தருகிற அச்சம் தருகிற பாடங்களாகும். முஸ்லிம் பெற்றோர் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான வசதி வாய்;ப்புக்களை நாம் உருவாக்கி தந்திரக்கிறோம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். அவர்கள் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிறோம் என்பது தவறானது அல்ல. ஆனால் நமது பாசம் தவறான செயல்களை செய்கிற துணிவை அவர்களுக்கு தந்துவிடக் கூடாது. அப்படி ஒரு துணிச்சலை அவர்கள் பெற்று விடுவார்களானால் அது பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளை அர்த்தமற்றதாக்கி விடுவது மாத்திரமல்ல அவர்களுக்கே ஆபத்தாக அமைந்து விடக் கூடும். நாம் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பாராத விதத்தில் மனசஞ்சலம் அடைவதற்கும் அது காரணமாகிவிடும். பாசம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது. வீட்லிருக்கிற பாத்திரத்தை உடைத்து விட்டால் அம்மா மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கிற குழந்தைகள், பக்கத்து வீட்டு கண்ணடியை உடைத்து விட்டால் அடித்து பின்னி விடுவார்கள். அடைக்கலமோ ஆதரவோ தரமாட்டார்கள் என்று பயப்பட வேண்டும். இந்த எண்ணம் பிள்ளைகளின் மனதில் உறுதிப்படும் வண்ணம் பாசம் இருக்க வேண்டும். இன்றை சூழ்நிலையில் முஸ்லிம் பெற்றொர்றோர்கள் இந்த அளவு கோலை போனுகிறார்களா என்பது இன்றைய பிரதான கேள்வியாகும்? கல்விக் கூடங்களுக்கு வாகனத்தோடும் வசதியோடும் அந்தஸ்த்தாக அனுப்பிவைக்கப்படுகிற நம்முயை பிள்ளைகள் அறிவுத் தாகத்தோடும் மரியாதையோடும் நடந்து கொள்கிறார்களா என்பதில் பெரும்பாலும் முஸ்லிம் பெற்றோர்கள் கவனம் செலத்துவதில்லை. அதனால் பல கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் அடங்காத சக்திகளாக இருக்கிறார்கள். கல்வியின் தரத்தையும் நிறுவனங்களின் சிறப்பையும் சீர்குலைப்பவர்களாக இருக்கிறார்கள். அசிரியை கண்டித்தார் என்பதற்காக ஓரு ஏழாம் வகுப்பு முஸ்லிம் மாணவன் அவரின் கழுத்தை நெறிக்க முயற்சி செய்தான் என்ற அதிர்ச்சி தகவலும், ஒன்பதாவது படிக்கும் மற்றொரு மாணவன் வகுப்பில் விளையாடியதை கண்டித்ததற்காக ஆசிரியரின் இருசக்கர வாகனத்தின் பிளக்கை பிடுங்கி விட்டான் என்ற செய்தியும் முஸ்லிம் மஹல்லாக்களில் நடந்த சில நிகழ்வுகாளகும். பிள்ளைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் வீட்டிற்கு வெளியே பையன் செய்கிற அக்கிரமங்கள் குறித்து கண்டு கொள்ளாத பெற்றோர்களின் தயவு தான் காரணம் என்பது புலப்படும். பெற்றோர்கள் எச்சரிக்கை அடைய வேண்டும். நமது செல்வங்களின் செயல்பாடுகள் நமது மரியாதையை மேம்படுத்தாவிட்டால் கூட பரவாயில்லை. நம்மையே குற்றவாளிகளாக்கி விடாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கண்டிப்பான கவனம் செலுத்த வேண்டும். அது அவரது சமூக அக்கறை மட்டுமல்ல சமய அக்கறை சார்ந்த விசயமுமகும். பொறுப்பேற்பது பெற்றோர் கடமை தமது வாரிசுகள் பெரியவர்களான பிறகு நடந்து கொள்ளும் தீய செயல்களுக்காகவும் பெற்றோர்கள் பொறுப்பேற்க வெண்டும். அது தூன் சிறந்த பெற்றோரின் பொறுப்புணர்வாகும். அப்படிப் பொறுப்பேற்காதவர்கள் தங்கயளது கடமையிலிருந்து நழவுகிறார்கள் என்றே பொருள். அரசியல் அதிகார பீடங்களில் இருப்பவர்கள் தங்களது செல்வாக்கால் அந்த பொறுப்புணர்வை வேறு வகைகளில் மொழுகி வைக்கலாம். சாமணியர்களுக்கு அது சாத்தியமானதல்ல. குறிப்பாக முஸ்லிம்கள் அப்படித் தப்பித்தக் கொள்ள முடியாது. வளர்நத பிள்ளைகளின் செயலுக்கு அப்பாவிப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பெற் முடியும் என்று ஒரு கேள்வி வருவதற்கு நியாயமுண்டு. அதற்கான பதிலை இஸ்லாம் தெளிவு படுத்தகிறது. வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரின் தயவின் காரணத்தால் அல்லது பெற்றொரின் பாசப்பரிவின் காரணத்தால் அல்லது அதிகார பலத்தின் காரணத்தால் தவறு செய்தால் அதற்கு பெறறோரும் பொறுப்பெற்க வேண்டும். ஹஜ்ரத் (உமர்) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டான். உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்போது உமர் (ரலி) அவர்கள் பேசிய வார்த்தைகள் வெறும் வார்தகைள் அல்ல பெரும் தத்துவங்களாகும். அதுவும் சாமாணிய தத்தவங்கள் அல்ல பெற்றோர்கள், குறிப்பாக அதிகார பொறுப்பில் இருக்கிற பெற்றோர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தத்துவங்களாகும்.உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். ஆளுநர் உன்னை நேரடியாக ஒன்றும் செய்யாதிருந்திருக்கலாம், ஆயினும் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். (மாலரப இப்னுஹுஇல்லா பி ஸுல்தானி அபீஹி). பெற்றொர்கள் கொடுத்த துணிச்சலால் அல்லது பெற்றோர்களபை; பற்றிய பயமின்மைனயால் தவறு நடக்கு மென்றால் அதில் பெற்றொருக்கும் பங்கு உண்டு. முஸ்லிம் பெற்றொர்கள் இந்த வழிகாட்டுதலை கடை பிடித்தால், இந்த வழிகாட்டுதல் தருகிற மனோ நிலைக்கு தங்களை பண்படுத்திக் கொள்வார்கள் என்றால் அவர்களது பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். பெற்றோhரின் அந்தஸ்திற்கும் மரியாதைக்கும் மெருகேற்றுபவர்களாக திகழ்வார்கள். இல்லை எனில் உன்னைப் பெற்றதற்கு ஒரு அம்மிக் குலவியை பெற்றிருக்கலாமே என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறைந்த பட்சம் பத்ரிக்ககைள் தொலைக்காட்சிகள் மீதோ சூழ்நிலைகள் மீதோ பழியை திருப்பிப் போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள். சுமீபத்தில் முஸ்லிம்கள் கனிசமமாக வசிக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விசயம் சொன்னார் மிக வேதனையாக இருந்தது. அவரது பள்ளிக் கூடத்தில் 10 ம்வகுப்பு படிக்கும் ஒரு குறும்புக்கார மாணவன் கம்ப்யூட்டர் அறையிலிருந்த மின்சார கம்பிகளை சேதப்படுத்திவிட்டான். அவர் அவனை மிரட்டிய உனக்கு ஹால் டிக்கட் தரமாட்டேன் என்று கூறியுள்ளார். மறு நாள் அவன் வந்து மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்ததுக் கொண்டிருந்த தலைமையாசிரிக்கு ஆதிர்ச்சி காத்திருந்தது. அவன் அவனது அம்மாவோடு தைரியமாக அவரது அறைக்குள் நுழைந்தான். அவனது தாய் கோபாவேசம் கொண்டு கத்தியிருக்கிறார். நீ யார் என் மகனுக்கு ஹால் டிக்கட் தர முடியாது என்று சொல்வதற்கு? நான் மகளிர் அணித் தலைவியாக இருக்கிறேன். எனக்கு ஆட்சித்தலைவரை தெரியும். காவல் ஆணையாளரை தெரியும். கல்வி அதிகாரியை தெரியும். நான் நினைத்தால் நீ என் மகனை ஒரு நாள் முழவதும் சித்தரவதை செய்தாய் என்று புகார் செய்து இப்போதே கல்வி அதிகாரியை இங்கு வரவைக்க முடியும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்திரக்கிறார். தலைமையாசிரியர் சொன்னார். அந்த பையனின் நாளைய எதிர்காலத்திற்கு இந்தப்பெண்தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவரை சமாதானப்படுத்தி ஹால் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியனுப்பினேன் என்று சொன்னார். பிள்ளைகளின் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் அவர்களை காப்பாற்றுகிற மனப்பபான்மை தாய்ப்பாசம் சார்ந்த விசயமல்ல. நீதியையும் நேர்iயையும் அலங்கோலப்படுத்தும் முயற்சியாகும். இதனால் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் அக்கிரமக்காரர்களாகி விடுகிறார்கள். துணிந்து அக்கிரமம் செய்கிற மனப்பான்மை அவிசுவாசத்தில் தான் பிறக்கிறது. எனவே தான் கிழ்ர் அலை அவர்கள் இந்தச் சிறுவன் அவனது பெற்றோர்களை அக்கிரமத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் கொண்டு செர்த்து விடுவான் என்று பயந்ததாக குறிப்பிடுகிறார்கள். கீழ்ரு (அலை) அவர்களின் அந்த அச்சம் சரியானது தான் என்பதை நம்மை சற்றி நடக்கிற நிகழ்வுகள் நிதர்சனமாக புரிய வைக்கிகற போது எங்கோ விழுந்த சாட்யைடியை தன் மீது விழுந்துது போல கருதிக் கொள்வது நபித்தோழர்களின் மனோ நிலைக்கு நம்மை உயர்த்தும். நமது பிள்ளைகள் குண்டர்களாகி நாம் குற்றவாளிகளாக மாறமால் இருக்க அது உதவும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-1455840183223409611?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/1455840183223409611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=1455840183223409611' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/1455840183223409611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/1455840183223409611'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_8842.html' title='தீராத விளையாட்டுப் பிள்ளைகள்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-938510093599709581</id><published>2007-12-01T09:51:00.000-08:00</published><updated>2007-12-01T09:52:42.933-08:00</updated><title type='text'>மானுட வசந்தம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ரபீஉல் அவ்வல் என்ற வார்த்தைக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரீ ஆண்டின் மூன்றாம் மாதத்திற்கு ரபீஉல் அவ்வல் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பொருத்தமான காரணங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் முஸ்லிம்களை கேட்டால் இது போல ஒரு பொருத்தம் இன்னொன்னறில் இல்லை என்பார்கள். மானுட வசந்தத்தின் மாசுமறுவற்ற உதாரணமாக வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பதால், சுட்டெறிக்கும் கோடையில் வந்தாலும் சரி வாட்டிவதைக்கும் கூதலில் வந்தாலும் சரி முஸ்லிம்களைப் பொருத்ததவரை ரபீஉல் அவ்வல் பிறந்து விட்டால் அது வசந்த காலம் தான். வரலாறு ஆச்சரியத் தோரணம்கட்டி வரவேற்ற அந்தப் புனிதப்பிறப்பின் புகழ்பாடல்கள் பள்ளிகள் தோறும் ஓதப்படும். மேடைகள் தோறும் ஒலிக்கப்படும். மீலாது விழாக்களும் கந்தூரி வைபவங்களும் கணக்கின்றி நடைபெறும். சிக்கலான இன்றைய கால கட்டத்தில் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கும் நடுவே முஸ்லிம் சமுதாயம் ஒரு உண்மைய கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னெப்போதையும் விட அதிகமாக முஹம்மது என்பவர் யார் என்று அறிந்து கொள்ள உலகின் முக்கால் பங்கு மக்கள் இப்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். தினசரி வாசிக்கப்படும் பரபரப்பான பல செய்திகளுக்கும் பின்னே முஹம்மது என்ற மந்திரச்சொல் காரணமாக இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். அதன் விளைவாக யார் அந்த முஹம்மது என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத விசயமாகிவிட்டது. எனவே முஹம்மது எனும் சொல் இன்றைய உலகின் பிரதான தேடலாகிவிட்டது. இணைய தளத்தில் விசயங்களை தேடி எடுத்துத்துத் தரும் தேடல் இயந்திரங்கள் சோர்ந்து போகும் அளவு அந்தத் தேடல் உலகின் தாகமாகியிருக்கிறது. அத்தைகயை பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களை வரலாறு அறிமுகப்படுத்தும் விதம் ஒரு மாதிரி இருக்கிறது. முஸ்லிம் சமதாயம் அடையாளப்டுத்தும் விதம் வேறு மாதிரி இருக்கிறது. வரலாறு மிகச்சரியாக அறிமுகப்படுத்துகிறது. இந்த பூமயில் பாதம் பதித்;தவர்களில் முஹம்மது நபியைப்போல் இன்னொருவர் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதுமில்iலை. மனித சமூகத்தின் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல இன்னொhருவர் கிடையாது என்று வரலாறு அறிமுகப்படுத்துகிறது. ஜான் வில்லியம் தராப்பர் (துழாn றுடைடயைஅ னுசயிநச) அவருடைய புகழ் பெற்ற ஐரோப்பாவில் அறிவு வளர்ச்சியின் வரலாறு என்ற நூலில் முஹம்மது மனித இனத்தின் மீது மகத்தான ஆதிக்கத்தை செலுத்தும் அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்று குறிப்பட்டுகிறார். மிகப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஸ்டான்லீ லேன் பூல் வெற்றியாளர்களின் வரலாற்றுப் பதிவேடுகள் அனைத்திலும் இவருக்கு நிகராக பெருஞ்சாதனை படைத்தவர் வேறு எவுரும் இல்லை என்று குறிப்பிடுகிறாh . இன்றைய மனித சமூகத்தின் வளர்ச்சி எந்த அளவு பிரம்மாண்டமானதோ அதை விட முஹம்மது (ஸல்)அவர்களின் செல்வாக்கு புகழும் பிரம்மாண்டமானது. உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது அளப்பரிய செல்வாக்கு செலுத்தியவர்களில் 100 நபர்களை வரிசைப்படுத்திய மைக்கேல் ஹார்ட் என்ற அமெரிக்க அறிஞர் அதில் முதலிடத்தை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கயிருக்கிறார் என்பது இன்றைக்கு பழைய செய்தியாக இருக்கலாம். அத்தொடரில் இரண்டாவது இடத்தை ஐசக் நியூட்டனுக்கு அவர் வழங்கியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் கவனிக் கத்தக்கது. மனித குலத்தின் இன்றைய வியத்தகு முன்னேற்றங்கள் அனைத்துக்குமு; நியூட்டனின் கண்டுபிடிப்புகளே அடிப்படை காரணமாக அமைந்தது எனவே தான் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்குகிறேன் என்று ஹார்ட் கூறுகிறார்.மனித குலத்தின் இன்றைய மகா பிரம்மாண்டமான அறிவியல் வளாச்சிக்கு காரணமாக அமைந்த நியூட்டனைவிட முஹம்மது (ஸல்) அவர்கள் முதன்மைமப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றால் முஹம்மது (ஸல்) அவர்களின் செல்வாக்கு இந்த உலகின் பிரம்மாண்டமான வளர்ச்சியை விட உயர்ந்தது என்ற கருத்தோட்டம் அதில் ஊள்ளோடிக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். நபிகள் நாயகத்தின் வரலாறு எவரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியது. சமய மதிப்புருவை கடந்து அவரது சாமாண்ய மனித அடையாளத்தை நெருங்கிப்பார்க்கும் எவரும் பிரம்மமிப்படையாமலிருக்க முடியாது. மைசூர் மகளிர் பல்கலையின் தத்துவத் துறை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்னா ராவ் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆளுமையின் முழப்பரிமாணத்தை விளங்கிக் கொள்வது சிரமமானதே! ஏன்று கூறுகிறார்.வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்கள் பலர் அவர்களது வாழ்நாளிலே மதிப்பிழந்து போயிருக்கிறார்கள். சிலருக்கு இறந்த பிறகு தான் மதிப்பு கிடைத்திருக்கிறது. சிலர் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள். வாழும் போது புகழ் பெற்ற சிலர் காலப் போக்கில் புழதிவாரி தூற்றப்பட்டிருக்கிறார்கள். 25 ஆண்டகளுக்கு முன்பு ரஷ்ய சர்வாதிகாரி லெனினுக்கு கிடைத்த மரியாதை எத்தகையது? பகுத்தறிவ வாதிகளான கம்யூனிஸ்ட்டுகள் அவரது பிணத்தை கூட பாதுகாத்து வைத்தனர். ஆனால் பிற்கால வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் எவ்ளவு ஆச்சரியமானது? ஆதே ரஷ்யர்கள் அவரது சிலையை கூட ஆக்ரோஷத்தோடு சின்னாபின்னப்படுத்தினரே! ஹிட்லரும் முசொலினியும் தத்தமது வாழ்நாளில் பெற்ற செல்வாக்கு எத்தகையது? பின்னால் அவர்களுக்கு கிடைத்த மரியாதை எப்படியிருந்தது? சாக்ரடீஸ் அவர் வாழ்ந்த காலத்தில் என்ன மரியாதையை பெற்றார்? தன்னுடைய கடைசி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடினார் எனபது தான் வரலாறு. முஹம்மது (ஸல்)அவர்கள் அவருடைய சமகாலத்து மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்கள்.அம்மக்களிடம் அளப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரீ ஆறாம் அண்டு ஹுதைபிய்யாவின் முற்றத்தில் அமர்ந்நதிருந்த பெருமானார் (ஸல்)அவர்களிடம் மக்கா குறைஷிகளின் தரப்பில் தூது பேசுவதற்காக வந்த பலரில் உர்வா பின் மஸ்வூது அத்தகபீயும் ஒருவர். பெருமானாரை சந்தித்து வெகு ராஜ தந்திரத்தோடு உரையாடிய அவர் குறைஷியரிடம் திரும்பச் சென்று கூறிய வார்த்தைகள் சத்திய ஆழம் மிகுந்தவை. என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும் (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும் (அபிசீனிய மன்னன்) நஜ்ஜாசியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே யில்லை. என்று உர்வா கூறினார். (ஸஹீஹுல் புகாரி - 2734)முஹம்மது (ஸல்) அவர்களது செல்வாக்கு சர்வாதி காரத்தன்மையின் எச்சமல்ல. அப்படி இருந்திருந்தால் ஹிட்லரைப் போல லெனினைப் போல அவரும் பின்னாட்களில் ஏச்சுக்கு ஆளாகி யிருந்திரப்பார்.அவரது செல்லாக்கு தத்துவார்த்தமானது மட்டுமல்ல. நடைமுறையில் செல்லுபடியாகக் கூடியது. அவரது வார்த்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நடைமுறையில் என்ன செல்வாக்கை பெற்றிருந்தோ அதே செல்வாக்கை இன்றைக்கும் பெற்றிருக்கின்றன.முந்தைய இறைத்தூதர்கள் உட்பட வேறெந்த தலைவருக்கும் இத்தகைய பிரம்மிப்பூட்டுகிற செல்வாக்கு கிடையாது.அவரது செல்வாக்கு குறைவுடையது அல்ல முழு சமூகத்தையும் அது வியாபித்திருந்தது. இன்றும் வியாபித்திருக்கிறது. அவரது மனைவியரும் அவரது நெருங்கிய உறவுகளும் நண்பர்களும் ஏன் எதிரிகளும் கூட அவர் மீது பெரும் மரியாதையை வைத்திருந்தனர். இன்றளவும் அந்த மரியாதை பாதுகாhக்கப்பட்டு வருகிறது. ஒரு அனாதைச் சிறுவராக மக்காவில் தொடங்குகிற அவரது வாழ்கை மனித சமூகத்தின் சரித்திரத்தின் சிகரத்தை தொட்ட வரலாராக வடிவம் பெற்றதென்றால் அதன் பின்னணியில் உள்ள நிகழ்வுகள் விறுவிறுப்பும் உணர்வெழுச்சியும் மிகுந்தவை.பெருமானாரின் செல்வாக்கிற்கு ஆதிக்கமோ, படைபலமோ, பணபலமோ காரணம் அல்ல அவரது மனிதநேயப் பண்புகளே காரணம். அடிக்கோடிடிட்டு கவனிக்க வேண்டிய விசயம் இது. வரலாறும் இந்த உண்மைய புரிந்து தான் வைத்திருக்கிறது. தத்துவ இயல் அறிஞர் ராம கிருஷ்னா ராவ் மிக அருமையாக சொன்னார். வாள் முனையின் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் முஹம்மதுவின் குணஇயல்பே அவரது வாழ்கை பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்திருந்தது. வரலாற்று ஆய்வாளரைவிட ஒரு தத்துவ அறிஞர் தான் இதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர்.திருக்குர்ஆன் பெருமானாhரது ஆற்றலை பாராட்டுலதை விட அவரது பண்பையே பிரமாதப்படுத்தி கூறியிருக்கிறது. தாவூத் நபியின் ஆற்றல் சுலைமான் நபியின் ஆதிக்கம் மூஸா நபியின் துணிவு இபுறாகீம் நபியின் அர்ப்பணிப்பு ஆகியவை திருக்குர்ஆனில் பாராட்டப் பட்டிருக்கின்றன. முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனைத்து இறைத்தூதர்களின் அருங்ணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த போதும் இறைவன் அவரை அவரது பண்பாட்டை குறிப்பிட்டு பிரம்மாண்டப் படுத்துகிறான். நீர் மகத்தான குண இயல்பை கொண்டிருக்கிறீர் என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்68.4) இந்த வசனத்தில் கையாளப்பட்டள்ள அழீம் என்ற வார்த்தை குணம் என்ற பொருள் கொண்ட குல்கு என்ற சொல்லுடன் சாதாரணமாக இணைக்கப்டுவதில்லை. அல்குல்குல் மஹ்முத் புகழுக்குரிய குண இயல்பு என்று சொல்லப்டுவதுதான் இயல்பு. அந்த சொல்லாக்கத்தை விடுத்து மகத்தான என்ற பொருள் தரும் அழீம் எனும் சொல்லை இறைவன் பயன்படுத்திருப்பது நபிகள் நாயகத்தின் குணச்சிறப்பின் சிகரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என திருமறை விரிவுரையாளர் குர்துபி குறிப்பிடுகிறார். மானுடத்தின் உச்ச பட்சமான உயரிய குண நலன்கள் அவரிடம் வெளிப்பட்டன. அவர் குறித்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ள பன்னூற்றுக்கணக்கான தகவல்களில் ஒரு சில தகவல்கள் மட்டுமே இந்த உண்மையை அறிந்து கொள்ள போதுமானவை. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எந்த ஒரு பெண்iணையும் பணியாளரையும் அடித்ததில்லை என்று அவருடைய மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் முஸ்லிம் 4296) இந்த ஒரு விசயத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் சிநத்தித்துப் பார்த்தால் ஒரு மகத்தான மனிதரின் தோற்றம் நம் மனக் கண்ணில் விரியும். எங்கிருந்தாலும் இறைவனை பயந்து கொள்ளுங்கள். தீமைக்கு பதிலாக நன்மையை செய்யுங்கள் அது தீiமைய அழித்துவிடும். மக்களிடம் நற்குணத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் தன்னுடைய தோழர்களுக்கு சொன்னார் நபித்தோழர் அபூதர் (ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி -1910) இந்த அறிவுரை நபிகளாரது வாழ்வு முழவதிலும் அவர் கையாண்ட வாழ்வியல் கோட்பாடாகவே இருந்தது. இறைவன் மீது ஆணையாக. எவருடைய பக்கத்து வீட்டுக்காரார் பாதுகாப்பாக இல்லையோ அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல.என்று முஹம்மது (ஸல்) அவர்கள் பகக்த்து வீட்டக்காரருக்காக பரிந்து பேசிய சந்தர்பத்தில் சமய ரீதியில் அவர்களைப் பிரித்துப்பேசவில்லை. எவர் முஸ்லிம் அல்லாதவர்களுடைய பொருட்களை அபகரிக்கிறாரோ அவர் மறுமை நாளில் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்காக வாதிடும் வக்கீலாக என்னை காண்பார் என்ற முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகில் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்பவர்களே மறுமை நாளில் பெருந்தோல்வியடைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் நரகத்தில் தங்களது ஒதுங்குமிட்த்தை காண்பார்கள என்றும் கூறினார்கள்.சமூக நீதியை நிலை நாட்டுவதில் அவருக்கிருந்த பற்றுறுதி காரணமாக பிற சமயத்தவர்கள் விரும்பிச் சென்று தங்களது பிரச்சினைகளில் நீதி கேட்டுச் செல்வார்கள் என்பதற்கு அவரது வாழ்வில் நிறைய உதாரணங்கள் உண்டு. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் சில போர்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் கூட அவர் சண்டையை சச்சரவை விரும்பியவராக இருக்கவில்லை. அரபுகளிடையே தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த சண்டை சச்சரவுகளுக்கும் பூசல்களும் அவர் முடிவு கட்டிய விடிவெள்ளியாக இருந்தாரே தவிர மனிதர்களை காவு கேட்கும் போர்களுக்கு அவர் காரணமாக இருந்ததில்லை. நபிகளாரின் 35 வது வயதில் புதுப்பிதது கட்டப்பட்ட கஃபா ஆலயத்தின் சுவற்றில் அஸ்வத் கல்லை பதிப்பிக்கிற பெருமை தங்களுக்குத்தான் வேண்டும் என்று அரபுக் குலங்கள் சண்டையிட்டுக் கொண்டபோது எழுந்த பிரச்சினையை தீர்க்கிற பொறுப்பு பெருமானாhருக்கு ஏற்பட்டது. ஓரு போர்வையை விரித்து ஒவ்வவொரு குலத்தாரையுமும் போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொள்ளச் செய்து அஸ்வத் கல்லை எடுத்து பதித்த விதம் பெருமானாரின் தத்தவார்த்த பார்வையின் விசாலத்தை புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நிலமெல்லாம் ரத்தம் நூலில் பா.ராகவன் எழுதுகிறார் முஹம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள் புதைந்திருக்கிறது. அரபியர்களிடையே ஒற்றுமை என்ற அவருடை பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இது தான் என்று அவர் எழுதியுள்ளார். இந்த வார்த்தைகளில் கூட ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. நபிகளாருடைய பெருங்கனவு அரபியர்களுடைய ஒற்றுமையை அல்ல மனித குல ஒற்றுமை என்று திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னுடைய வாழ்நாளில் அரபிய இனம் சார்ந்த பெருமைப் பேச்சு எதையும் அவர் ஒருபோதும் பேசியதில்லை.அரபி மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று விளித்த இன வெறி கோலோச்சிய ஒரு சமுதயத்தில் இனவாதத்தின் பெருமை தொனிக்கிற ஒரு சொல்லையேனும் அவர் உதிர்த்திதில்லை என்பதும் அப்படிப் பேசாமலே அரபுகளின தலைமையை அவர் பெற்றார் என்பதும் பேராச்சரியத்திற்குரிய விசயங்களே! மொழி அல்லது தேசியத்தின் செருக்கு பிடிக்காமல் வாழ்ந்த தலைவர்கள் யாரேனும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். மானுடப் பொதுமையை போற்றிய முஹம்மது (ஸல்) அவர்களைததவிர வெறெவரையும் அந்தப்படடியலில் பார்க்க முடியாது. அனைத்து மக்களையும் சகோதர சகோதரிகளாகவே நடத்து மாறு தனது தோழர்களுக்கு அவர் கட்டளையிட்டார். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதம் மண்ணால் படைக்கப்பட்வர் என்று கூறுவது பெருமானாரின் வழக்கமாக இருந்தது.போர்க் களத்திலும் கூட யுத்தத்தில் நேரடியாக தொடர்புடையவர்களைத்தவிர மற்றவர்களை கொலல் அவர் அனுமதித்ததில்லை. பெண்கள் குழந்தைகள் ஆலயங்களில் வழிபாடு செய்பவர்கள் எவரையும் கொல்லக் கூடாது என்று தன்னுடைய தளபதிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னாட்களில் அவர் மக்காவை வெற்றி கொண்ட போது அவரோடு போரிட்டவர்களை போர் குற்றவாளிகளாகவே அடிமைகளாகவோ அவர் நடத்தவில்லை. அந்த எதிரிகள் அவரக்கு சொல்லெணாத் துயரங்களை வழங்கியவர்கள் என்ற போதும் அவர்களை மன்னித்து சுதந்திரமாக வாழ அனுமதித்தார் என்பது வரலாற்றாசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் செய்தியாகும். இன்றைய நாகரீக யுகத்தில் யுத்தத்தில் வென்று நாடுகளை ஆக்ரமித்து அங்குள்ள செலவ வளங்களை கபளீகரம் செய்துவிட்டு அதற்குப்பின்னரும் அந்த நாட்டுத தலைவர்களையும் வீரர்களையும் குற்றவாளிகளாக கூண்டிலடைத்து சித்தரவதை செய்வதை ஜனநாயத்தின் பேரால் நியாயப்படுத்துபவர்களையும், பத்ர் யுத்தத்தின் போது மஸஜிதுன்னபவீ பள்ளிவாசலில் கட்டப்படடிருந்த குறைஷிக் கைதிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடுமாறு உத்தரவிட்ட முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரு கணம் ஒப்பிட்டப்பார்த்தால் பெருமானாரின் நற்குணத்தை பிரம்மாண்டமானது என்று இறைவன் குறிப்பிட்டதின் நியயாயத்தை அறிந்து கொள்ளலாம். தீவிரவாதத்தை ஒழித்துக்; கட்டுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு மேலும் மேலும் தீவிரவாதததை வளர்த்துக் கொண்டிருக்கிற தலைவர்களிடையே முஹம்மது (ஸல்) அவர்கள் ஆச்சரியமான தலைவராக உயர்நது நிற்கிறார்கள். வன்முறையை நன்முறையால் தடுப்பது என்ற முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறை தான் தீமையை அழிக்கிற சக்தி கொண்டது என்று அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்னாட்ஷா சொன்னார் இன்றைய நவீன உலகின் சர்வாதிகாரத்தை அவரைப் போன்ற ஒரு மனிதர் ஏற்றுக் கொண்டால் அமைதியையும் மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில் இந்த உலகின் பிரச்சினைகளளை தீர்ப்பதில் அவர் வெற்றியடைவார். வரலாறு கூறும் இந்த நற்செய்திகளுக்கு இடையே முஸ்லிம் சமுதாயம் பெருமானாhரைப்பற்றி ஏற்படுத்தியிருக்கிற அடையாளம் எத்தகையது என்பது கேள்விககுரியதாகும். பெருமானார் கற்றுக் கொடுத்த தத்துவங்கள் பண்பாட்டுப் பொழிவுகளின் வழியே முன்னர் வாழ்ந்த சமதாயம் பெருமானாhரை மிகச்சிறப்பாக அடையாளப்படுத்தியருரந்தது. அதன் மூலம் பலர் முஹம்மது (ஸல்)அவர்களின் வழி பற்றி விழி பெற்றார்கள். வலிமை மிக்க ஒரு இளைஞனை ஒருவர் தேவையின்றி அடித்துவிட்டார். அந்த இளைஞன் அதை பொறுத்துக் கொண்டு சும்மா இருந்தான்.அந்தக்காட்சியை ஆச்சரியமாக பார்ததுக் கொண்டிருந்த மர்மடியூக் பிக்தால் ஏனெப்பா நீ அவரை ஒன்றும் செய்ய வில்லை என்று கேட்டார். பெரியவர்களை மதிக்காதவர் எம்மைச் சார்ந்தவரல்ல என்று எங்கள் நபி சொல்லியிருக்கிறார் என்று இந்த இளைஞன் பதில் சொன்னான். அந்த வார்ததைகள் ஏற்படுத்திய தாக்த்தின் விளைவாக பிக்தால் இஸ்லாமை தழுவினார். அந்த பிக்தால் தான் திருக்குர்ஆனுக்கு முதன் முதலாக ஆங்கில மொழிபெயர்ப்பை எழதினார் என்பது பழைய வரலாறு. இன்றைய முஸ்லிம் சமுதாயமான நாம் பெருமானாரை அடையாளப்படுத்தும் விதம் இத்தகைய தரத்தில் இல்லை என்பது கசப்பாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையே!ஒரு பத்ரிகை முஹம்மது (ஸல்)அவர்களை உடலில் வெடி குண்டை கட்டிக் கொண்டுள்ள தீவிரவாதியாக சித்தரிக்கத் தலைப்பட்டது என்றால் அதற்கு காரணம இன்றைக்கு வாழும் முஸ்லிம் சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களை அப்படி அடையாளப்படுத்தியது தான்; என்று ஒருவர் வாதிட்டால் அந்த வாதத்தை மறுப்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் என்ன இருக்கிறது ? வன்முறை அல்லது பயங்கர வாதம் அல்லது மனித வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவை இஸ்லாமின் பெயரோடு இணைத்து கொச்சைப்படுத்தப் படுகிறதென்றால் அதை இஸ்லாமின் எதிர்ப்பாளர்களுடைய கைங்கர்யம் என்றும் மீடியாக்களின் பயங்கரவாதம் என்றும் நாம் ஓதுக்கிவிடுகிறோம். ஆதே நேரத்தில் நமது நடவடிக்கைகளை கவனிக்கிற உலக சமுதாயம் எத்தகைய மனோ நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்று றாம் யோசித்துப்பார்ப்பதில்லை.உலகம் ஒரு சர்வதேச கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் உலகின் எந்த முளையில் ஒரு செயல் நடந்தாலும் அது சர்வதேச பார்வையை பெற்றுவிடுகிறது. உலகளாவிய முஸ்லிம் சமுதயம் யூத கிருத்துவ அமெரிக்க ஐரோப்பியச் சக்திகளால் மிகத்தீவிரமான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலடியான நடவடிக்கைள் ஆதிக்க வெறித்தனத்தின் எதிர்விளைவாக கருதப்படாமல் இஸ்லாமிய பயங்கரவாதமாக முஹம்மதீய தீவரவாதமாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு முஸ்லிம்களும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். இஸலாமின் அடிப்படைகளுக்கும் முஹம்மது (ஸல்)அவர்களின் போதனைகளுக்கும் எதிரான போரட்ட முறைமைகளை கொண்டவர்கள் அதற்கு இஸலாமிய ஜிஹாதியச் சாயம் பூசுவதால் அது தவறான விமர்ச்சனஙகளுக்கு காரணமாகிவிடுகிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் விளையாடுகிற கிரிக்கெட் போட்டிகளின் போது அநியாயத்திற்கு தேவையில்லாமல் லாயிலாக இல்லல்லாஹ் என்ற கோஷம் எழுப்பபடுகிறது. ஓரு விளையாட்டில் வெறியேற்றும் கோஷம் இஸ்லாமின கலிமாவாக அமையும் போது அது சர்வதேச பார்வையாளர்களிடம் தேவையற்ற முகச்சுளிப்பை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளாமல் இருந்து விட்டால் அது முஹம்மது (ஸல்) அவர்கள் சமய மூர்க்கத்தனம் கொண்டதொரு சமதாயத்தை உருவாக்கிவிட்டதாக எதிர் விளைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.சமுதாய அளவிளான நமது நடவடிக்கைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பித்த உயரிய பண்பாடுகளின் அடிப்படையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது இன்றைய நமது பிரதான கடமையாகும். குறைந்த பட்சம் எந்த ஒரு விசயத்திலும் நமது நடவடிக்கைகள் இஸ்லாமின் அந்தஸ்த்திற்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் என்றால் அதை இஸ்லாமியப்பெயரால் அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும்.பெருமானாரைப் பற்றி மற்றவர்கள் விளங்கி வைத்திருப்து தவறானதாகவும் உண்மையிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றதாகவும் இருக்கிறது என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்கிறார்கள்.அடுத்த முறை அப்படிச் சொல்வதற்கு முன்னால் கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்துக் கொள்வது நலம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-938510093599709581?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/938510093599709581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=938510093599709581' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/938510093599709581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/938510093599709581'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_6354.html' title='மானுட வசந்தம்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-7670849355821781031</id><published>2007-12-01T09:50:00.000-08:00</published><updated>2007-12-01T09:51:10.113-08:00</updated><title type='text'>நம்பினோர் கெடுவதில்லை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஏப்ரல் மாதத்தின் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்பார்கள். பிரஞ்சுக்காரர்களிடமிரு;நது உலகிற்கு பரவிய இந்தப்பழக்கம் தேவையா? தேவைற்றதா? என்ற விவாதம் அறிவுலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அந்த நாள் நமக்குத் தருகிற ஒரு எச்சரிக்கை முக்கியமானது. யாரும் நம்மை ஏமாற்றி விடக்சுடாது, நாம் ஏமாந்து விடக் கூடாது என்ற என்ற எச்சரிக்கை அந்த நாள் முழுவதும் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும்.அந்த எச்சரிக்iயுணர்வை காலம் முழுவதும் கைகொண்டால் மட்டுமதான் ஒரு மனிதர் அவர் பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியும். இந்த எச்சரிகை;கை உணர்வு முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது. பெருமானார்(ஸல்) அவர்கள் 'ஒரு முஸ்லிம் ஒரே பொந்திலிலிருந்த இரு முறை தீண்டப்படக்கூடாது என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள் ஒரு விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டவை. ஒரு முறை விபத்து ஏற்பட்டால் அது எதார்த்தம். ஆதே விபத்து இரண்டாம் முறை ஏற்பட்டால் அது ஏமாளித்தனம். இந்த ஏமாளித்தனம் நமது வெற்றியை பறித்து விடக்கூடியது. எனவே ஏமாந்து விடக்கூடாது என்பதில் எப்பொதும் எச்சரிக்கையாக இலக்க வேண்டும். குறிப்பாக மார்க்க விசயத்தில் ஏமாந்துவிடக்கூடாது. மற்ற விசயங்களில் ஏமாந்துவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட மார்க்க விசயத்தில் ஏற்படுகிற ஏமாளித்தனம் அதிக பாதிப்பை தரக்கூடியது. எந்த ஒரு சிறுவிசயத்திலும் ஏமாற்த்திற்குள்ளாகதவாறு பாததுகாத்துக்கொள்ளத் தேவையான அறிவையும் அறிவுரைககளையும் இறைவனும் இறைத்தூதரும் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். தெளிவான மார்க்க அறிவை பெறுவதன்; மூலம் முஸ்லிம்கள் மார்க்கத்தல் ஏமாந்துவிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மதங்களுக்கும் அறிவு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள உறவு தூரத்து உறவு தான் என்ற சிந்தனை சமூகத்தில் நிலவிவருகிறது. அது மற்ற சமயங்களுக்கு பொருந்துமோ என்னவோ இஸ்லாத்திற்கு அறவே பொருந்தாது. இஸ்லாம் அறிவின் தளத்தில் இயங்கக் கூடிய சமயம். இஸ்லாம் கட்டளையிடும் வணக்கவழிபாடுகள் கூட அறிவு பெறுவதின் அடிப்படையிலேயே கடமையாகின்றன. ஒரு ஹிந்துவோ கிருத்துவரோ எந்த அறிவும் தெளிவும் பெறாமல் கோயிலக்கோ தேவாலயத்திற்கோ சென்று அவருடைய சமய வழிபாட்டை நிறைவேற்றிவிட முடியுமும். ஆனால் ஒரு முஸ்லிம் மார்க்கத்தின் எந்த ஒரு கடமையையும் அதைப் பற்றிய அறிவைப் பெறாமல் நிறைவேற்ற முடியாது. தொழுகை பல வகைப்பட்ட பாடங்களை கொண்டது. நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற மற்ற கடமைகளும் அப்படியே! ஓரு புத்தகம் நிநை;த விசயங்களை அறிந்து வைத்திருந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற முடியும். ஒருவர் இறைவணை வணங்கி வாழ்வதை மட்டுமே வாழ்கையாக கொண்டிருந்தால் அவரும் கூட அதற்கான பாடங்களைப்படித்து அறிவு பெற்றாக வேண்டும். எனவே அறிவு பெறுதல் என்பது இஸ்லாத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். தண்ணீரின் தரமும், காலஅளவும், தொழுகையின் ஒழுங்கும், தொழுகைக்கு முந்தைய ஒழுங்குகளப்பற்றிய தொளிவும் இருந்தால் மட்டுமே ஐவெளை தொழுகையை ஒரு முஸ்லிட் நிறைவேற்ற முடியும். ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு ஓரளவேனும் கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதற்கு சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. எவரையும் அணுகி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எந்த அடையாளத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. லாயிலாக இலல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹி என்ற கலிமாவை மனதால் நம்பி அதை நாவால் கூறி உறுதி செய்தால் போதுமானது. இஸ்லாத்தின் முதல் கடமையான கலிமாவை மொழிவது என்ற இந்த விசயம் கூட கலிமாவை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டபின்னரோ அர்த்தம் பெறும். எனவே தான் திருமறை அல்குர்ஆன் கலிமா சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. லாயிலாஹ இல்லல்ஹுவை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. ஒருவர் இஸ்லாத்தின் வாசலில் அடியெடுத்து வைக்கிற போதே அது அறிவு பெறுதலின் அடிப்படையில் அமைகிறது என்பதை இது புலப்படுத்துகிறது. அறிவு பெறுதல் அல்லது அறிவுவழி சாhந்து நடப்பது என்பது இறை நம்பிக்கைகு அடுத்த அம்சமாகும். மார்க்க நூல்கள் பலவற்றிலும் ஈமான் இநைவிசுவாசம் என்ற பாடத்திற்கு அடுத்தபடியாக இல்ம் கல்வியறிவு எனும் தலைப்பில் பாடம் அமைந்திருப்பதை காணலாம். திருக்குர்ஆனுக்கு அடுத்த மரியதைக்குரியதாக கருதப்படம் ஸஹீஹுல் புகாரி என்ற நபிமொழித் தொகுப்பிலும் மற்ற பல மார்க்க நூல்களிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் அறிவுக்கும் சிந்தனைக்கும் தரப்பட்ட இந்த முக்கியத்துவம் தான் முஸ்லிமகளை அறிவியலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சகல துறைகளிலம் அவர்கள் சாதனை கொடிகளை நாட்டினார்கள். அறிவியலின் மூலக்கூறுகளை உலகிற்கு அவர்களால் அடையாளம் காட்ட முடிந்தது. ஈமானுக்கு அடுத்து அறிவுபெறுவதற்கு முக்கியத்துவம் தரப்படடிருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் ஒன்று உண்டு. ஒருவர் அவரக்கு கிடைத்த அரிய செல்வமான ஈமானை சரியான அறிவு பெறுவதன் மூலமே பாதுகாக்க முடியும். ஓரு முஸ்லிம் போதுமான அறிவை பெற்றிராவிட்டால் சில சந்தாப்பங்களில் அவரை அறியாமலே அவரக்கு கிடைத்த ஈமானியச் செல்வத்தை இழக்க நேரிடும். ஓரு முஸ்லிம் மார்க்கத்தின் அடிப்படையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதைப்பற்றிய அறிவை அவர் வைத்திருப்பது அவசியம். ஆந்த அறிவை அவர் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் அவரது செயல்கள் வெற்றுச் சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மதிப்பிழந்துவிடும். முஸ்லிம்கள் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்ற வைப்பதற்கு எதற்காக என்ற விபரத்தை பலர் அறிந்து கொள்ளாததனால் அது சடங்காகிவிட்டது. ஒரு சிலர் அதையே வணக்கமாக தவறாக அர்தப்படுத்திக் கொள்கிற விபரீதம் ஏற்பட்டது. கடையை திறந்து வைத்ததும் நாகூர் தர்காவின் படத்திற்கு ஊதுபத்தி ஆராத்தி எடுக்கிற பழக்கம் சில முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றால் அந்த மாபாதகத்திற்கான முதல் காரணம் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்றவைக்கப்படவதின் காரணத்தை அறியாததே ஆகும். ஒரு நல்ல சபையில் வாசணையாக இருக்கட்டுமே என்ற அர்தத்திலே ஊதுபத்தி பற்றவைக்கப்படுகிறது. அதை தவிர அதற்கு மார்க்கத்தில் வேறு எந்த பொருளும் இல்லை என்பதை ஒரு முஸ்லிம் அறிந்து வைத்தால் கடையை திறந்ததும் ஊதுபத்தி பற்றவைப்பார். அது வாசணைக்காக. சாம்பிராணி புகை காட்டுவார் அது வாசணைக்காகவும் சுகாதாரத்திற்காகவுமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்ய முற்படும்போதும் இது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்ற விபரத்தை அறிந்து கொண்டால் மார்க்க விசயத்தில் ஏமாந்து போகாமல் இருக்கவும் கடமைககைள சரிவர நிறைவேற்றவும் முடியும். இஸ்லாம் அறிவுவழி சார்ந்த சமயம் எனும் போது அதில் மூடநம்பிக்கைளுக்கு இடமில்லை. எந்த ஒரு செயலும் அதற்குரிய நியாயம் அறிந்து செய்யப்படவேண்டும். மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளை ஒரு முஸ்லிம் நம்பினாலோ அல்லது மார்க்க அடிப்படையற்ற ஒரு செயலைச் செய்தாலோ அது முடநம்பிக்கையாகவும் மூடச்செயலாகவும் கருதப்படும். அப்படிச் செயல்படுவது ஈமானிய நம்பிக்கைகளை சிதைப்பதாகவும் இஸ்லாமிய விழுமியங்களை சீரழிப்பதாகவும் ஆகிவிடும். அதுமட்டுமல்ல நாம் ஏமாளியாகவும் நேரிடும். பெருமானார்(ஸல்)அவர்கள் மிகச்சரியான எச்சரிக்கைகளை தந்து சமதாயம் அர்த்தமற்ற கருத்துக்களிலும் பயனற்ற செயலகளிலும் ஏமாந்துவிடாமல் இருக்க தகுந்த எச்சரிக்கை களை செய்துள்ளார்கள். பெருமானார் (ஸல்)அவர்களுக்கு அவர்களுடைய 60 வது வயதில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இபுறாகீம் என்று பெயரிட்டார்கள். அந்தக்குழந்தை தோற்றத்தில் பெருமானாரைப்போலவே இருந்தது. நீண்ட காலததிற்குப்பிறகு பிறந்த அந்தக்குழந்த தன்னனைப்பெலவே இருந்ததில் பெருமானார் அதிகம் மகிழ்சியடைந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அந்தக்குழந்தையை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அது அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது. கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடும் அளவு அழுதார்கள். மதீனா நகரம் சேகததிலிருந்தது. அந்த நாளன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்கள் சிலர் பெருமனாரின் குழந்தை இறந்துவிட்ட துக்கத்தின் காரணமாகவே கிரகணம் ஏறபட்டது என்று பேசிக் கொண்டார்கள். இந்தச் செய்தி பெரமனாரின் காதுகளுக்கு எட்டியது. தனது சோகம் பெரிது தான் என்றாலும் சமுதாயம் தவறான நம்பிக்கையில் விழுந்துவிடுவது அதைவிடப் பெரிய சேகமாகிவடும் என்று கருதிய பெருமானாhர்(ஸல்)அவர்கள் தனது சோகத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு மனிதரின் இறபபுக்கு துக்கம் அனுஷ்டிப்பதற்காகவும் கிரகணங்கள் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் வல்லமைக் கான சான்றுகள் என்று சொல்லி மக்களின் சிந்தனையை மூடியிஐந்த திரையை அகற்றினார்கள். எத்தகைய ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து எண்ணிப்பார்த்து முஸ்லிம்கள் பெறுமையடையத்தகுந்த நிகழ்சி இது. அதே ரேத்தில் தனது புத்திர சோகத்தை மறந்து விட்டு நம்மை நலவழிப்படுத்தியவரின் தொண்டாக்ள என்ற வகையில் அந்த வழிகாட்டுதலை இறுக்கமாக பற்றிக்கொள்கிற கடமை முஸ்லிம்களுக்கு உணர்த்தும் நிகழ்சியாகவும் இது அமைகிறது. பெருமானாரின் வழி வந்த நபித்தோழர்களும் இத்தகைய விழிப்பணர்வை தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். உமர்(ரல) அவர்களின் காலத்தில் ஹுதைபிய்யாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தை முஸ்லிம்கள் அங்கு செல்வதையும் தொழுவதையும் புனிதமாக கருதினார்கள். ஹ}தைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் அந்த மரத்தினடியில் தான் பெரமானார்(ஸல்)அவர்கள் சஙாபாக்களிடம் பைஅத் பெற்றார்கள். அப்பொது தான் அம்மக்கள் குறித்து தான் திரபதியடைவதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அந்த மரம் இதுதான் என்று நினைத்து மக்கள் அங்கு சென்று கொண்nருந்தார்கள். உண்மையில் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட சஙாபாக்களால் கூட அந்த மரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் உமர் (ரலி) அந்த மரத்தை வெட்டி எறிந்தார்கள். மார்க்கத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விசயத்தை மக்கள் புனிதம் என்று கருதியது மிகவும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவே அந்த மரத்தை வெட்டி வீசினார்கள். ஹாபிழ் இப்னுகதீர் அவர்கள் தனது அல்பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகிற இன்னொரு செய்தியும் இங்கு நினைவு கூறத்தக்கது தான். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தை வெற்றி கொண்டு அந்த அன்னிய மக்களின் நகரங்களின் ஒன்றான புஃனா நகருக்குள் நுழைந்த போது அந்நகர மக்கள் அவரிடம் கூறினார்கள்:விசுhவாசிகளின் தலைவரே! இந்த நைல் நதிக்கு நாங்கள் வழக்கமாக செய்யும் ஒரு சடங்கு உண்டு! அது என்ன என்று அம்ர்(ரலி) கேட்ட போது அம்மக்கள் கூறினார்கள்: இம்மாதத்தின் பதினெட்டாம் இரவில் நாங்கள் ஒரு கன்னிப்பெண்ணை அணுகி அவளது பெற்றோரை சம்மதிக்க வைத்த பிறகு அவளுக்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த ஆடைகளையும் நகைகளையும் அணிவிப்போம் பிறகு அவளை இந்த நதியில் வீசி விடுவோம் என்றனர்.அதற்கு அம்ர்(ரலி) அவர்கள் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. முந்தைய கலாச்சாரத்தை இஸ்லாம் தகர்த்து விட்டது என்று கூறி அதை அதை மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் புஃனாவில் தங்கியிருந்தார்கள். நைல்நதி குறையவுமில்லை கூடவுமில்லை. ஒரு சமயம் நைல் நதியில் தண்ணீர் ஒடவில்லை. அதனால் அவர்கள் அங்கிருந்து கிளம்ப நினைத்ததார்கள் அப்போது அம்ர் (ரலி)உமர்(ரலி)அவர்களுக்கு இதுபற்றி கடிதம் எழதினார்;. அதற்கு உமர் (ரலி) நீர் சரியாகவே செயல்பட்டுள்ளீர். இந்தக்கடிதத்துடன் ஒரு ஓலையை வைத்துள்ளேன். அதை நைல்நதியில் போட்டு விடுவீர் என்று பதில் எழுதினார்கள்.அந்த ஓலையை அம்ர் (ரலி) திறந்து பார்த்த போது அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. இறைவனின் அடிமையும் விசுhவசிகளின் தலைவருமான உமரிடமிருந்து நைல்நதிக்கு.நீ உனது விருப்பப்படி ஓடுவதாக இருந்தல் ஓட வேண்டாம். அடக்கியாளும் சக்தி மிக்க ஏகனான அல்லாஹ்தான் உன்னை ஓட்டுவதானால் நாங்கள் அல்லாஹ்விடம் உன்னை ஓடச் செய்யுமாறு கோருகிறோம். அம்ர் (ரலி) அந்த ஓலையை நைல்நதியில் போட்டார். ஒரே இரவுக்குள்ளாக அந்த சனிக்கிழமை காலை நைல்நதியில் 16 முழம் நீரை அல்லாஹ் ஓடச் செய்தான். எகிப்து மக்களின் அப்பழக்கத்தை அல்லாஹ் இன்று வரை தடுத்துவிட்டான். இப்னு கதீர் (ரஹ்) குறிப்பிடும் இந்த வரலாறு பெருமானார்(ஸல்)அவர்கள் கட்டமைத்துத தந்த பாதையில் முஸ்லிம் சமுதாயம் தௌவிhன சிந்தனையோடும் வலுவான செயல்திட்டத்தோடும் செயல்பட்டதற்குமான ஒரு அடையாளமாகும். ஏந்த ஒரு செயலையும் மார்ககத்தின் கருத்தற்ந்து செயல்படும் போது செயல்படுகிற போது கிடைக்கிற நன்மையையும் நேர்வழியையும் இந்த வரலாறு மிகத்தெளிவாக எடுத்துரைககிற அதே சமயத்தில் அந்த தெளிவான இறைவிசுவாசத்தால் ஒரு வரலாற்றுத்தவறு தடுத்து நிறுத்தப்பட்ட நன்மையையும் படம்பிடிக்கிறது.மார்க்கத்தின் அடிப்படைகளைப்பற்றி தெளிவில்லாத நம்பிக்கைகளுக்கு சமுதாயம் ஆளாகிற போது அது சந்திக்கிற இழப்புகளும் நட்டங்களும் அதிகமாகிறது. ஓரு நண்பர் புதிய விடு கட்டினார். திறப்பு விழாவிற்கு எங்கிருந்தோ பச்சையும் பச்சையும் அணிந்திருக்ந ஒருவரை அழைத்துவந்தார். அவர் விடு முழுவதும் சாம்பிராணி புகையை படரவிட்டு ஏதேதோ பாட்டுக்களை பாடியபடி தன் இரண்டு கைகளையும் சந்தணக்கிண்ணத்தில் தோய்த்து சுவற்றில் ஆங்காகாங்கே தனது கை அடையாளத்தை பதித்தார் என்ற செய்தி என் காதுக்கு வந்தத. நான் சொன்னேன் அந்த நபரை அழைத்துவருவதற்கு செலவழித்த காசும் வீண். சுவற்றுக்கு அடித்த டிஸ்டெம்hரும் வீண். இவை எல்லாவற்றையும் விட பெரிய நஷ்டம் எது தெரியுமா? இப்படி செய்தால் அல்லாஹ் நனமையை தருவான் என்று அந்த நண்பர் நினைத்தால் அது தான் மிகப்பெரிய நஷ்டம்.மார்க்கத்தின் அடிப்படையில் நன்மை அல்லாததை நன்மையாக நினைப்பதும் தீமை அல்லாததை தீமையாக நினைப்பதும் மார்க்க விசயத்தில் ஏமாந்துபோவதாகவே அமையும்.முஸ்லிம் சமூகத்தில் அப்படி ஏமாந்து போனவர்களின் செய்திகளை தொகுந்தால் வலிமிகுந்த சுவையான ஒரு பெரிய புத்தகம் கிடைக்கும். பல அறிவாளிகளும் செல்வாக்குமிக்கவர்களும் கூட அந்த வலையில் அகப்படுவார்கள். இந்த முறை ஏப்ரல் மாதம் வரும் போது அந்தப் பட்டியலில் நம்முடைய பெயரும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வோம். ஓரு எச்சரிக்கைக்காகத்தன். நம்பினோர் கெடுவதில்லை.இது நான்கு மறை தீர்ப்பு என்பது நல்ல நம்பிக்ககைளுக்குத்தான். வானொலியில் ஒரு முறை கேட்ட கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.கடைவீதியில் ஒருவன் கூவினான் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நான்குமறை இதையே திருமப்த்திரும்ச் சொல்லி விட்டு ஐந்தாவவதாய் சொன்னாளன் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நாளைக்கே லட்சம் நமக்கு நிச்சயம். இந்த நம்பிக்கைக்கு யாரும் பொறுப்பல்ல.இறுதியாக இந்த இறைவசனத்தையும் நினைவில் வையுங்கள்.எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-7670849355821781031?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/7670849355821781031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=7670849355821781031' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7670849355821781031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/7670849355821781031'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_3486.html' title='நம்பினோர் கெடுவதில்லை'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-3112125783262469158</id><published>2007-12-01T09:47:00.002-08:00</published><updated>2007-12-01T09:48:59.648-08:00</updated><title type='text'>பள்ளித்தலமனைத்தும்...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஜுன் 2 ம் தேதி அன்று தமிழகம் முழவதும் பள்ளிக்கூடங்கள் ஆண்டு விடுமுறைக்குப் பின் திறக்கின்றன. மேல்வகுப்பில் அடியெடுத்து வகிக்கிற மகிழ்ச்சியில் சிறுவர்களும், அவர்களுக்கு தேவையான வற்றை பார்த்துப்பார்த்து செய்கிற அக்கறையில் பெற்றோர்களும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிற முயற்சியில் கல்வி நிறுவனங்களுமாய் தமிழகம் கலைகட்டிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் பூக்கள் மலர்வதாக கேள்விப்படுகிறோம். நகரியச் சூழலில் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நாம் பார்க்கக் கிடைக்கிற மலர்ந்த பூக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தான். ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகே நின்று பள்ளிக்கூடம் தொடங்கும் அந்த அழகை ரசித்துப் பாருங்கள். அன்றைய நாள் முழுதுக்கும் மனதுக்குள் சந்தோஷ மழைச் சாரல் அடித்துக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியை மிகுந்த அக்கறையோடு உள்வாங்கிக் கொண்டு செயல்படுகிற கடமை முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் நமது பிரச்சினைகள் அனைத்தும் நாளை மாலைக்குள் தீர்ந்து விடும் என்று பிரச்சாரம் செய்ய நிறைய முஸ்லிம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். உண்மையில் நம்மை வாட்டுகிற பல பிரச்சினைகளுக்குமான தீர்வு, நமது முன்னேற்றத்திற்கும் கவுரவத்திற்குமான விடிவு, பள்ளிக்கூடங்களின் தலைவாசலில்தான் இருக்கிறது. எந்த ஒரு அரசியல்வாதியின் விரலிடுக்கிலுமில்லை. திட்டவட்டமாக நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய உண்மை இது.முஸலிம் சமுhயம் இப்பொதெல்லாம் எதற்கெடுத்தாலும் சலுகைகளையும் அனுதாபத்தையும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கிற சமுதாயமாக இருக்கிறது. அடுத்தவர்களின கரிசனத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சமுதாயம் என்ற நிலை மாற வேண்டுமாhல் நாம் நாடிச் செல்ல வேண்டிய இடம் உறுதியாக கல்விக் கூடங்கள் தான். ஊனமுற்றவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் அனுதாபத்திpற்குரியவர்கள். சரியான அக்கறையின்மையiயும் வழிகாட்டுதல் இனமையையும் தவிர நம் சமுதாயத்திற்கு வேறு எந்தக் குறையுமில்லை சலுகைகள் கிடைத்தால் அது தற்காலிக சிரமப்பரிகாரமாக அமையுமே தவிர சமுதாயத்தின் ஆற்றலையும் திறனையும் மேம்படுத்தக் கூடியதாக ஒரு போதும் அமையாது. நமது ஆற்லையும் செயலூக்கத்தையும் தரமாக உயர்த்திக் கொள்ளாதவரை உலக சமுதாயத்Nதூடு நம்மால் ஒரு போதும் போட்டி போட முடியாது. திருக்குர்ஆனின் 2.249 வசனம் உலகிலே வாழும் சிறுபான்மை சமுதாயங்கள் அனைத்தும் எப்போதும்நினைவில் வைத்திருக்க வேண்டிய வசனமாகும். ஆனால் பெறும்பாலும் அது பத்ருப்போர் நினைவு நிகழ்சிகளின் போது மட்டுமே அதிகமாக பேசப்படுகிறது. பாலஸ்தீனத்தை ஆக்ரமித்திருந்திருந்த ஜாலூத் (கோலியாத்) தின் பெரும் படையினரை தாலூத்தின் சிறு படை வெற்றி கண்ட விதத்தை பறைசாற்றும் போது அல்லாஹ் கூறுகிறான் :அல்லாஹ்வின் நாட்டப்படி பல சிறுபான்மைக் குழக்கள் பெரும்பான்மையினரை வெற்றி கொண்டுள்ளனர். இந்த வசன அமைப்பபை கவனித்துப்பார்த்தால் இது ஒரு நிகழ்சியை மட்டுNமு குறிப்பிடுகிற தத்துவமல்ல என்பதும் உலகில் பொதுவாக நடைபெற்றுவருகிற நிகழ்வைத்தான் இது வெளிப்படுத்துகிறது என்பதும் புலனாகும். உலகிலே யார் எங்கு சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஆறுதலையுமு; நம்பிகை;கை வெளிச்த்தையும் தருகிற வார்த்தைகள் இவை. சுpறுபான்மை பெரும்பான்iமினரை வெற்றி கொள்வதற்கு அல்லாஹ் சில வழிகளை வைத்திருக்கிறான். எந்த ஓரு சிறுபானமைச் சமுதாயமும் அது வாழ்கிற சூழ்நிலையில் சில பிரச்சினைகளை சந்தித்துத் தான் ஆக வேண்டியிரக்கும். அது யாராக இருந்தாலும் சரி. அத்தகைய சந்தர்ப்பங்களில் தனது முன்னேற்றத்திற்கான சரியான வழிகளை கண்டறிந்து திட்டவட்டடமான சில கோட்பாடுகளை பிடிவாதமாக பின்பற்றினால் அந்த சமுதாயம் நிச்சயமாக மரியாதையை பெற முடியும். ஏன் அப்பொது தான் அந்தச் சமுதாயம் வாழவே முடியும். இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்கு சிறந்த உதாரணம் யூதர்கள் தான். ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் எத்தகைய கேவலமான வாழ்கை அவர்களுடையது? நாடுநாடாக துறத்தப் பட்டார்கள். கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்பட்டார்கள். அவர்களோடு கைகுலுக்குவதற்கு உலகில் எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் எத்தகையது? பாரம்பரிய விவசாய தேசமமான இந்தியாவிற்கு அவர்கள் விவசாய வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். பாதுகாப்பிலும் ரானுவத்திற்கும் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை முஸ்லிம் நாடுகள் நேரடியாக இறக்குமதி செய்யாவிட்டாலும் இன்னொரு நாட்டின் வழியாக இறக்குமதி செய்கின்றன என்று பத்ரிகை தகவல் தெரிவிக்கிறது. மிகக்குட்டியான ஆக்கரமிக்கப்பட்ட தொரு தேசத்தில் வாழ்கிற அவர்களது கருத்து மதிப்பாக எடுத்துக் காட்டப் படுகிறது. இதற்குக் காரணம் என்ன? வெளிப்படையாக பேசும் போது அமெரிக்காவும் இங்கிலாந்தும் காட்டுகிற கரிசனம்தான் இத்தனைக்கும் காரணம் என்று நாம் சொல்லிவிடலாம் தான். உண்மையில் அந்தக் கிருத்துவ நாடுகளிடம் கூட அத்ததகைய மரியாதையை அவர்கள் பெறுவதற்கு காரணம் கல்வித்துறையில் யூதர்கள் காட்டிய அக்கறையுமு; அவர்கள் அடைந்த முன்னேற்றமுமே காரணமாகும். ஆமரிக்காவில் யூதர்ச் சிறுபான்மையினர் நடத்துகிற பள்ளிக்கூடங்கள் பல உண்டு. அவற்றில் யூதரல்லாத ஒரு மாணவன் வெற்றியடைய 35 சதவீத மதிப்பெண்கள் போதுமானது என்றால் ஓரு யூதன் வெற்றியடைவதற்கு 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை அவர்கள் வைத்திருப்பதாக மௌலானா வஹீதுத்தீன்கான் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய கடுமையான பயிற்சிகளின் விளைவாகவே யுதர்களில் பெரும் அறிஞர்களளும் விஞ்ஞானிகளும் தோன்றினார்கள். அதன் விளைவாகவே அவர்களை மதித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு மற்றவர்கள் ஆட்பட்டார்கள். நம்முடைய நாட்டிலே கூட கிருத்துவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்? கிருத்துவ சமுதாயம் கல்வியறிவு பெறுவதில் முன்னிலையில் இருக்கிறது என்பது தான். நமது நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கும் ஆபத்துகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக பெருவாரியான மக்களால் முன்மொழியப்பட்டார். அரசியல் பாரம்பரியமோ எப்படியாவது பெரும் பதவியை பிடித்துவிடவேண்டும் என்ற ஆவலோ இல்லாத ஒருவர் நாடடின் உயர்ந்த பொறுப்புக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கல்வியறிவு தானே அதற்கு காரணம்? சிறுபான்மை பெரும்பான்மைய வெற்றி கொள்வதற்கான வழியை அல்லாஹ் எப்படி அமைத்திருக்கிறான் பாருங்கள்? லாயிலாக இல்லல்லாஹ் கலிமாவை மொழிந்து விட்டால் முஸ்லிம்களுக்கு மறுமையில் வெற்றி கிட்டும் என்பது நிச்சயம் தான். ஆனால் இந்த உலகில் வெற்றி பெறுலதற்கான காரணிகளை அல்லாஹ் எல்லோருக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறான். ஒரு கிருத்துவனோ யூதவனோ வெற்றியடைவதற்கு என்ன காரணிகள் தேவையோ அதே காரணிகள் முஸ்லிம்கள் வெற்றி பெறவும் பொதுவாக தேவைப்படும். அந்தக்காரணிகள் சரியாக இல்லையெனில் முஸலிம்களுக்கு வெற்றி என்பது ஒரு அதிசயமான பொருளாக ஆகிவிடும். ஆதிகாலம் தொட்டு இன்று வரை எந்த ஒரு தனிமனிதனுடையவும் சமுதாயத்தினுடையவும் மலர்ச்சிக்கு கல்விதான் பிரதான காரணமாக இருக்கிறது. கல்வி பெற்ற சமுதாயமே நிறைந்த நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை திருக்குர்ஆன் மிக அழுத்தமாக போதித்துள்ளது. குர்ஆனைப்போல இவ்வளவு அழுத்தமாக இன்னொரு வேதம் போதித்திருககிறதா என்பது சந்தேகத்திற்குரியதாகும். எவர் கல்வியறிவு கொடுக்கப் பெற்றாரோ அவர் நிறைவான நன்மைனகள் கொடுக்கப்பட்டவிட்டார் என்று திருக்குர்ஆன் (2.269) கூறுகிறது.நம்மிடம் கைகட்டி சேவகம் செய்தவர்களெல்லாம் இன்று டை கட்டி ஏவல் செய்யும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். வியாபாரிகள் என்ற நிலையிலிருந்த முஸலிம் சமதாயம் சிறுவியாhபாரிகள் என்று நிலைக்கு சிறுத்துவிட்டது. உணர்ச்சி வசப்படுவதற்கு மட்டுமே நமது இளைய தலைமுறை பயிற்று விக்கப்பட்டிருக்கிறது. அதனால் கல்வியறிவின் தீட்சணயமும் தெளிவும் அதற்கு விலக்கப்பட்டவிட்டது. அதன் விளையாக இழிச் சொற்களையும் கடும் தண்டனைகளையும் அது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் சில முஸ்லிம் இளைஞர்கள் ஒரு வியாபாரத்திறகு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பேருந்தில்; மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒரு இளைஞர் தினசரிப்பத்ரிகையை வரித்து வைத்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். முஸ்லிம் இளைஞர் அவருக்கு அருகே உட்கார்ந்தார்கள். அதில் சிரமம் ஏற்பட்டது. சற்று தள்ளி அமருங்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர் கொஞ்சமாக நகர்ந்தார். இன்னும் சற்று தள்ளி அமருங்கள் என்று கேட்டனர். துலுக்கப் பயல்களுக்கு... என்று முனுமுனுத்தபடி அவர் நகர மறுத்தார். பிரச்சினை பெரிதாகிவிட்டது. அவர் சட்டையை பிடித்தார். முஸ்லிம் இளைஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள். உடனே கைத்தொலைபேசியில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அவர் அந்த இளைஞர்களை போலீஸில் சிக்கவைத்தார். சமாதானம் செய்து கொண்டிருந்தவுரும் போலீஸில் சிக்கினார். அவருடைய மனைவிக்கு மறு நாள் வளைகாப்பு நடக்க இருந்தது. போலீஸிற்கு சென்ற பிறகு தான் அடிபட்டவர் ஒரு வக்கில் என்பது தெரிந்தது. பொது இடத்தில் தகறாறு என்பது சாதாரணமான ஒரு 75 கேஸ் தான். காவல் நிலையத்திNலுயே ஜாமீன் பெற்று விட முடியும். மறு நாள் கோர்ட்டில் பைனை கட்டி விட்டால் போதுமானது. ஆனால் அந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார். எந்த விசேஷத்தை எடுத்துக் கூறிய போதும் அவர் செவி சாய்க்கவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு தான் ஜாமீன் கிடைத்தது. வக்கீலை அடித்துவிட்டார்கள் என்பது பெரிய விசயமாகிவிட்டது. வக்கீல் திட்டியதோ சச்ரவு செய்ததோ அரங்கிற்கே வரவில்லை.ஏனப்பா! போலீஸ் உங்களைப் பிடித்த போது அந்த ஆள் எங்களை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டினாhன் என்று நீங்களும் அவாருக் எதிராக ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கலாம் தானே என்று கேட்டேன். எங்களுக்கு அதுவெல்லாம் தோன்ற வில்லை என்று அந்த இளைஞர்கள் பதில் சொன்னார்கள். ஒரு சிறு தகறாறை 5 நாள் சிறையில் வைக்கும் ஒரு வழக்காக மர்றுவதற்கு அந்த வக்கீலுக்கு அவரயை கல்வி உதவியது. முஸ்லிம்களின் கலவியறிவின்மை வழக்கிற்கு காரணமானவன் நழுவிச்செல்வதற்கு வாய்ப்பளித்து விட்டது. நமது உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கும் நமக்கு ஏற்படுகிற தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கூட உரிய கல்வியறிவு இருந்தால் மட்டுNமு முடியும்.இல்nலை எனில் நமக்கேற்படுகிற சோதனைகள் தொடர்கதையாகிவிடும். நமது தலைமுறை தான் கல்விபெறுவதில் பின் தங்கிவிட்டது. நமக்கு அடுத்த தலைமுறை அந்த பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்றால் கல்pயறிவு விசயத்தில் நமது கவனிப்பு தீவிரமடைய வேண்டும். எத்தகைய தீpவிர கவனத்தை செலத்த வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் உண்டு. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒரு கிருத்துக் குடும்பம் டியூஷன் நடத்திக் கொண்டிருந்தது. முஸ்லம் மாணவர்களோடு அந்த வீட்டுப் பையனும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அந்த வாhத்தியாரின் மனைவி தன்னுடைய மகனை கண்டிக்கிறார். டேய் ஒழுங்கா படி. முஸ்லிம் பசங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழுச்சுக்குவாங்க! நீ நல்லா படிச்சாத்தான் உனக்கு சாப்பாடு என்று கண்டித்ததாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம் சொன்னார். எப்படி ஆர்வம் ஊட்டுகிறார்கள் பாருங்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியப்படத்தகுந்த அந்த ஆர்வம் தான் இப்பொது நமக்கு தேவைப்படுவது. புடிப்பு ஒன்று தான் தங்களை மேம்படுத்த முடியும் என்ற அந்த தீவிரச்சிந்தனை முஸ்லிம் சமுதாயத்திற்கு வர வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு அந்த உணர்வு ஊட்டப்பட பட வேண்டும்.நம்முயை வழிகாட்டி அருமைப் பெருமானார்(ஸல்) அவர்கள் கல்விப்பயணத்தை சொர்க்கத்திற்கான பயனம் என்று சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். கல்லிவயை தேடிய பாதையில் நடைபோடுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புதிது புதிதாக அறிவுத்துறைகள் வளர்ச்சியடைகிற போது அதை பாய்ந்துதோடிப் கற்றுக்கொள்ள வேண்டியது முஸ்லிம்களது பொறுப்பு என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஞானம்மிகுந்த சொற்கள் முஃமினகளிடமிருந்து தவறிப்போன பொருளாகும் அதை காணும் இடத்தில் எடுத்துக் கொள்ள அதிக உரிமை படைத்தவர்கள் அவர்களே! என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ( அறிவிப்பாளர் அபூஹுரைரா - நூல் திhமிதி 2611)கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிற சமயத்தின் சொந்தக்காரர்கள் கல்வி பெறுவதில் சுணங்கி நிற்பது எந்தவகையிலும் பொருத்தமாகாகது. மார்க்கத்தின் வழிகாட்டுதலை முறையாகப் பயன்படுத்திய காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அறிவுத்துறைகள் அத்தனையிலும் உலகிற்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். வானியல் தொடங்கி வரலாறு வரைக்கும் அனைத்து துறைகளிலும் முன்னோடிகள் மூல ஆசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களது கண்டுபிடிப்புகளே இன்iறைய நாகரீக உலகத்திற்கு அடித்தளமிட்டது என்பது கலப்படமற்ற உண்மையாகும். இன்று வாழ்கிற முஸ்லிம் மாணவச் சமுதாயம் தனது முன்னோடிகளை நினைவில் நிறுத்திக் கொண்டு நாம் எத்தகைய உயர்ந்த பாரம்பரியத்தின சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தோடு நாளைய எதிர்காலததிற்கான உயர்ந்த இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்;. அதை உருவாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.பள்ளிக் கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பும் போது ஏதோ நான்கு எழுத்து படித்துவிட்டு வரட்டும் என்ற அலட்சிய பாவத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது. ஒரு கட்டிடத்திற்கான அடித்தளத்தை அமைக்கும அக்கறையை அதில் காட்டவேண்டும். பிள்ளைகளை அவர்களது தகுதிக்கு மீறி சிரமப்படுத்தக் கூடாது என்கிற அதே நேரத்தில் கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகில் சிறக்க முடியும் என்ற மனோபவாத்தை நமது சிறுவர்களிடம் பதிக்க வேண்டும்.முஸ்லிம் ஜமாத்ததுக்கள் தங்களது மஹல்லாவிற்குட்பட்ட மக்களில் கல்வி இடை முறிவு ஏற்படாதவாறு பாhத்துக்கொள்வது இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு செய்கிற பேருதுவியாக இருககும். அதே போல வசதிவாய்பபு படைத்தவர்கள் ஒவ்வொரு வரும் தமது குடும்பத்தில் அத்தகைய இடை முறிப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது காலம் கருதிச் செய்த சிறந்த தர்மமாக அமையும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நட்டல் அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் எனும் செய்யுளுக் கேற்பச் செயல்படுவது இன்றைய சூழலில் பொருத்தமானது. பள்ளிவாசல் ஜமாத்துகள் மக்தப் மதரஸாக்களுடன் சேர்த்து ஆங்கிலம் ஆறிவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளுக்கு டுயூசன் ஏற்பாடு செய்வது அடுதத தலைமுறைக்கு மிகப் பயனள்ளதாக இருக்கும். மாநகராட்சி பள்ளிகளில் மட்டுமே படிக்க முடிந்த மாணவர்களை கைதூக்கி விடுவதாக அமையும். இப்போது சுறுசுறுப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிற இளைஞர்கள் பலர் கொஞ்சமாவது ஆங்கிலம் படித்திருந்தால் இன்னும் சிறப்பாக முன்னேறியிருக்கலாமே என்று ஆதங்கப்படுவதை அனுபவத்தில் பார்க்கிறோம். தலைவராவதற்கு முன்னால் கற்றுக்கொள்ளுங்கள் (த அல்லமூ கப்ல அன் தஸவ்வதூ) என்ற ஹஜ்ரத் உமர் (ரல) அவர்களின் எச்சரிக்கையை (புகாரீ) நாம் மறந்து விட்டது அந்தச் சமயங்களில் நினைவுக்கு வருகிறது.பெண்களுக்கு உயர்கல்வி கற்பிப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது. அவர்களையும் உயர் கல்வி பெற வைப்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையபகும்.கல்வி யறிவு பெறுவதில் பெண்களை தடை செய்வது குழந்தைகளுக்கிடையே போதம் பாராட்டுகிற பாவமான காரியமாகும். அவ்வாறு பேதம் பாராட்டுலதை மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை பெற்றோர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழலில் திருமணத்திற்கு பெண்பார்க்கும் போது படித்த பெண்கள் வேண்டும் என்று கேட்கப்படுகிறது. வேலைக்கு செல்லத் தேவையில்லை என்றாலும் தாம் பெற்ற குழந்தகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதற்காகவேனும் பெண்கள் படித்திருக்கிற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கிய விசயமுமு; கவனிக்கத்தக்கதாகும்.நமது மாணவர்களுக்கு சலுகைகளை காட்டி நம்பிக்கைகயூட்டுவதை விட அவர்கள் பொதுவில் போட்டி போடத்தக்க முயற்சியயை மேற்கொள்ள ஊக்கம் தருவதும் உற்சாகப்படுத்த வேண்டும் கல்வித்துறையிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது நமது உரிமைக் கோரிக்கையாக இருக்கலாம் ஆனால் பொதுவில் போட்டி போடத் தேவையான அளவு நமது மாணவர்களின் கல்வித்தறனை வளர்ச்சியயடைய வைப்பது தான் நமது சரியான வெற்றியை உறுதி செய்யும்.பள்ளிக் கூடங்களின் திறப்பை செர்க்கவாசலின் திறப்பாக கருத வேண்டிய கடமை முஸ்லிம்களுடையது. அது அவர்களுடைய மறுமை பேற்றை மட்டுமல்ல இம்மைப் பேற்றையும் வளப்படுத்தும். கல்வித்துறையில் காட்டுகிற ஈடபாடுதான் நாளைய நமது எதிர்காலத்தின் மரியாதையை திர்;மாணிக்கப்போகிறது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-3112125783262469158?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/3112125783262469158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=3112125783262469158' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/3112125783262469158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/3112125783262469158'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_2413.html' title='பள்ளித்தலமனைத்தும்...'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-910196409509373396</id><published>2007-12-01T09:47:00.001-08:00</published><updated>2007-12-01T09:47:51.955-08:00</updated><title type='text'>எம் தந்தையர் ..</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;கவிக்கோ அப்துல் ரகுமான் அமெரிக்காவுக்கு போய்விட்டு வந்த பிறகு தனக்கு அதிhச்சியளித்த ஒரு அனுபவத்தை சொன்னார்: ஒரு தமிழ் இலக்கிய சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருக்கிறார்கள். அந்த அரங்கிற்;குப் போன போது அது ஒரு சர்ச்சின் தோற்றத்தில் இருந்திருக்கிறது. இது என்ன கட்டடம் என்று கேட்டிருக்கிறார். முன்னாள் சர்ச்சாக இருந்தது இப்போது அதை வாடகைக்கு விடுகிறார்கள் என்று பதில் கிடைத்திருக்கிறது. இன்னொரு முறை ஒரு கோயிலில் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் அங்கு போனபோது அதுவும் ஒரு சர்ச்சினுடைய தோற்றத்தில் இருந்திருக்கிறது. சர்ச்சிலேயே கோயிலா என வியந்து கேட்டிருக்கிறார் ஆமாம் சர்ச்சை விலைக்கு விற்றார்கள் நாங்கள் வாங்கி அதை கோயிலாக மாற்றி விட்டோம் என்று அங்குள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள். சர்ச்சுகளுக்கு வருவோர் இல்லாத காரணத்தால் நிறைய சர்ச்சுகள் வாடகைக்கு விடப்படவும் விற்பனை செய்யப்படவுமான ஒரு சூழ்நிலை அஙகு நிலவுவதாக அவர் குறிப்ப்ட்டார். புதிய அறிவியல் தத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிருத்து மதகுருமார்கள் மதத்தின பெயரால் அவற்றை நிராகரித்தார்கள்;. விஞ்ஞானிகளுக்கு தண்டனை கூறி தீர்ப்பளித்தார்கள். கிருத்துவ திருச்சபைகள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட கருத்துக்களுக்காக அறிவியவோடு முரண்பட்டதனால் தான் இப்படி ஒரு நிலமை ஏற்படடது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்ற தாலமியின் கருத்துக்ககளையே உலக மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். கோபர் நிகஸ் (1473 - 1543) என்ற வான் ஆய்வாளர் முதன் முதலாக இதை மறுத்து பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது என்ற கருத்தை ழn வாந சநஎநடயவழைn ழக வாந hநயஎநடெல டிழனநைள என்ற தலைப்பில் ஒரு நூலாக எழுதினார். திருச்சபை அதை எதிர்த்தது. தேவ குமாரனான இயேசு பிறந்த இடம் தான் உலகின் மையப்புள்ளியாக இருக்க முடியும் சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றி வருவதுதான் பொருத்தமானது பூமி இன்னொன்றை சுற்றுவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் மறுத்தார்கள். அது மட்டுமல்ல பூமக்கு மேலே சொர்க்கம் இருப்பதாகவும் பூமிக்கு கீழே நரகம் இருப்பதாகவும் சொர்க்கத்தில் தான் நட்சத்திரங்கள் பதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிவந்திருந்தனர். கோபர் நிகஸின்; தத்துவம் அதற்கு முரண்படவே புதிய அறிவியல் கண்டுபிடிப்பை அவர்கள் நிராகரித்தனர். அதனால் அந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. வான் ஆய்வாளர் கலீலீயோ இன்னும் சில ஆய்வுகளின் அடிப்படையில் அந்தத்தத்துவத்தை திரும்பக் கூறிய போது அவருக்கு திருச்சபை மரண தண்டனை விதித்தது. ஒரு உண்மையை சொன்னதற்காக ஏன் உயிரை விட வேண்டும் என்ற சிந்தனையில் அப்போது கலீலியோ மன்னிப்கேட்டு தப்பித்தார்.நீ வேதனையில் குழந்தையை பெற்றெடுப்பாய் என்ற பைபளின் வாசகத்தை மேற்கோள் காட்டி பிரசவ சமயத்தில் வலியை குறைக்க மருந்து தருவதற்கு திருச்சபை எதிர்ப்பு தெரிவித்தது. அறுவை சிகிட்சை முறை அமல்படுத்தப்பட்ட போது அதையும் திருச்சபை எதிர்த்தது.இவ்வாறு திருச்சபை அறிவியலுக்கு முரண்படும்போது ஆரம்பத்தில் திருச்சபையின் கருத்துக்களுக்கு கட்டுப்பட்டிருந்த மக்கள் விஞ்ஞான ஆய்வுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க்படட்ட சூழ்நிலையில் மதத்தை ஒதுக்கி வைத்து விட்டு விஞ்ஞானத்தின் வாசலை சரனனடைந்தனர். அதன் பிறகு அறிவியலே அங்கு மதமாகிவிட்டது. சமயம் என்பது வெறும் அடையாளமாகிப் போனது. சமயத்தின் தீவிரப் பற்றாளர் கூட அறிவியலுக்கு அடுத்தபடியாகததான் மத நம்பிக்கைகக்கு இடமளிக்கிறார். சற்று அழுத்தமாக சொல்வதானால் ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சி என்பது என்பது நடைமுறையில் இருந்த கிருத்துவத்தை உடைத்த பின்னரே தலை நிமிர்ந்தது.இந்த விபத்து முஸ்லிம்களில் ஏற்படவில்லை. காரணம் முஸ்லிம்கள் இஸ்லாத்தின வழியாகவே அறிவியலைப் பெற்றனர். இஸ்லாமும் முஸ்லிம் அறிஞர்;களும் விஞ்ஞானத்தின் வரவேற்பாளர்களாக இருந்தார்களே அன்றி எதிர்பார்ப்பாளர்களாக இருக்க வில்லை. ராஜி போன்ற பல முஸ்லிம் சமய அறிஞர்களே விஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தார்கள். முஸ்லிம்களின் வேதமே புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாசலை திறந்து விட்டது. சமயங்களும் வேதங்களும் பொதுவாக நம்பிக்கையை பற்றியும் இறைவழி பாட்டை பற்றியுமே பேசுபவை என்றால் இஸ்லாமும் திருக்குர்ஆனும் அதிலிருந்து வேறுபட்டு மனிதனை சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் தூண்டின. அதற்கு காரணம் இருந்தது. ஏனெனில் சரியான சிந்தனை தான் மனிதனுக்கு தெளிவான உறுதியான பகத்தயை தர முடியும் என்று இஸ்லாம் கருதகிறது. அண்டங்களை ஆராய்ச்சி செய்து முதிர்ந்து தெளிந்த ஒருவர் இவை அத்தனைக்கும் பிறகு இவற்றை ஒழுங்காக அமைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வருகிற போது அவரது இறை நம்பிகை;ககை வலுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும். அவருடய பணிதல் அர்த்தமுள்ளதாகவும் அழுத்தமானதாகவும் இருக்கும். இத்தைகயை பணிதலையும் இத்தகைய கட்டுப்பாட்டையுமே இஸ்லாம் எதிர்பார்க்கிறது. இஸ்லாத்தின் இந்த எண்ண ஓட்டத்தை திருக்குர்ஆpன் 3:191 வசனம் புலப்படுத்துகிறது. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கும் அவர்கள் ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'' என்று கூறுவர். (3:191)இறைவனை வழிபடுவதோ இறை மார்க்கத்தை பின்பற்றுவதோ எந்த யோசனையும் இன்றி கன்மூடித்தனமாக நடைபெறுவதை இஸ்லாம் விரும்பவில்லை. திருக்குர் ஆன் கூறுகிறது. அவர்களிடம் இறைவனுடைய வசனங்கள் கூறப்பட்டால்;, செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) 25:73 எனவே சகலத்தையும் பற்றி சிநத்திக்க குர்ஆன் உத்தரவிட்டது. வானம் பூமி இரவு பகல் ஒட்டகம் மலை மணற்பரப்பு கடல் கப்பல் காற்று என அரபியாரின் வாழ்வுக்கு மிக நெருக்கமான அனைத்து விசயங்களையும் எடத்துக் கூறி அவை பற்றிச் சிந்திக்குமாறு இறைவன் உத்தரவிட்டான். அதன் பயனாக அறிவுலகத்திலிருந்து வெகுதூரம் விலகி இருந்த அரபுகள் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் ஆரம்பித்தார்கள். இறை நம்பிக்கையில் தெளிவும் உறுதியும் பெற்றார்கள். நிறைய புதிய விசயங்களை கண்டு பிடித்தார்கள். நல்ல அறிவுக்கு கருத்துக்கள் உலகில் எங்கு கிடைத்த போதும் அதை தங்கள் இடத்திற்கு கொண்டு தங்களது மொழியில் அதற்கு உருக்கொடுத்தார்கள். அதில் தங்களுடைய பங்களிப்பை இணைத்து அவர்கள் கடந்து சென்ற உலகுக்கெல்லாம் அவற்றை காணிக்கையாக வழங்கினார்கள். திருக்குர்ஆனின் வெளிச்சப்பாதையில் நடைபோட்ட முஸ்லிம் சமுதாயம் அறிவுலகில் சுடர்விட்டு பிரகாசித்தது. நவீன உலகை கட்டமைத்த சிற்பிகள் முஸ்லிம்களின் முன்னோர்கள். அவர்களின் அறிவுக் கொடைகளின் விளைவாகவே உலகம் வெளிச்சம் பெற்றது. அன்றை விஞ்ஞானத்தின் அத்துனை துறைகளிலும் அவர்களே உலகின் ஞான ஆசியரிர்களாக திகழ்ந்தார்கள். இன்றைய இளைய சமுதாயம் முஸ்லிம் முன்னோடிகளின் அரிய சாதனைகளை கேள்விப்படுகிற போது அது அவர்களுக்கு கற்பனையோ என்று தோன்றலாம். ஆனால் அவை கலப்படமற்ற சத்தியங்கள். சுpறந்த கல்வியை தேடுவோர் இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவிற்கும் படைஎடுக்கலாம். ஒரு காலம் இருந்தது. சிறந்த கல்வி வேண்டும் என்போர் முஸ்லிம்களின் பக்தாதுக்கும் கார்டோவாவுக்கும் தான் பயணம் சென்றார்கள். அங்கு தான் அவர்கள் நிபுணர்களாக முடியும் என்ற நிலமை இருந்தது. இன்று ஐரோப்பாவும் அங்குள்ள கிருத்துவர்களும் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஒரு காலம் இருந்தது. அப்பொது ஐரோப்பிய கிருத்துவர்கள் மருத்துவம் படிப்பபதையும் மருத்தவம் பார்ப்பதையும் கடவுளோடு போட்டியிடும் செயலாக கருதி அதை வெறுத்தார்கள். யயெவழஅல உடலியல் ஆய்வு இழிவானதாக கருதப்பட்டது. அப்போது பெரும்பாலும் யூதர்களே ஐரோப்பாவின் மருத்துவர்களாக இருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் மருத்துவ்கல்லூரிகளில் கல்வி பயின்றவர்களே! இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றின் தனி மருத்துவராக இருந்த புட்ரஸ் அல் போன்ஸி ஸ்பொயின் முஸ்லிம்களிடம் மருத்துவம் பயின்றவராவார். அவிசென்னா என்று மருவிப்போன அலி பின் சீனா தான் மருத்துவ உலகின் பிதாமகராக கரதப்படுகிறார். ஆவர் எழுதிய அல் கானூன் பித் திப்பு என்று நூல் 15 ம் நூற்றாண்டிலேடீய 16 பதிப்புகள் வெளியிடப்பட்டடிருக்கிறது. வைசூரி மற்றும் தட்டம்மை நோய் பற்றி ஆராய்ந்து முதலில் நூல் எழுதியவர் அர் ராஜி ஆவர். அவர் எழுதிய அல் ஜுத்ரி வர் ஹஸ்பா என்ற அரபு நூல்தான் இந்நோய் பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.1565 ஆண்டு இந்நூல் வெனிஸ் நகரில் லத்தீன மொழியில் மொழிபெயர்க்கப்ட்ட பிறகு இந்நூல் ஐரோப்பா மழுவதும் பரவியுள்ளது. இந்நூலை படித்த பிறகுதான் எட்வெர்ட் ஜென்னர் அம்மைக் கான தடுப்பூசியை அம்மை குத்துததலை பற்றி ஆய்வு செய்தார் என வரலாறு சொல்கிறது. இந்நோய்களை கடவுளின் சாபம் என்று ஐரோப்பா கருதிய காலகட்டத்தில் எந்த ஒரு நோயுக்கும் மருந்துண்டு; என்ற பெருமானார்(ஸல்) அவர்களின் பொன் மொழி (முஸ்லிம் 4084) இமாம் ராஜியை இது பற்றி ஆராயத்தூண்டியது.சிறந்த மருத்துவம் வேண்டும் என்போர் நாடிச் செல்லும் நகராக அன்றைய பக்தாத் திகழ்ந்தது. பீமாரிஸ்தான் என்ற பெயரில் நூற்றுக்கணக்காகன படுக்கை வசிதி கொண்ட மருத்துவமனைகள் 10 ம்நூற்றாண்டில் பக்தாதில் அமைந்திருந்திருந்தன. அப்பாஸிய கலீபா அல் முக்ததரிர் மருத்தர்களுக்கு சான்றளிக்கும் நடைமுறையை துவங்கினார். அரசாங்கம் வழங்கும் தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மட்டுடே மருத்துவம் பார்க்க அனுமதிக்பபடுவர் என்று அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் விளைவாக 860 மருத்துவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதனால் உலகில் போலி மருத்துவர்கள் இல்லாத முதல் நகரமாக பக்தாது நகரம் விளங்கியது என்று வரலாற்று போற்றுகிறது. இன்றைய கால கட்டத்தில் மருத்துவர்கள் அரசிதழ் பதிவு பெற்றவர் அதிகாரியாக (கெஸட்ட் ஆபீஸர்) கருதப்படுகிறார். இந்த நடைமுறையை உலகிற்கு அறிமகப்படுத்தியவர் முஸ்லிம் மன்னர் கலீபா அல்முகததரி;தான் எனபதை வரலாறு தனது ஞாபகத்தில் பதித்து வைத்திருக்கிறது. நுஒpநசiஅநவெயட அநவாழன எனப்படும் ஆய்வு நடைமுறையை ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் பேகன் (சுழபநச டியஉழn ). இவர் முஸ்லிம்களின் ஸ்பெயினில் கல்வி கற்றுவிட்டு வந்தவராவார்.12 ம் நூற்றாண்டிலேயே உலக வரை படத்தை (வோர்ல்டு மேப்) தயாரித்துக் கொடுத்தார் அல் இத்ரீஸ் என்ற முஸ்லிம் ஆய்வாளர். கெமிஸ்ட்ரீ (வேதியில்) துறையின் தந்தையாக ஜாபிர் பின் ஹய்யான் போற்றப்படுக்pறார்.15 நூற்றாண்டு வரை அவருடைய நூற்கள் தான் ஐரோப்பாவில் வேதியில் துறையின் இறுதிச்சான்றுகளாக கருதப்பட்டன. உலகம் முழவதிலும் எண்கள் (நம்பர்களை) எழுதுகிற போது 123 என்று எழுதும் வழக்கம் தான் வழக்கத்தில் இருக்கிறது. மற்ற நடைமுறைகள் அனைத்து சற்றேறரக்குறைய ஒழிந்து விட்டன அல்லது அழிந்து விட்டன என்று சொல்லலாம். காரணம் மற்றவை அனைத்தும் கிரமமானதாக இருந்தன. ஐரோப்பிய சமுதயம் ரோம எண்களை பயன்படுத்தி வந்தது. அதை புனிதமானது என்று கூட கருதினார்கள். அனால் அதில் பெரிய எண்களை எழுதவது சிரமமானது. எண்பத்தி எட்டு என்று எழதவதற்கு டுஓஓஓ ஏஐஐ என்று ஏழு எழுத்துக்களை எழுத வேண்டும். 123 என்ற எண்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலககம் நிம்மதிப் பெருகூச்சு விட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற 123 என்ற எண்களுக்கு முழுவடிவம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்று நம்பிள்ளைகளுக்கு நாம் சொன்னால் அவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளப்பார்கள். தமிழ் நாட்டில் விற்பனையாகிற ஒரு அரிச்சுவடிப் புத்தகத்தை வாங்கி எண்கள் என்ற பாடத்தை எடுத்து 123 என்ற எண் வடிவங்களுக்கு மேலே பார்த்தீர்கள் என்றால் அவை அரபி என்ககள் என்று அடையாளம் இடப்பட்டிருப்பதை காணலாம். ஐரோப்பியர்களும் இந்த எண்களை அரபி என்கள் என்றே குறிப்பிட்டார்கள்.ஆனால் புழைய இஸ்லாமிய அரபி நூல்களில் இந்த எண்களை இந்திய எண்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். உண்மையில் இந்த எண்களில் 1 முதல் 9 முடிய உள்ள எணகள் இந்திய எண்களே! இந்தியர்களிடம் 9 வரை தான் நம்பர் இருந்தது. அதனால் அது முழமை பெறாமல் இருந்தது. இரு நூறு என்று சொல்வதற்கு 2 நூறு என்று தான எழுத வேண்டியிருந்தது. இந்த நம்பர்களை ஆங்வு செய்த அபு மூஸா அல்குவாரிஜ்மி (780 - 850)என்ற முஸ்லிம் கணிதவியலாளர்தர்ன் இனறைய வழக்த்திலள்ள சைபர் நடைமுறையை பயன்படுத்தி எண்களை இலகுவாக கையாள முடியும் என்று உணர்த்தினார். இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் முஸ்லிம்கள் அறிவுலகத்தின் அரசர்களாக வாழ்ந்த வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அறிவியல் துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பா அறிவியல் ஒளியற்ற இரண்ட கண்டமாக இருந்தது என பிரிட்டானிய கலைக்களஞ்சியம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 6 ம் நூற்றாண்டுக்கும் 10 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் இருண்ட காலம் என்றழைக்கப்படுகறிது. ஐரொப்பாவில் வன்முறை நிறைந்து அறிவொளி இருண்டுகிடந்த காலம் அது. (; பிரிட்டன் என்ஸைக்ளோபீடியா1984)இருண்டு கிடந்த ஐரோப்பாவிற்கு மட்டுமுல்ல அன்றை முழு உலகிற்கும் முஸ்லிம்களே விஞ்ஞானத்தினுடையவும் நாகரீகத்தினுஐடயவுமான கொடைகளை வாரிவழங்கிக் கொண்டிருந்தார்கள். காலச் சுழற்சியின்; எந்தக் கொடும்; புயலில் அந்த பழம் பெருமை சரிந்தததோ தெரியாது. முஸ்லிம் சமுதாயம் அறிவீனத்தின் பள்ளத்தில் விழுந்து இழிவுச் கதியை சாந்து பூசிக் கொண்டு விட்டது. இதற்கு கீழ் இன்னுமு; விழுவதற்கு பள்ளமில்லை எனும் அளவு வீழ்ந்து பட்ட பிறகு எழுந்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு முஸ்லிம் சமுதாயம் ஆளிகியிருக்கிறது. எந்த ஊண்று கோல்களின் துணையுமில்லாமல் தட்டுமடுமாறு அது எழ முயற்சி செய்யும் போது முன்னோர்கள் வாழ்ந்த பொற்காலத்தை பற்றிய கனவு, எம் தந்தையைர்..அவர்கள் என்ற உணர்வு அதன் மூச்சுக்காற்றில் சக்தியை ஏற்றட்டும். முஸ்லிம்களிடம் ஆர்வத்தை உண்ட பன்னுவதற்காக முன்னோர்களின் வரலாறுகளை சொல்வது பெருமானார் (ஸல்) அவர்களுடைய பழக்கம். யூதர்களில் ஒருவர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தார் என்ற செய்தியை பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்ன போது அன்னாருடைய தோழர்கள் அது கேட்டு ஆச்சரியமும் ஆதங்ககமும் கொண்டனர். நாமும் அப்படி ஆக வேண்டுமே என்ற ஆர்வம் கொண்டனர். அப்போது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ரமலானில் ஒரு இரவை கத்ருடைய இரவாக ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாக முஸ்லிம்க்கு வழங்கினான் என்பது இஸ்லாமிய வரலாறு. முன்னோர்களின் சிறப்பான வாழ்வு முறைகளை ப்பற்றி கேள்விப்படும் போது அந்தப் பெருமையில் கரைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று உயிர்தெழ வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்தினுடையது. ஏழ்மை என்பது பரிதாபத்திற்குரியதல்ல . ஒரு பணக்கார வம்சத்தின் வாரிசு ஏழையாக வாழ நேரிட்டால் அது பரிதாபத்திற்குரியது. ஓரு விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் கல்வியறிவற்றவராக இருப்பது சகித்துக் கொள்ளத்தக்கது தான் . ஆறிவாளிகளின் குடும்பத்தில் ஒருவர் அல்லது வாத்தியார் வீட்டுப் பிள்ளை படிப்பறிவற்றவராக இருப்பது அதிகம் கேலிக்குரியது.இத்தகைய பரிதாபத்திற்கும் கேலிக்கும் இன்று ஆளாகியிருக்கிற இன்றுள்ள முஸ்லிம் சமுதாயம் அறிவியலின் தளத்தில் தனது பலத்தை பெருக்கிக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மிகுந்த மரியாதைக்குரியது. ஆறிவியலின் புதிய கண்டு பிடிப்புகளை மாhக்கம் கற்றுத் தந்திரக்கிற அளவீடுகளின் சரியான அடிப்படையில் அணுகி அவற்றை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும். கம்ப்யூட்;ரினால் கிடைக்கிற நன்மைகள் ஏராளமாக இருக்கிற போது அதை டிவி பொட்டி என்று கருதி நிராகரிக்கிற மூர்க்கத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் ஒரு முஸ்லிம் நிபணரவாவது இன்றைய சூழ்நிலையில் அவரக்கு மட்டுமே பெருமை சேர்ப்பதாக இல்லாமல் சமுதயத்திற்கும் மரியதை பெற்றுதருவதாகவும் அமையும். நூறு பணக்காரர்களை விட நூறு செல்வாக்கு பெற்ற தலைவர்களைவிட ஒரு சிந்தனையாளர் ஒரு விஞ்ஞானி சமுதாயத்திற்கு அதிகம் முக்கியமானவராவார். கிரேக்க நாடு எத்தனையோ அரசர்களை பார்த்திருக்கலாம். எத்தனையோ செல்வந்தர்களைப் பார்த்திருக்கலாம். ஒரு சாக்ரடீஸ் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கவனித்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். எனவே சமுதயத்தில் பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தரப்படுகிற மரியாதை படித்தவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தரப்பட வேண்டும்.ஆறிவியல் துறைகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். அதே சமயத்தில் அறிவியலின் புதிய வெளிப்பாடுகள் அத்தனையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாது. எதை எடுப்பது எதை விடுவது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாகவே இருக்கின்றன. சில விசயங்களை தீர்மாணிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் முடிவு தெளிவானதாகவும் உலக சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகவும் அமையும் என்பதை சமுதாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.அறிவியல் என்பது அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் வழி நம் விழிகளுக்கு வெளிச்சத்தை தரட்டும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/565020473366443179-910196409509373396?l=chinthanaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chinthanaiazeez.blogspot.com/feeds/910196409509373396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=565020473366443179&amp;postID=910196409509373396' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/910196409509373396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/565020473366443179/posts/default/910196409509373396'/><link rel='alternate' type='text/html' href='http://chinthanaiazeez.blogspot.com/2007/12/blog-post_9099.html' title='எம் தந்தையர் ..'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-565020473366443179.post-8970297588827168895</id><published>2007-12-01T09:45:00.000-08:00</published><updated>2007-12-01T09:46:41.654-08:00</updated><title type='text'>இஸ்லாமும் (இந்திய) சுதந்திரமும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றார் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சார்ச்சில். 20 ம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் அந்த பிர்அவனிய உதடுகள் உதிர்த்த இந்த வார்த்தைகள் வரலாற்றில் இடம் பிடித்து விட்டன என்றாலும் அந்த வார்ததைகள் நிலைத்த அளவு அதிலுள்ள உண்மை நிலைக்க வில்லை. நூற்றுக்கணக்கான உலக நாடுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக்கிடந்தன. உலகின் அத்தனை கண்டத்திலும் தன்னுடைய கலனிகனை உருவாக்கி ஏதோச்சதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது பரிட்டன் அரசாங்கம். காலனி நாடுகளிலுள்ள வளங்களை சுரண்டி அங்கிருந்த மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த கிரேட் பரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத அரசாட்சிக்கு இந்தியா முதல் அபாயச் சங்கு ஊதியது. இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் பேராட்டங்கள் இந்தியவின் விடுதலைக்கும் அதை தொடர்ந்து மற்ற காலனிகள் விடுதலையாவதற்கும் காரணமாக அமைந்தன. தேசத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்கிற சுதந்திரப் பொரில் முஸ்லிம்களில் பெருமளவில் வீரத்தோடும் தீரத் தோடும் ஈடுபட்டனர். இந்த தேசத்தில் வாழ்ந்த வேறு எந்த சமூகத்திற்கும் சளைக்காத வகையில் முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்பதும் அந்த பேராட்டதில் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் அவர்கள் மனமுவந்து செய்தார்கள் என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகளாகும். சற்று அழுத்தமாக சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தின் உணர்ச்சி மிகு வரலாற்றில் முஸ்லிம்களிடம் இருப்பது போன்ற பெறுமைக்கரிய செய்திகள் மற்ற சமூகத்தாரிடம் இல்லை எனலாம்.மொத்த சமுதாயமும் விடுதலைப் போராட்டதில் வெகு தீவிரமாக ஈடுபட்டதால் இரண்டு தலைமுறைக்கான எதிர்காலத்தை முஸ்லிம்கள் அர்ப்பணிக்க நேர்ந்தது. ஐக்கிய இந்தியாவிலிருந்து பாகிஸ்த்தான் பரிந்து போனதை மட்டுமே காரணமாக காட்டி இந்திய முஸ்லிம்களின் விடுதலைப் போராடடப் பங்களிப்பை குறைத்து மதிப்பிட பலர் முயற்சி செய்கிறார்கள். அது கைகளால் சூரியனை மறைக்க முயல்வது போலாகும்.பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் எழுதுகிறார்:இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப்போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. (இல்லஸ்ட்ரேட் வீக்லி. 29.12.1975)நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது சமயத்தின் வழிகாட்டுதலாகவும் இருந்தது. முஸ்லிம்கள் சமயததின் மீது அதிகப் பற்று கொண்டவர்கள் என்பது எல்லூருக்கும் தெரிந்த செய்திதான். தேசப் பற்று என்பதோ சுதந்திர உணர்ச்சி என்பதோ சமயப்ற்றின் ஒரு பகுதியாக இஸ்லாம் கருதுவதால் சுதந்திர மனப்பான்மையும் தேசப்பற்றும் அவர்களிடம் இயற்கையாக உருக்கொண் கொண்டிருந்தது.சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டதற்கான காரணங்களை ஆராய்கிற பேச்சாளர்கள் பலரும் முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயரிடம் ஆட்சியை பறிகொடுத்திருந்தனர் அதனால் இழந்தததை பெருவதற்காக தீரத்தோடு போராடினார்கள் என்று சொல்வது வாடிக்கை. இதை ஒரு சிறு காரணமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர இதுவே பிரதான காரணம் அல்ல. வுpடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட பிரதான காரணம் இஸ்லாம் ஆகும். ஆம் இஸ்லாமிய மனப்பான்மை தான் அவர்களை விடுதலைப் போருக்கு அதிகம் தூண்டியது. ஆதனால் தான் ராஜீய முஸ்லிம்கள் மட்டுமின்றி சாமான்ய முஸ்லிம்களும் பெருவாhக இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை நினைவு கூர்கிற பலரும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியே அதிகம் பேசுகின்றனர். போரட்ட களத்தில் இஸ்லாம் என்கிற சமயத்தின் பங்களிப்பை அதிகம் கண்டு கொள்வதில்லை. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் ஆற்றிய பணி என்பதை விட இந்திய விடுதலைப் போரில் இஸ்லாம் ஆற்;றிய பணி பற்றி ஆராய்வது மனித சுதந்திரத்தின் வரலாற்றின் இஸ்லாதின் தாக்கம் எத்தகையது என்பதை புரியவைக்கும். இஸ்லாம் இந்த உலகுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று மக்களுக்கு சுதந்திர மனப்பான்மையை கற்பித்ததாகும். எந்த ஒரு முஸ்லிமும் தன்னை அடக்கி ஆளும் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை அழுத்தமாக நம்புகிறார். இந்த நம்பிக்கை, இன்னொரு மனிதனுக்கு சட்டரீதியாக அன்றி மற்ற வழிகளில் அடங்கிப் போவதை தடுத்துவிடுகிறது. இதுவே சுதந்திர மனப்பான்மை முஸ்லிம்களிடம் இயற்கையாக எழுவதற்கு காரணமாகிறது. ஒரு முஸ்லிம் முதன்மையாக மொழிகிற லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் (வணங்கத் தகுந்தவன் அல்லாஹவை தவிர வேறு எவரும் இல்லை) என்ற கலிமா வாசகம்; மனிதன் மனிதனுக்கு தலைவணங்கிச் கிடப்பதை தடை செய்கிறது. அது தனிமனிதனின் சுய மரியதையை மீட்டெடுத்து அவனுக்கு சுதந்திர மனிதனுக்குரிய கம்பீரத்தை வழங்கியது. நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரலி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரலி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)இந்த நிகழ்சியில் ஒரு கருப்பின மனிதரின் கருத்துக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் மதிப்பளித்தார்கள், அவரது மரியதையை பாதுகாத்தார்கள் என்ற செய்தியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஒரு செய்தி இருக்கிறது. பல்லாண்டு காலம் அடிமையாய் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் உதைக்கும ஆளாகி, அதை தாங்கிக் கொண்டிருந்த ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் இஸ்லாமை தழுவிய பிறகு கருப்பியன் மகனே என்ற வார்த்தைக்கு ஆவேசம் ஆடைந்தார்கள் என்றால் லாயிலாக இல்லல்hஹ் கலிமா வாகசம் அவருக்கு சுதந்திர உணர்வையும் சுய மரியாதையையும் ஊட்டியிருந்தது தான் காரணம் என்பதை கவனிக்க வேண்டும்.அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவு கட்டுவதும் நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது. இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் எகிப்திய கொடுங்கோல் அரசன் பிர்அவ்னிடம் ஏகத்துவத்தின் செய்தியை மட்டும் எடுத்துச் சொல்ல வில்லை. அவன் கொத்தடிமைகளாக வைத்திருக்கிற சுமார் 6 லட்சம் யூதர்களின் விடுதலைக்hகாக போராடவும் செய்தார்கள்;.திருக்குர்ஆன் கூறுகிறது. ''ஆகவே, (மூஸா - ஹாரூன் ஆகிய) நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, நிச்சயமாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47)நபி தாவூத் (அலை) ஜாலு{த்தின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டினார்கள் எனபதையும் குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்கிறது. (2.251)விடுதலைப் பாராட்டத்திற்கு தலைமை ஏற்பதும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதும் நபிமார்கள் எனும் இறைத்தூதர்களின் பணியாக இருந்திருக்கிறது என்பதை இவ்வசனங்கள் சுட்டிக்காட்டகின்றன. அடக்குமறைகளுக்கு எதிரான நபிமார்களின் மரபு வழியான பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கடைசி ஹஜ்ஜின் போது இனம் நிறம் மொழி தேசம் என்ற எந்த அடிப்படையிலும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்த முடியாது என்ற பிரகடணத்தை வெளியிட்டார்கள். அந்தப் பிரகடணம் தனி மனித சுதந்திரததை இறுதிநாள் வரைக்கும் உறுதிப்படுத்துகிற எஃகுப்பிரகடணமாக அமைந்தது.ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்து வந்த அய்யாமுத் தஸ்ரீக் எனப்படும் புனித நாட்களின் ஒரு பொழுதில், மக்களுக்கு உரையாற்றிய பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! உங்களது தந்தையும் ஒருவரே! ஆரபியர்களுக்கு மற்றவர்களை விட தனிச்சிற்பபு எதுவுமில்லை.அதுபோவே மற்றவர்களுக்கு அரபியரைவிட சிறப்பு எதுவுமில்லை. சிவப்பு நிறமுடையவர்களுக்கு கருப்பர்களை விட எந்தச் சிறப்பும் இல்லை. கருப்பர்களுக்கும் சிவப்பு நிறமுடையவர்களைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தினால் மட்டுமே நீங்கள் சிறப்படைய முடியும். (அஹ்மது: 22391)அரபு மொழி பேசத் தெரியாதவர்களை அஜமி ஊமையன் என்று சொல்லும் அளவுக்கு தமது இனத்தின் மீதும் மொழியின் மீது வெறி கொண்டிருந்த மக்களை பெருந்திரளாக வைத்துக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் வெளியிட்ட இந்தப்பிரகடணம் தனி மனித சுதந்திரத்தையும் சமத்தவத்தையும் உரத்து உறுதியாக பறைசாற்றியது. எந்தக் காரணத்தை கொண்டும் மனிதன் மனிதனுக்கு அடிமையாகக் கூடாது என்ற கட்டளையை தந்தது. ஐரோப்பாவில் 1789 ல் நடை பெற்ற பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னால் வெளியிடப்பட்ட (னநஉடயசயவழை ழக வாந சiபாவள ழக அயn ) மனித உரிமைப்; பிரகடணத்தை விட இப்பிரகடணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது வே மனித வரலாற்றில் நிலைத்த தாக்கத்தை செலுத்தியத்திய பிரகடணமாகும். பிரஞ்சு புரட்சியின் தொடக்க காலம் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருந்தது என்றாலும் அதன் கடைசி முடிவு நெப்பொலியன் என்ற சர்வாதிகாரியின் பிறப்பிலே தான் முடிந்தது. 1789 புரட்சியின் மூலம் 16 லூயியின் மன்னராட்சியை தூக்கி எறிந்த பிரான்ஸ் தேசம் 1804 ம் ஆண்டில் நெப்பொலியனை மன்னராக ஏற்றுக் கொண்டது. இந்தக் காரணத்தினாலேய வரலாற்றாசியர்கள் பலரும் பிரஞ்சுப் புரட்சி முழு வெற்றியடைந்ததாக கருத முடியாது என்று சொல்வதுண்டு.ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரகடணம் இன்று வரை சமூகத்தின் அனைத்து தளத்திலும் செயல்பாட்டில் இருக்கிறது. சுதந்திரம் என்ற உடன் பலரும் பிரஞ்சுப் புரட்சியையையும் அதன் பிரகடனங்களையும் மெச்சிப் பேசுவது பலருடைய வழக்கம். ஆனால் உன்மையில் பிரஞ்சுப் புரட்சிக்கும் அதற்கு முன்னதாக நிகழ்ந்த ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் கூட இஸ்லாமும் முஸ்லிம்களும் முக்கிய காரணிகளாக இருந்தார்கள். சிலுவைப் பேர்களின் போது ஐரோப்பிய வீரர்கள் முஸ்லிம்களின் நிலப்பகுதிக்குள் நுழைந்தார்கள். அங்கு பிரபுக்கள் குடியானவர்கள் என்ற பேதமின்றி முஸ்லிம்கள் வாழ்வதை கண்டார்கள். திருச்சபைகளின் ஆதிக்கமோ பிரபுக்களின் அதிகார வெறியாட்டமோ இல்லாத சமத்துவ சமுதாயத்தை அவர்கள் முஸ்லிம்களிடம் கண்டார்கள். இது ஐரோப்பிய வீரர்களின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. தங்கள் ஊருக்கு திரும்பிய அவர்கள் முஸ்லிம்களிடம் காணப்படுவது போன்ற சமத்துவ வாழ்வுக்காக போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவே ஐரோப்பிய மறுமலாச்சியாகவும் பிரஞ்சுப் புரட்சியாகவும் வெடித்தது.இந்தியாவில் சுதந்திரப் பொராட்ட காலத்தின் போது 1906 ஆண்டு பாலகங்காதர திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை முன்வைத்தார். அது இந்தியாவிலருந்த மற்றவர்களுக்கு புதிய கோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது புதியதல்ல. கி.பி. 7 ம் நூற்றாண்டிலேயே ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உலகுக்கு சுதந்திரம் மக்களது பிறப்புரிமை என்ற கருத்தை முன்வைத்து விட்டார்கள்.ஹஜ்ரத் (உமர்) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டான். உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்பொது உமர் (ரலி) அவர்கள் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். (இன்னமா லரபக இப்னுஹு பி ஸுல்தானி அபீஹி). அந்த வாலிபர் ஆளுநரை அடிக்கத் தயங்கினார். அப்படியானால் அது உன் இஷ்டம் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள். அவர்கiளுடைய தாய்மர்கள் அவர்களை சுதந்திர மனிதர்களாக பெற்றெடுத் திருக்கிறார்கள் (மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா) என்று கேட்டார்கள். இஸ்லாம் ஊட்டிய இத்தகைய சுதந்திர உணர்வு தான் அடிமை இந்தியாவில் விடுதலைக்காக போராடும்படி முஸ்லிம்களில் அனைத்து தரப்பினரையும் தூண்டியது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் ஏற்படுவற்கு முஸ்லிம்கள் முக்கியக்காரணம் என்றும் பலரும் சொல்வார்கள்.சரியாகச் சொல்வதானா
